முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்குள் போதைப்பொருட்கள் வருவதை தடுக்க அண்டை மாநிலங்களின்ஒத்துழைப்பு அவசியம் : தென் மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024      தமிழகம்
CM-1 2024-10-19

Source: provided

சென்னை : தமிழகத்திற்குள் போதைப்பொருட்கள் வருவதை தடுக்க அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று தென் மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இயக்குனர்கள்... 

தென் மாநில காவல்துறை இயக்குனர்கள், படைத்தலைவர்கள் பங்கேற்ற தென் மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு மாநாடு சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, அந்தமான் ஆகிய மாநில காவல்துறை இயக்குனர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஒருங்கிணைந்து... 

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, சட்டம் - ஒழுங்கு, பாதுகாப்பு, நீர் மேலாண்மை போன்ற பல்வேறு விவகாரங்களில் தென் மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மாநிலங்களுக்கு இடையேயான குற்ற செயல்கள், இணைய வழி குற்றங்கள் போன்ற தீவிர குற்றங்களில் இருந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை அடைய நாம் இங்கு கூடியுள்ளோம். இத்தகைய குற்றங்களை எதிர்கொள்வதில் தமிழக காவல்துறை பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

சொத்துகள் பறிமுதல்...

தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தை தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழக காவல்துறையின் தொடர் முயற்சிகளின் பலனாக மாநிலத்தில் கஞ்சா பயிரிடுவது தடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்தவர்களுக்கு சிறை தண்டனை மட்டுமின்றி, அவர்கள் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருளை ஒழிக்க மாநிலங்களுக்கு இடையே ஒன்றிணைந்த முயற்சி தேவை. தமிழகத்திற்குள் போதைப்பொருட்கள் வருவதை தடுக்க அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம். உயர் அதிகாரிகளுடன் நடத்தப்படும் தொடர் ஆய்வு கூட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க சரியான பாதையில் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரவும் வதந்திகளால்... 

இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, சமூக வலைதளங்களில் பரப்பப்படக் கூடிய வதந்திகள் பெரும் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது. அவற்றின் மூலம் பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் செயல்களை நாம் பார்க்க முடியும். ஏன், தமிழகத்தில் கூட அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு பொது அமைதியை சீர்குலைக்க முயன்றதை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல மாநிலங்களில் இருந்து வதந்தி பரப்பக் கூடியவர்களைத் தேடி கண்டுபிடித்து, அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது.

கண்காணிப்புடன்...

சுப்ரீம் கோர்ட்டின்  தலைமை நீதிபதியே, தமிழ்நாடு அமைதியான மாநிலம். அங்கு அமைதியின்மையை உருவாக்க ஏதாவது வதந்தியைப் பரப்புவீர்களா என்று யூடியூபர் ஒருவரது வழக்கில், சமூக வலைதளங்களின் பாதிப்பு பற்றி கடுமையாக சாடியிருந்ததை, இந்த நேரத்தில் நான் குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே, சமூக வலைதளங்களில் வரக் கூடிய வதந்திகளைப் பற்றியும், நாம் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நம் மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான ஆலோசனைகளை இந்தக் கூட்டத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். 

சட்ட நடவடிக்கை...

தமிழ்நாடு காவல்துறையானது, அனைத்து தளங்களிலும் சட்ட அமலாக்கத்துக்கு, குறிப்பாக போதைப்பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கு இடையே செயல்படக்கூடிய குற்றவாளிக் கும்பல்கள், மற்றும் கணினிசார் குற்றங்கள், சமூக வலைதள வதந்திகள் ஆகியவற்றின் மீதான தீவிர சட்ட நடவடிக்கைகளில், மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை உறுதிப்படுத்துகிற வகையில், மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய பொறுப்பை ஏற்றுள்ளது.

உறுதி செய்யலாம்...

அத்தகைய பலமான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் மூலம் சட்டம் ஒழுங்கு, பொது அமைதி, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் சமாளித்து நம் குடிமக்கள் அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய நாம் கடமையாற்றுவோம். ஒருங்கிணைந்து செயலாற்றுவோம். போதைப் பொருட்களாக இருந்தாலும், குற்றங்களாக இருந்தாலும், இணையவழி குற்றங்களாக இருந்தாலும், அதை தடுக்க நமக்கு ஒருங்கிணைந்த முயற்சிதான் தேவைப்படுகிறது. இவ்வாறு நாம் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம், குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களையும் காப்பதோடு அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான ஒரு எதிர்காலத்தையும், நம் மாநிலங்களின் முன்னேற்றத்தையும் உறுதி செய்யலாம். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து