எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வில் தவறு செய்தவர்கள் கண்டறியப்படாவிட்டால் தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மனுக்கள் தாக்கல்...
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்டன. நீட் தேர்வில் 1.563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு. வினாத்தாள் விற்பனை. 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.
செல்போன் மூலம்...
இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும். சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வு வினாத்தாள் செல்போன் மூலம் கசிந்துள்ளது. பள்ளிகளில் பிரிண்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே 4ம் தேதி டெலிகிராம் சேனலில் நீட் வினாத்தாள், அதன் விடைகளுடனான வீடியோ வெளியிடப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒருநாள் அவகாசம்...
இதையடுத்து பேசிய நீதிபதி மத்திய அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அவர் எழுப்பிய கேள்விகள்:- சிபிஐ விசாரணைக்கு பிறகு எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? நீட் தேர்வின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் அறிய விரும்புகிறோம் நீட் வினாத்தாள் கசிவு இல்லை என்பது தேசிய தேர்வு முகமையின் நிலைப்பாடு. நீட் தேர்வு முறைகேடுகளை கண்டறிய சைபர் குற்ற தடவியல் தரவு ஆய்வை கொண்டு அறிய முடியாதா? நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்களை மட்டும் கண்டறிந்தால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தலாமா? நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொள்கிறீர்களா? இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொள்ளட்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
ஒரு இடத்தில் மட்டும்...
அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொண்டது. ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் கசிவால் பலனடைந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. மேலும் வெளிநாட்டில் தேர்வெழுதுவோருக்கு நீட் வினாத்தாள் எப்படி அனுப்பி வைக்கப்படுகிறது என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, தூதரங்கள் வாயிலாக நீட் வினாத்தாள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என பதில் அளித்தது. சமூக உடகங்களில் நீட் வினாத்தாள் கசிந்தது உண்மை என்றால் அது மிகப்பெரியதாக இருக்க வாய்ப்பு உள்ளது என நீதிபதி கூறினார்.
பதில் தாக்கல் செய்ய...
தொடர்ந்து நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்பிக்க மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கை வியாழக்கிழமைக்கு (அதாவது 11-ம் தேதிக்கு) ஒத்திவைத்தார். மேலும் வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ, தேசிய தேர்வு முகமை வரும் 10ம் தேதிக்குள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும். இதில் தவறிழைத்தவர்கள் கண்டறியப்பட்டால் 23 லட்சம் மாணவர்களுக்கு மறுதேர்வு தேவையில்லை. ஆனால் தவறிழைத்தவர்கள் கண்டறியப்படாவிடில் மறுதேர்வு நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார்.
நீதிபதியின் அடுக்கடுக்கான கேள்விகள்
1) சி.பி.ஐ. விசாரணைக்கு பிறகு எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?
2) நீட் தேர்வின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் அறிய விரும்புகிறோம்?
3) முறைகேடுகளை சைபர் குற்ற தடவியல் தரவு ஆய்வை கொண்டு அறிய முடியாதா?
4) முறைகேடு செய்தவர்களை கண்டறிந்தால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தலாமா?
5) நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொள்கிறீர்களா?
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கடாய் பன்னீர்2 days 12 hours ago |
சூப்பர் ஸ்நாக்ஸ்5 days 12 hours ago |
கிரிஸ்பி பிரட் எக் ரோல்1 week 2 days ago |
-
நிபா வைரஸ் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்க வேண்டும் : அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
22 Jul 2024சென்னை : நிபா வைரஸ் தொற்று நோய் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான விசாரணை ஐகோர்ட்டில் தள்ளிவைப்பு
22 Jul 2024சென்னை : முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.
-
இன்று முதல் ஆக.14 வரை 55 மின்சார ரயில்கள் ரத்து : தெற்கு ரெயில்வே அறிவிப்பு
22 Jul 2024சென்னை : தெற்கு ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தினந்தோறும் வெளியாகும் புது தகவல்களால் பரபரப்பு
22 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் கைது செய்வோம்
-
மக்களவையில் நீட் முறைகேடு தொடர்பாக முதல் நாளிலேயே எதிர்க்கட்சியினர் மத்திய அரசு இடைய கடும் விவாதம்
22 Jul 2024புதுடெல்லி, பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதும் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.2.61 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கம் பறிமுதல்
22 Jul 2024சென்னை : சென்னை விமான நிலையத்தில் ரூ.2.61 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
-
இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை
22 Jul 2024காசா : இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-07-2024.
22 Jul 2024 -
அடுத்த மாதம் வெளியாகிறது 'ஜமா'
22 Jul 2024பிக்சர் பாக்ஸ் கம்பெனி, ‘கூழாங்கல்’ தயாரிப்பாளர்களின் 'ஜமா'
-
அமெரிக்கா: இந்திய மாணவி பலி
22 Jul 2024வாஷிங்டன் : ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தனலி பகுதியை சேர்ந்தவர் ஜித்தி ஹரிகா (வயது 25).
-
அமெரிக்கா: நைட் கிளப்பில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி
22 Jul 2024அமெரிக்கா : அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள நைட் கிளப் ஒன்றில் மர்ம நண்பர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
-
விடுதலை-2 பர்ஸ்ட் லுக் வெளியீடு
22 Jul 2024ஆர்.எஸ்.
-
வங்கதேசத்திலிருந்து மேலும் 77 தமிழக மாணவர்கள் சென்னை திரும்பினர்
22 Jul 2024சென்னை : முதல் கட்டமாக 49 மாணவர்கள் வங்கதேசத்திலிருந்து தமிழகம் அழைத்துவரப்பட்ட நிலையில் மேலும் 77 மாணவர்கள் சென்னை திரும்பினர்.
-
பார்லி.யை மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்துவோம்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை
22 Jul 2024புதுடெல்லி, நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாராளுமன்றத்தை பயன்படுத்துவோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாராளுமன்ற கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த அனைவரின் ஒத்த
-
நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்
22 Jul 2024கரூர் : கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை, அ.தி.மு.க.
-
கன்வார் யாத்திரை விவகாரம்: எதிர்க்கட்சிகளின் தீர்மான நோட்டீஸ்கள் நிராகரிப்பு
22 Jul 2024புதுடெல்லி : கன்வார் யாத்திரை விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் தீர்மான நோட்டீஸ்கள் மாநிலங்களவையில் நிராகரிப்பட்டது.
-
இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது : தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல்
22 Jul 2024புதுடெல்லி : இந்திய குடும்பங்கள் பணக்கஷ்டத்தில் இல்லை என்று தெரிவித்துள்ள இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் , இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளதாக அ
-
தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை : மத்திய அமைச்சர் தகவல்
22 Jul 2024புதுடெல்லி : தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை மத்திய அரசு மேம்படுத்த பாடுபட்டு வருகிறது என்று மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்து
-
ஜோ பைடன், மோடி உள்ளிட்ட தலைவர்களின் ஏ.ஐ.பேஷன் ஷோ வீடியோ வெளியிட்ட எலான் மஸ்க்
22 Jul 2024நியூயார்க் : பைடன், மோடி உள்ளிட்ட தலைவர்களின் ஏ.ஐ. பேஷன் ஷோ வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
Soapera காபி டேபிள் புத்தகத்தை வெளியிட்ட இளையராஜா
22 Jul 2024சென்னை: 17 ஜுலை 2024: நம் நாட்டின் பொக்கிஷமான ஆயுர்வேதமும், இசையும் கொண்டிருக்கும் மகத்தான குணமாக்கும் ஆற்றலை ஒருங்கிணைக்கும் வகையில் இந்தியாவின் முன்னணி ஆயுர்வேத தனிநப
-
அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு ஜோ பைடன் ஆதரவு
22 Jul 2024வாஷிங்டன் : ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
உணவு பொருட்கள் விலை உயர்வுக்கு காரணம் என்ன? பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
22 Jul 2024புதுடெல்லி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
-
தெருவில் வசித்த பெண்ணுக்கு புதிய வீடு பரிசளித்த பிரபலம்
22 Jul 2024அமெரிக்கா : ஏழைகளுக்கு உணவு, உடை கொடுத்து பலரும் உதவி செய்வார்கள்.
-
செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 24-க்கு விசாரணையை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
22 Jul 2024சென்னை : முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட் ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
-
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் நியமனம்
22 Jul 2024சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நிலையில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.