எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Us](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/16/Us.gif?itok=uudj98tw)
Source: provided
அமிர்தசரஸ் : அமெரிக்காவில் இருந்து 2-வது முறையாக நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கைகளில் விலங்கும், கால்களில் சங்கிலியும் பிணைக்கப்பட்டு இருந்தன என மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்ட பின்னர் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அமெரிக்காவின் எல்லை வழியே சட்டவிரோத வகையில், அந்நாட்டுக்குள் பலர் புலம்பெயர்ந்து வருகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார்.
இதன்படி, அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளாக இருந்த 104 இந்தியர்கள் கடந்த வாரம் ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது, அவர்களின் கைகளில் விலங்கு போட்டும் மற்றும் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டும் இருந்தன என குற்றச்சாட்டு எழுந்தது. இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 116 இந்தியர்கள் நேற்று முன்தினம் நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் வந்த விமானம், நள்ளிரவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இதில் பஞ்சாப்பை சேர்ந்த 65 பேர், அரியானாவை சேர்ந்த 33 பேர் அடங்குவர். 8 பேர் குஜராத் மாநிலத்தவர் ஆவர். கோவா, உத்தர பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த தலா 2 பேர், ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் இமாசல பிரதேச மாநிலத்தில் இருந்து தலா ஒருவரும் இதில் அடங்குவர்.
அவர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டனர் என மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுபற்றி அமிர்தசரஸ் நகருக்கு வந்தடைந்த தல்ஜீத் சிங் என்பவர் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, விமான பயணத்தின்போது இந்தியர்களின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தன. கைவிலங்கும் போடப்பட்டு இருந்தன என கூறியுள்ளார்.
பஞ்சாப்பின் ஹோஷியார்பூர் மாவட்டத்தின் குராலா கான் கிராமத்தில் வசித்து வருபவரான சிங், புலம்பெயர்வோர் பயன்படுத்தும் சட்டவிரோத வழியில் அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார். டிராவல் ஏஜென்ட் ஒருவர் தன்னை தவறாக வழிநடத்தி விட்டார் என சிங் கூறியுள்ளார். இவர்கள் அனைவரும் நேற்று காலை 4.30 மணியளவில் அவரவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
இஸ்ரேலிய பணய கைதிகளை ஒரேகட்டமாக விடுதலை செய்ய ஹமாஸ் அமைப்பு நிபந்தனை
19 Feb 2025காசா : காசா முனையில் இருந்து இஸ்ரேல் படையினர் முழுமையாக வெளியேற்றினால் இஸ்ரேலிய பணய கைதிகளை ஒரேகட்டமாக விடுதலை செய்வோம் என்று ஹமாஸ் அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.
-
இந்தியை புகட்டுவது கட்டாயமெனில், இந்தி மொழியை ஒழிப்பதும் கட்டாயம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
19 Feb 2025சென்னை, மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று வாசலில் பெண்கள் கோலமிட்டனர்.
-
இந்தியா வேகமாக வளர்ச்சியடையும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்
19 Feb 2025ஜெனீவா : தூய்மையான எரிசக்தி, தொழில்துறையை பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர்ச்சியடையும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உறுதி
19 Feb 2025பிரியாக்ராஜி, பிரயாக்ராஜில் உள்ள ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
-
ஆவின் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தல்
19 Feb 2025சென்னை : ஆவின் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அறிவுறுத்தினார்.
-
இந்தியாவுக்கு ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும்? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேள்வி
19 Feb 2025வாஷிங்டன், இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும்? அவர்கள் வசம் அதிக அளவில் பண பலம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
எதிர்பார்க்காமல் உழைக்கக்கூடியவர்: செங்கோட்டையனுக்கு ஓ.பி.எஸ். புகழாரம்
19 Feb 2025கோவை, கட்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் உழைக்கக் கூடிய உன்னதமானவர் செங்கோட்டையன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
-
வரும் 25-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடுகிறது
19 Feb 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 25-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடுகிறது.
-
ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை ஆப்கன் தூதரகம் குற்றச்சாட்டு
19 Feb 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள அனைத்து ஆப்கானிஸ்தான் அகதிகளையும் நாட்டிலிருந்து வெளியேற்ற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக ஆப்கானிஸ்தான் தூதரகம் குற்றம் குற்றம்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-02-2025.
19 Feb 2025 -
ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை: சுப்மன் கில் முதல் இடம்
19 Feb 2025துபாய் : சர்வதேச கிரிக்கெட் கமிட்டி (ICC) வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி இந்திய தொடக
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு: விடைத்தாள் முறைகேட்டை தடுக்க புதிய நடைமுறை
19 Feb 2025சென்னை : பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களில் முறைகேடு செய்வதை தடுக்கும் விதமாக தேர்வுகள் இயக்ககம் புதிய நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
மாணவர்கள் வருகை பதிவு: சென்னை ஐகோர்ட் கருத்து
19 Feb 2025சென்னை, வருகைப் பதிவு குறைவால் பல்கலைக்கழக தேர்வு எழுத அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து, கல்லூரி மாணவர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் ரூ.3 லட்சம் கோடிக்கு வர்த்தகம்
19 Feb 2025பிரயாக்ராஜி : மகா கும்பமேளாவில் இதுவரை ரூ. 3 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளதாக அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
-
சாம்பியன்ஸ் கோப்பை: சாதனை படைக்க கோலிக்கு வாய்ப்பு
19 Feb 2025துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சிவராத்திரி திருவிழா வரும் 26-ம் தேதி தேரோட்டம்
19 Feb 2025ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடித்திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறும்.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
19 Feb 2025சென்னை : தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11ம் தேதி ஒரு சவரன் ரூ.64,480-க்கு விற்பனையாகி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்
-
பாக். பெண்ணிடம் இந்திய கடற்படை ரகசியங்களை தெரிவித்த 2 பேர் கைது
19 Feb 2025கார்வார் : பாகிஸ்தான் பெண்ணிடம் இந்திய கடற்படை ரகசியங்களை தெரிவித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
அதிபரை கொல்ல சதித்திட்டம்: பிரேசில் முன்னாள் அதிபருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டு
19 Feb 2025பிரேசிலியா : அதிபரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக பிரேசில் முன்னாள் அதிபருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
அதானி மீதான ஊழல் புகார்: இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா
19 Feb 2025புதுடெல்லி, அதானி வழக்கில் அமெரிக்கா இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.
-
இந்தியர்களின் கண்ணியம் காக்க மத்திய பா.ஜ. அரசு தவறிவிட்டது: மல்லிகார்ஜூன கார்கே காட்டம்
19 Feb 2025புதுடெல்லி, சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அமெரிக்கா திருப்பிய அனுப்பி நாடு கடத்தியபோது அவர்களின் கண்ணியத்தை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று காங்கிர
-
இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி : செல்வப்பெருந்தகை கண்டனம்
19 Feb 2025சென்னை : தமிழ்நாட்டு மக்கள் மீது இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷியும் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பொறுப்பேற்பு
19 Feb 2025புதுடெல்லி, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரும், தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷியும் நேற்று (பிப்.19) பொறுப்பேற்றனர்.
-
மாற்று நில முறைகேடு வழக்கு: கர்நாடகா முதல்வரை விடுவித்து லோக் ஆயுக்தா கோர்ட் உத்தரவு
19 Feb 2025பெங்களூரு, மாற்று நில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி ஆகியோரை விடுவித்து லோக் ஆயுக்த நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.