எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தொகுதி மறுவரையறை தொடர்பான இன்றைய கூட்டத்தில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறோம் என்று வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
ஆலோசனைக் கூட்டம்...
தொகுதி மறுவரையறை பேசுபொருளாகியது ஏன்? என்று வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக இன்று மார்ச் 22-ம் தேதி சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் சூழலில் முதல்வர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
உரிமை சார்ந்த பிரச்சினை...
அந்த வீடியோவில் முதல்வர் பேசியிருப்பதாவது:- தொகுதி மறுவரையறை. இதுதான் இப்போது பேசுபொருளாக உள்ளது. தி.மு.க. ஏன் இதை பேசுபொருளாக்கியது என்றால், 2026-ல் தொகுதி மறுவரையறை கண்டிப்பாக நடந்தே ஆக வேண்டும். அப்போது, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டில் எம்.பி. தொகுதிகள் எண்ணிக்கை குறையும். தொகுதிகள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று உணர்ந்துதான் நாம் முதலில் குரல் எழுப்பியுள்ளோம். இது எம்.பி.க்கள் எண்ணிக்கை சார்ந்த பிரச்சினை மட்டும் கிடையாது. நமது மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சினை.
ஒருங்கிணைத்து போராட...
அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தினோம். பா.ஜ.க. தவிர மற்ற எல்லா கட்சியினரும் ஓரணியில் நின்று நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம். அதில் இந்த தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படக் கூடிய மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து போராட முடிவு செய்தோம். அதற்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய 7 மாநிலங்களின் முதல்வர்களுக்கும், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள எல்லா கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதங்களை ஒரு அமைச்சர் மற்றும் ஒரு எம்.பி. அடங்கிய குழுவினர் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர். நானே அவர்களுடன் தொலைபேசியிலும் பேசினேன். சிலர் நேரடியாக வர ஒப்புக் கொண்டனர். சிலர் ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளால் பிரதிநிதிகளை அனுப்பிவைப்பதாகக் கூறினர்.
அவமதிக்கும் செயல்...
இந்த முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 22) சென்னையில் நடக்கவிருக்கிறது. இப்போது இந்தக் கூட்டத்துக்கு அவசியம் எனனவென்று பலரும் கேட்கிறார்கள். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடும் நாம் அழைத்துள்ள மாநிலங்களும் பாதிக்கப்பட்டால் இந்திய நாட்டில் கூட்டாட்சிக்கான பொருள் இருக்காது. ஜனநாயகத்துக்கு மதிப்பு இருக்காது. பாராளுமன்றத்தில் நம் குரல்கள் நசுக்கப்படும். நம் குரல்களை நிலைநாட்ட முடியாது. இது இந்த மாநிலங்களை அவமதிக்கும் செயல். எனவே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பாக பங்களிப்பு செய்த மாநிலங்களுக்கு மத்திய அரசு தண்டனை கொடுக்கக் கூடாது. அதனால்தான் தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான கட்சிகளுடைய ஒருங்கிணைந்த சிந்தனையின்படி மற்ற மாநிலங்களை ஒருங்கிணைக்கும் இந்தக் கூட்டம் நடைபெறப் போகிறது.
இந்தியாவைக் காக்கும்....
இந்தக் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும். அதன் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் வெற்றியடையும். நம்முடைய இந்த முன்னெடுப்பு இந்தியாவைக் காக்கும். இன்றைய கூட்டம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க முதல் தொடக்கமாக இருக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம், மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்கள் கண்டன வாசகங்கள் அச்சிடப்பட்ட டி ஷர்ட் அணிந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பங்கேற்றனர். அவர்களின் போராட்டங்களால் அவை நடவடிக்கை முடங்கியது என்பது நினைவுகூரத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
தொகுதி மறுவரையறை ஆலோசனை கூட்டம்: பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பங்கேற்பு
21 Mar 2025சென்னை, சென்னையில் இன்று நடைபெறும் தொகுதி மறுவரையறை கூட்டத்தில் ஜனசேனை கட்சி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வாடிக்கையாளர் மடியில் கொட்டிய டீக்கு 431 கோடி ரூபாய் இழப்பீடு : ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு கோர்ட் உத்தரவு
21 Mar 2025வாஷிங்டன் : வாடிக்கையாளர் மடியில் கொட்டிய டீக்கு ரூ.431 கோடி இழப்பீடு வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்: தங்கமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
21 Mar 2025சென்னை, அ.தி.மு.க. ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள் என்று தங்கமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.
-
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம்: பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் வருகை
21 Mar 2025சென்னை, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங
-
திருச்சியில் ரூ. 235 கோடி மதிப்பில் 7 தளங்களுடன் 'கலைஞர் நூலகம்' முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 Mar 2025சென்னை, திருச்சியில் 7 தளங்களுடன் 235 கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞர் நூலக கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்கு; விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
21 Mar 2025புதுடெல்லி, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
தொகுதி மறுவரையறை தொடர்பான இன்றைய கூட்டத்தில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறோம்: வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
21 Mar 2025சென்னை, தொகுதி மறுவரையறை தொடர்பான இன்றைய கூட்டத்தில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறோம் என்று வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
-
நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
21 Mar 2025சென்னை : நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மத்திய அரசு ஊழியர் கைது
21 Mar 2025பெங்களூரு : பாகிஸ்தானில் உளவு பார்த்த மத்திய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
-
கன மழை எச்சரிக்கை எதிரொலி: இன்றைய ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டப்படி நடக்குமா?
21 Mar 2025கொல்கத்தா : கொல்கத்தாவில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், ஐ.பி.எல்.
-
பிரமாண்ட கலைநிகழ்சிகளுடன் ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று கோலாகலமாக ஆரம்பம்
21 Mar 2025கொல்கத்தா : ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் பிரமாண்ட கலைநிகழ்சிகளுடன் கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது.
-
சென்னை மாநகராட்சிக்கு ரூ.350 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை - மேயர் பிரியா
21 Mar 2025சென்னை : சென்னை மாநகராட்சிக்கு ரூ. 350 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை என்று மேயர் பிரியா குற்றச்சாட்டியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-03-2025.
22 Mar 2025 -
சென்னை சாலைக்கு அஸ்வின் பெயர் சூட்ட முடிவு
21 Mar 2025சென்னை : சென்னையில் உள்ள ஒரு சாலைக்கு இந்திய வீரர் அஸ்வின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுழற்பந்து ஜாம்பவான்...
-
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
21 Mar 2025சென்னை, தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
21 Mar 2025சுல்தான்பூர், ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
-
எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்: அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
21 Mar 2025சென்னை : எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தங்கம் தென்னரசுக்கு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
கர்நாடகாவில் எம்.எல்.ஏக்களின் சம்பளம் இரு மடங்காக உயர்வு
21 Mar 2025பெங்களூரு : கர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது.
-
இந்தியர்களுக்கு கைவிலங்கு: பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில்
21 Mar 2025டெல்லி, இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
-
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
21 Mar 2025சியோல் : வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
-
விதிமுறைகளில் பி.சி.சி.ஐ. மாற்றம்: ஐ.பி.எல். அணி கேப்டன்கள் நிம்மதி
21 Mar 2025மும்பை : விதிமுறையில் பி.சி.சி.ஐ. மாற்றம்: செய்துள்ளதை அடுத்து ஐ.பி.எல். அணி கேப்டன்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
-
கடினமான காலங்களில் விராட் நிறைய ஆதரவளித்தார்: முகமது சிராஜ் உருக்கம்
21 Mar 2025காந்திநகர் : கடின காலங்களில் விராட் கோலி தனக்கு ஆதரவு கொடுத்ததாக முகமது சிராஜ் கூறியுள்ளார்.
தீவிர பயிற்சி...
-
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டி: பாகிஸ்தான் அணி இமாலய வெற்றி
21 Mar 2025ஆக்லாந்து : நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
-
கேரள முதல்வர் சென்னை வருகை
21 Mar 2025சென்னை : சென்னையில் இன்று நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயில் விஜயன் நேற்று காலை சென்னை வந்தடைந்தார்.
-
சீமான் மீதான வழக்கில் ஆவணங்களை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு
21 Mar 2025சென்னை, சீமான் மீதான வழக்கில் ஆவணங்களை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.