எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறுகிறது நடிகர் விஜய் கட்சி த.வெ.க.வின் முதல் அரசியல் மாநாடு. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ள நிலையில், மாநாட்டில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அரசியல் கட்சி...
திரையுலக உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி, முதல் மாநாட்டை அறிவித்துள்ளார். அதன்படி, அந்த மாநாடு கொள்கை விளக்கத் திருவிழா என்று குறிப்பிட்டு பிரமாண்டமாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. விஜய் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப்போகிறார் என்று பலரும் கேள்விகளை அவரை நோக்கி வீசி வந்த சூழலில், மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் இடம் பெற்றுள்ளது.
100 அடி கொடிக்கம்பம்...
இதில் பெண்களுக்கு என்று முதல் முறையாக தனி அங்கீகாரத்தை இந்த மாநாடு அளித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது. மேலும் மேடையின் வலதுபுறம் தமிழ் அன்னை, சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் விஜய் நிற்பது போன்ற கட்-அவுட்களும் மாநாட்டு திடலில் கம்பீரமாக காட்சி தருகின்றன. மாநாட்டு திடலில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நேற்று முன்தினம் காலை நடப்பட்டது. ராட்சத கிரேன் மூலமாக, தொழிலாளர்கள் இதை அங்கு நிறுவினர்.
10 நிமிடங்கள் ஆகும்...
இந்த கம்பத்தில் 20 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட கொடி பறக்க விடப்படுகிறது. கயிறு வைத்து இழுத்தும், ரிமோட் மூலமாகவும் இந்த கம்பத்தில் கொடியை ஏற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது விஜய், ரிமோட் மூலம் கொடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொடியேற்றினாலே, அந்த கொடி உச்சத்தை தொடுவதற்கு குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும். இடி தாங்கி வசதியுடன் இந்த கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
700 கேமராக்கள்...
மாநாட்டில் அதிகளவு தொண்டர்கள் கூடுவதால் தொழில்நுட்ப சாதனங்கள் இயங்குவதற்கு ஏற்ற வகையில் தற்காலிக செல்போன் டவர் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, வெகுதொலைவில் இருந்து மாநாட்டை பார்க்கும் வகையில் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கும் பணி, 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 350 நடமாடும் கழிவறைகள் அமைப்பது என்று அனைத்து வித பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நேற்று மாலையுடன் அத்தனை பணிகளும் முடிக்கப்பட்டன.
மாலை 4 மணிக்கு...
இதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக மாநாட்டு மேடைக்கு வரும் விஜய் அங்கிருந்தபடி, ரிமோட் மூலமாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்க உள்ளார். கொடியேற்றிய பின், மாநாட்டு மேடையில் இருந்து தொண்டர்களை சந்திக்க, அங்கு சுமார் 600 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள 'ரேம்ப்'(நடைபாதை) மீது நடிகர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்திய பிறகே மாநாட்டு மேடைக்கு வர உள்ளார்.
கலை நிகழ்ச்சிகள்...
மாநாட்டின் தொடக்கமாக பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும், மாநாட்டுக்காக நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் மாநாட்டு பணிகளுக்கு உதவி செய்தவர்களுக்கு விஜய் சால்வை அணிவித்து கவுரவிக்கிறார். அதன் பிறகு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் பேச உள்ளனர். இவர்கள் பேசி முடித்ததும் மாநாட்டின் நிறைவாக கட்சியின் தலைவர் நடிகர் விஜய், அங்கு திரண்டு இருக்கும் தொண்டர்கள் மத்தியில் தனது அரசியல் பேச்சை பேச உள்ளார்.
வரவேற்பு பதாகைகள்...
மாநாட்டுக்கு விஜய்யை வரவேற்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் வாழ்த்து பதாகைகளை வழிநெடுக வைத்துள்ளனர். குறிப்பாக சென்னை-திருச்சி மார்க்கத்தில் வி.சாலை வரைக்கும் சாலை முழுவதும் வரவேற்பு பதாகைகள் அதிகளவில் காணப்படுகிறது. மேலும், வி.சாலை பகுதியே எங்கும் மஞ்சள், சிவப்பு கொடியுமாக காட்சி தந்து வண்ணமயமாக திகழ்ந்து வருகிறது. இதற்கிடையே மாநாட்டு பாதுகாப்பு பணிகள் தொடர்பாக போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
நடிகர் விஜய் ரசிகர்கள்....
இதற்கு வடக்கு மண்டல ஐ.ஜி.அஷ்ராகார்க் தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மித்தல், விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் என்று போலீஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இன்று மாநாடு நடைபெற உள்ளநிலையில் விஜய் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்நோக்கி உள்ளனர். டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தமிழக வெற்றிக் கழகம், தளபதி விஜய் என்ற ஹாஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி: மேட்டூர் அணை நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்தது
26 Oct 2024சேலம் : நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 33 ஆயிரத்து 148 கனஅடியாக இருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2024.
26 Oct 2024 -
சூடானில் துணை ராணுவ படையினர் நடத்திய தாக்குதலில் 50 பேர் பலி
26 Oct 2024கார்டோம் : சூடானில் துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
ஒபாமாவுக்கு நோபல் பரிசு: டொனால்டு டிரம்ப் விமர்சனம்
26 Oct 2024வாஷிங்டன் : ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது குறித்து டிரம்ப் விமர்சித்துள்ளார்.
-
ஈரான் மீதான தாக்குதலை முடித்து விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு
26 Oct 2024டெல் அவிவ் : ஈரான் மீது நேற்று காலை துல்லிய தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்து விட்டதாக அறிவித்துள்ளது.
-
கார் - லாரி நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
26 Oct 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கார் -லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.
-
சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா
26 Oct 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
டெல்லியில் சலூன் கடைக்காரரின் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி : டுவிட்டரில் மத்திய அரசு மீது சாடல்
26 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் சலூன் கடைக்காரரின் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி அதை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலாவை முந்துகிறார் டிரம்ப் : புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
26 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசை விட, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்பிற்
-
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக எம்.எஸ்.தோனி நியமனம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
26 Oct 2024ராஞ்சி : ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளதாக ஜார்கண்ட் தேர்தல் ஆணைய அதிகாரி கே.ரவிக
-
தீபாவளியை முன்னிட்டு தனியார் பஸ்களை இயக்கும் முடிவை அரசு கைவிட ஓ.பி.எஸ். கோரிக்கை
26 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்
-
விழுப்புரம், விக்கிரவாண்டியில் இன்று நடைபெறுகிறது: நடிகர் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு
26 Oct 2024விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறுகிறது நடிகர் விஜய் கட்சி த.வெ.க.வின் முதல் அரசியல் மாநாடு.
-
காஷ்மீரில் வாகன விபத்து: இந்திய ராணுவ வீரர் பலி
26 Oct 2024ஸ்ரீநகர், காஷ்மீரில் வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
-
எல்லோரும் எலான் மஸ்க்கை தோற்கடிக்கவே விரும்புகின்றனர் : இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு
26 Oct 2024புதுடெல்லி : 'எலான் மஸ்க் ஒரு அற்புத மனிதர். எல்லோரும் எலான் மஸ்க்கை தோற்கடிக்கவே விரும்புகின்றனர் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஈரான் வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு
26 Oct 2024தெஹ்ரான் : இஸ்ரேலின் வான்வழி தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ள நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்ததாகவும் ஈரான் தெரிவித
-
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்க முயற்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
26 Oct 2024சென்னை : சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டத்துக்கான பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
-
மதுரையில் கனமழை பாதிப்பு: மீட்பு நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் ஆலோசனை
26 Oct 2024சென்னை : மதுரையில் கனமழை பாதிப்பை அடுத்து மழையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டா
-
மகராஷ்டிர தேர்தல்: 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
26 Oct 2024மும்பை, மகராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தமது இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.
-
கேரளாவில் இன்று கனமழை பெய்யும்: 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
26 Oct 2024திருவனந்தபுரம் : கேரளாவில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை மையம் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
-
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கோரிக்கை
26 Oct 2024சென்னை, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசின் ஆதரவை, மத்திய அமைச்சர் மனோகர் லாலிடம் நேரில் கேட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவ
-
மாநாட்டில் மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டுவோம் : த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
26 Oct 2024சென்னை : இன்று நடைபெறவுள்ள மாநாட்டில் மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம் என்று த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
-
மாநாட்டிற்கு வரும் த.வெ.க. தொண்டர்களுக்கு ஸ்னாக்ஸ்: விஜய் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு
26 Oct 2024சென்னை, விக்கிரவாண்டியில் இன்று நடக்கும் விஜய் கட்சி மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று மாநாட்டிற்கு வரும் தொண்டர்களு
-
நவ. 25-ம் தேதி தொடங்கி டிச.20-ம் தேதி வரை பார்லி. குளிர்கால கூட்ட தொடரை நடத்த திட்டம்: மத்திய அரசு தகவல்
26 Oct 2024புது டெல்லி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தகவல்
-
தொப்புள் கொடி விவகாரம்: யூடியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம்
26 Oct 2024சென்னை : தொப்புள் கொடி விவகாரம் தொடர்பாக ஊரக மருத்துவ நலப்பணிகள் இயக்ககத்துக்கு யூடியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
-
முன்னாள் பிரதமர் தேவகவுடாவுடன் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சந்திப்பு
26 Oct 2024பெங்களூரு, முன்னாள் பிரதமர் தேவகவுடாவை அவரது இல்லத்தில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சந்தித்துப் பேசினார்.