முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கையில் பரபரப்பு: மஞ்சுவிரட்டு போட்டி தகராறில் அண்ணன், தம்பி படுகொலை

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      தமிழகம்
Suicide 2023 04 29

Source: provided

சிவகங்கை : மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அவிழ்த்து விடுவதில் நடந்த தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சிவகங்கையில் அண்ணன், தம்பி இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், கடந்த 22.6.2024 தேதி கல்லல் அருகே பணங்குடியில் நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில், மதுரை மாவட்டம், நாச்சிகுளத்தைச்சேர்ந்த ஆண்டிச்சாமி மகன்கள் ஜெயசூர்யா, சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்பொழுது அரண்மனை சிறுவயலைச்சேர்ந்த வல்லவன் மகன் ராஜேஷ்(19), சாத்தரசன்பட்டி சிவாஜி மகன் நவீன்(19), கிளுவச்சி முத்துமணி மகன் அஜய்(20) ஆகியோர்கள் மஞ்சுவிரட்டில் காளையை அவிழ்த்து விட்டனர்.

அந்த காளையை சிவகங்கை புதுப்பட்டி சக்தி மகன் மதன்(20) என்பவரின் நண்பர்கள் அந்த காளையை பிடித்துள்ளனர். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட விரோதத்துடன் இருந்த மதன் மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் ஞாயிற்றுக்கிழமை (30.6.2024) இரவு சுமார் 10.30 மணிக்கு இரு சக்கர வாகனங்களில் காளையார்கோவில் அருகே கொல்லங்குடி ஆலடி கண்மாய் வாய்க்கால் பகுதியில் உள்ள தைல மரக் காட்டுக்குள் மஞ்சுவிரட்டு காளையுடன் இருந்த ஜெயசூர்யா, சுபாஷ், நவீன், ராஜேஷ் உள்பட 5 நபர்களை, 8 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதில் அண்ணன், தம்பி ஜெயசூர்யா, சுபாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மற்ற 3 நபர்களையும் வெட்ட முற்படும் பொழுது அவர் தப்பியோடி விட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக உயிர் தப்பிய ராஜேஷ், நவீன், ஆகியோர் காளையார்கோவில் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்குச்சென்ற காளையார்கோவில் போலீஸார் இருவரது சடலங்களையும் உடற்கூராய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக காளையார்போலீஸார் வழக்குப்பதிந்து தப்பியோடிய கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை பிடித்த தகராறில் இரட்டைக்கொலை நடந்தது அப்பகுதி மக்களையும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து