முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: பார்லி., இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளி : திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      இந்தியா
Parliment 2023-07-26

Source: provided

புதுடெல்லி : நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் பாராளுமன்றம் வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

ஆலோசனை...

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்புவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இல்லத்தில் நேற்று முன்தினம் இன்டியா கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையின் முடிவில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர இன்டியா கூட்டணி சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

கோரிக்கை...

அதன்படி, நேற்று இரு அவைகளும் கூடியதும் இன்டியா கூட்டணி சார்பில் சபாநாயகர்களிடம் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான கோரிக்கை கொடுக்கப்பட்டது. மக்களவையை பொறுத்தவரை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கையை முன்வைத்தார். அதில், "நீட் தேர்வு முறைகேட்டால் பல லட்சம் மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, நீட் தேர்வு சர்ச்சை குறித்து இந்த அவையில் ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும்" என்றார் ராகுல்.

ஏற்க மறுப்பு... 

ஆனால், சபாநாயகர் ஓம் பிர்லா அந்தக் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்தார். இதனால், மக்களவையில் இன்டியா கூட்டணியினர் அமளியில் ஈடுபட்டனர். நீட் தேர்வு தொடர்பாக முழக்கங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைத்த சபாநாயகர் ஓம் பிர்லா, அடுத்த அமர்வுக்கு அதாவது திங்கள்கிழமை காலை 11 மணிக்கு அவையை ஒத்திவைத்தார். முன்னதாக, பகல் 12 மணிக்கு ஒரு முறை இதே காரணங்களால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவையில்...

இதேபோல் மாநிலங்களவையிலும் நீட் தேர்வு முறைகேடு விவகாரம் எதிரொலித்தது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பாஜக எம்.பி திரிவேதி விவாதத்தை தொடங்க இருந்தார். அப்போதும், மாநிலங்களவை தொடங்கியதும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மதியம் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடிய பின்னரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீட் குறித்து விவாதிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.  எதிர்க்கட்சிகளின் போராட்டத்தின்போது காங்கிரஸ் எம்பி பூலோ தேவி மயக்கமடைந்தார். அவரை பாராளுமன்ற வளாக மருத்துவர்கள் முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். 

வெளிநடப்பு...

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, பிஜூ ஜனதா தளம் கட்சி எம்பிக்கள் மத்திய அரசை கண்டித்த்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், "நீட் விவகாரத்தில் பிரதமர் மோடி இன்னும் மவுனம் காத்துவரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் இளைஞர்களின் நலன்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். என்றாலும் இதுபோன்ற தீவிரமான விஷயங்கள் குறித்து பேசும்போது பாராளுமன்றத்தில் மைக்குகளை ஆஃப் செய்து இளைஞர்களின் குரல்களை ஒடுக்கும் சதி நடந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 1 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 22 min ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து