எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்திற்குள் போதைப்பொருட்கள் வருவதை தடுக்க அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று தென் மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இயக்குனர்கள்...
தென் மாநில காவல்துறை இயக்குனர்கள், படைத்தலைவர்கள் பங்கேற்ற தென் மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு மாநாடு சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, அந்தமான் ஆகிய மாநில காவல்துறை இயக்குனர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஒருங்கிணைந்து...
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, சட்டம் - ஒழுங்கு, பாதுகாப்பு, நீர் மேலாண்மை போன்ற பல்வேறு விவகாரங்களில் தென் மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மாநிலங்களுக்கு இடையேயான குற்ற செயல்கள், இணைய வழி குற்றங்கள் போன்ற தீவிர குற்றங்களில் இருந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை அடைய நாம் இங்கு கூடியுள்ளோம். இத்தகைய குற்றங்களை எதிர்கொள்வதில் தமிழக காவல்துறை பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது.
சொத்துகள் பறிமுதல்...
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தை தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழக காவல்துறையின் தொடர் முயற்சிகளின் பலனாக மாநிலத்தில் கஞ்சா பயிரிடுவது தடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்தவர்களுக்கு சிறை தண்டனை மட்டுமின்றி, அவர்கள் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருளை ஒழிக்க மாநிலங்களுக்கு இடையே ஒன்றிணைந்த முயற்சி தேவை. தமிழகத்திற்குள் போதைப்பொருட்கள் வருவதை தடுக்க அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம். உயர் அதிகாரிகளுடன் நடத்தப்படும் தொடர் ஆய்வு கூட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க சரியான பாதையில் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரவும் வதந்திகளால்...
இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, சமூக வலைதளங்களில் பரப்பப்படக் கூடிய வதந்திகள் பெரும் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது. அவற்றின் மூலம் பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் செயல்களை நாம் பார்க்க முடியும். ஏன், தமிழகத்தில் கூட அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு பொது அமைதியை சீர்குலைக்க முயன்றதை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல மாநிலங்களில் இருந்து வதந்தி பரப்பக் கூடியவர்களைத் தேடி கண்டுபிடித்து, அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது.
கண்காணிப்புடன்...
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியே, தமிழ்நாடு அமைதியான மாநிலம். அங்கு அமைதியின்மையை உருவாக்க ஏதாவது வதந்தியைப் பரப்புவீர்களா என்று யூடியூபர் ஒருவரது வழக்கில், சமூக வலைதளங்களின் பாதிப்பு பற்றி கடுமையாக சாடியிருந்ததை, இந்த நேரத்தில் நான் குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே, சமூக வலைதளங்களில் வரக் கூடிய வதந்திகளைப் பற்றியும், நாம் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நம் மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான ஆலோசனைகளை இந்தக் கூட்டத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
சட்ட நடவடிக்கை...
தமிழ்நாடு காவல்துறையானது, அனைத்து தளங்களிலும் சட்ட அமலாக்கத்துக்கு, குறிப்பாக போதைப்பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கு இடையே செயல்படக்கூடிய குற்றவாளிக் கும்பல்கள், மற்றும் கணினிசார் குற்றங்கள், சமூக வலைதள வதந்திகள் ஆகியவற்றின் மீதான தீவிர சட்ட நடவடிக்கைகளில், மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை உறுதிப்படுத்துகிற வகையில், மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய பொறுப்பை ஏற்றுள்ளது.
உறுதி செய்யலாம்...
அத்தகைய பலமான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் மூலம் சட்டம் ஒழுங்கு, பொது அமைதி, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் சமாளித்து நம் குடிமக்கள் அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய நாம் கடமையாற்றுவோம். ஒருங்கிணைந்து செயலாற்றுவோம். போதைப் பொருட்களாக இருந்தாலும், குற்றங்களாக இருந்தாலும், இணையவழி குற்றங்களாக இருந்தாலும், அதை தடுக்க நமக்கு ஒருங்கிணைந்த முயற்சிதான் தேவைப்படுகிறது. இவ்வாறு நாம் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம், குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களையும் காப்பதோடு அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான ஒரு எதிர்காலத்தையும், நம் மாநிலங்களின் முன்னேற்றத்தையும் உறுதி செய்யலாம். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 weeks 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
52,000 பேர் ஆன்லைனில் முன்பதிவு: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு : தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பு
19 Oct 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-10-2024.
19 Oct 2024 -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி : சென்னை முதன்மை அமர்வு உத்தரவு
19 Oct 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப் பணி : துணை முதல்வர் உதயநிதி தகவல்
19 Oct 2024தி.மலை : விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
-
இலங்கை கடற்படை கைது செய்த 17 தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்
19 Oct 2024சென்னை : இலங்கை கடற்படை கைது செய்த 17 இந்திய மீனவர்கள் இந்தியா திரும்பி விட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
-
இந்திய தூதகரத்தை மூட வலியுறுத்தி கனடாவில் சீக்கிய அமைப்புகள் பேரணி
19 Oct 2024ஒட்டாவா : இந்திய தூதரகத்தை மூட வலியுறுத்தி கனடாவில் வான்கோவெரிலுள்ள இந்திய தூதரக அலுவலகம் முன் சீக்கிய அமைப்புகள் பேரணியாக திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு
19 Oct 2024கடலூர் : மழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
-
அடுத்த தலைவரை தேடும் பணியில் ஹமாஸ் தீவிரம் : இஸ்ரேலுக்கு எதிராக போரை தொடர உறுதி
19 Oct 2024காசா : இஸ்ரேலுக்கு எதிரான போரை தொடர அடுத்த தலைவரை தேடும் பணியில் ஹமாஸ் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.
-
தீபாவளி பண்டிகை: புதுவையில் 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
19 Oct 2024புதுச்சேரி : தீபாவளி பண்டிகையை ஒட்டி புதுச்சேரியில் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்றின் தரம்
19 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அரசு மருத்துவமனைகளுக்கு விரைவில் பிசியோதெரபிஸ்டுகள் 47 பேர் தேர்வு
19 Oct 2024சென்னை : அரசு மருத்துவமனைகளுக்கு விரைவில் 47 பிசியோதெரபிஸ்டுகள் நேரடி நியமன முறையில் தேர்வு செய்யப்பட இருப்பதாக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
-
கொல்கத்தாவில் நீடிக்கும் போராட்டம்: மாநில அரசுக்கு நாளை வரை ஜூனியர் டாக்டர்கள் கெடு
19 Oct 2024கொல்கத்தா : கொல்கத்தாவில் 15-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்கள் நாளை 21-ம் தேதிக்குள் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு போரா
-
பெங்களூருவில் இன்று கன்னடர் - தமிழர் மாநாடு
19 Oct 2024பெங்களூரு : பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடு இன்று நடைபெறுகிறது.
-
தமிழக மீனவர்கள் கைதை தடுக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
19 Oct 2024மதுரை : இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
19 Oct 2024புதுடெல்லி : நேற்று காலை முதல் பல்வேறு இந்திய விமான நிறுவனங்களின் 20-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர காலக்கெடு நிர்ணயிப்பது கடினம் : ரஷ்ய அதிபர் புடின் சொல்கிறார்
19 Oct 2024மாஸ்கோ : உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காலக்கெடுவை அமைப்பது கடினமாக இருக்கும் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் பிரதமர் இல்லத்தின் மீது ஹிஸ்புல்லா டிரோன் தாக்குதல்
19 Oct 2024ஜெருசலேம் : இஸ்ரேல் பிரதமர் இல்லத்தின் மீது ஹிஸ்புல்லா அமைப்பு டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
மெக்சிகோ நிதி அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
19 Oct 2024மெக்சிகோ சிட்டி : அரசு முறை பயணமாக மெக்சிகோ சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டு நிதியமைச்சர் ரமிர்ஸ் டி லா ஒ-வை சந்தித்து பேசினார்.
-
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் வலைதள வதந்திகள் பெரும் சவால் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
19 Oct 2024சென்னை : இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, சமூக வலைதளங்களில் பரப்பப்படக் கூடிய வதந்திகள் பெரும் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது என்று சென்னையில் நடந்த&nbs
-
தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு
19 Oct 2024சென்னை : தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நவ.1-ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு உ
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் பலி
19 Oct 2024காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 33 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
-
வயநாடு தொகுதி இடைத்தேர்தல்: 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி
19 Oct 2024திருவனந்தபுரம் : வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி தனது வேட்பு மனுவை வரும் 23-ம் தேதி தாக்கல் செய்கிறார்.
-
அம்பாசமுத்திரத்தில் இன்று அ.தி.மு.க. 53-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் : எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
19 Oct 2024நெல்லை : அ.தி.மு.க. 53-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ.
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
19 Oct 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
25-ம் தேதி முதல் நவ. 5-ம் தேதி வரை தீபாவளி பண்டிகைக்காக 40 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டம்
19 Oct 2024சென்னை : வரும் தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் வசதிக்காக வருகிற 25-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்களை இயக்க தெற