முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படை கைது செய்த 17 தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024      தமிழகம்
Fishermen 2024-03-29

Source: provided

சென்னை : இலங்கை கடற்படை கைது செய்த 17 இந்திய மீனவர்கள் இந்தியா திரும்பி விட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக  மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். 

இந்த நிலையில், 17  மீனவர்களையும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இரு நாட்டினரும் கவனக்குறைவாக கடல் எல்லையை மீறுவதாக கூறி, இருநாட்டு மீனவர்களும் அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள். குறிப்பாக, இலங்கை கடற்பரப்பில் நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடுகூட சில சமயங்களில் இலங்கை கடற்பை துப்பாக்கிச்சூம் நடத்துகிறது.

இலங்கை கடற்படையின் அதிகாரபூர்வ வெளியீட்டின்படி, நடப்பாண்டில் மட்டும் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களின் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து