எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : 100 நாள் வேலை திட்டம் மூலம் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.4,034 கோடி நிதியை மத்திய அரசு தராததற்கு தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், 09-03-2025 அன்று காலை, சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் நடைபெற்ற "தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்" கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போது, "தமிழ்நாடு மாநில நலன் குறித்து கேள்விகள் எழுப்பி, அதற்குரிய பதிலை மத்திய அரசிடம் பெற வேண்டும்" என்றும்; அத்துடன் 'மத்திய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காதது' குறித்து கேள்வி எழுப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
கழகத் தலைவர் அவர்களின் அறிவுரைக்கிணங்க, மத்திய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காதது குறித்து 25.03.2025 அன்று தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு எவ்வித பதிலையும் தராமலும் - தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் 29.3.2025 சனிக்கிழமை அன்று காலை அனைத்து கழக ஒன்றியங்களிலும் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மாவட்டக் கழக நிர்வாகிகள் - கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, மத்திய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் மத்திய பாசிச பா.ஜ.க. அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்த விவரத்தை தலைமைக் கழகத்திற்கு உடனே தெரிவித்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 hours ago |
-
தமிழகத்தில் எந்த திணிப்பையும் முதல்வர் அனுமதிக்க மாட்டார் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
28 Mar 2025சென்னை : இந்தி திணிப்பு மட்டுமல்ல, எந்த திணிப்பையும் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார்.
-
தாட்கோ புதிய தலைவர் நியமனம்
28 Mar 2025சென்னை : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின்(தாட்கோ) தலைவராக நா.இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
டோனி மின்னல் வேக ஸ்டம்பிங்
28 Mar 2025ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது.
-
மதவெறி மனநிலையை இந்தியாவால் மாற்ற முடியாது - மத்திய அமைச்சர்
28 Mar 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் மதவெறி மனநிலையை இந்தியாவால் மாற்ற முடியாது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்களுக்கு பொதுச்செயலாளர் கடும் எச்சரிக்கை
28 Mar 2025சென்னை : தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
25 ஆயிரம் கி.மீ. நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படும் : மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்
28 Mar 2025புதுடெல்லி : 25 ஆயிரம் கி.மீ. நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றப்படும் என்று நிதின் கட்காரி கூறியுள்ளார்.
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு: 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைவர்
28 Mar 2025புதுடெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைய உள்ளனர்.
-
உண்மைக்கு புறம்பாக பொய் செய்திகளை பரப்பி வருகிறார் : இ.பி.எஸ். மீது அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
28 Mar 2025சென்னை : உண்மைக்கு புறம்பாகவும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் பல்வேறு பொய் செய்திகளை எடப்பாடி பழனிசாமி பரப்பி வருவதாக ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
ஐதராபாத்துக்கு எதிராக அபார ஆட்டம்: ஆரஞ்சு, ஊதா நிற தொப்பியை வென்ற லக்னோ அணி வீரர்கள்
28 Mar 2025ஐதராபாத் : ஐதராபாத்துக்கு எதிராக அபார ஆட்டம்: ஆரஞ்சு, ஊதா நிற தொப்பியை லக்னோ வீரர்கள் வென்றனர்.
பந்துவீச்சை தேர்வு...
-
ஐதராபாத்துக்கு எதிராக வெற்றி பெற்றது நிம்மதி: ரிஷப் பண்ட்
28 Mar 2025ஐதராபாத் : ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.
5 விக்கெட்டை...
-
2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் மேலும் உயரும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Mar 2025சென்னை : 2 நாட்களுககு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பி.சி.சி.ஐ.-ன் ஒப்பந்தத்தில் மீண்டும் இடம்பெறுகிறார் முன்னணி வீரர் ஸ்ரேயாஸ்?
28 Mar 2025மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதில் முன்னணி வீரர் மீண்டும் இடம்பெறுகிறார்.
-
சூட்கேசில் பெண்ணின் உடல் சடலமாக மீட்பு : கணவர் தற்கொலை முயற்சி
28 Mar 2025பெங்களூரு : கர்நாடகாவில் சூட்கேசில் பெண்ணின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. கணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
-
தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் யுகாதி திருநாள் நல்வாழ்த்து
29 Mar 2025சென்னை : புத்தாண்டை வரவேற்கும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசைக் கண்டித்து கோவில்பட்டியில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
29 Mar 2025கோவில்பட்டி : கோவில்பட்டியில் மத்திய அரசை கண்டித்து கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
அடுத்த தமிழ்நாடு முதல்வர் யார்? - கருத்துக்கணிப்பில் முதலிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Mar 2025புதுடெல்லி : அடுத்த தமிழ்நாடு முதல்வர் யார் என்பது குறித்த கருத்துக்கணிப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்.
-
காவலர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கு: தேடப்பட்ட நபர் என்கவுன்ட்டர்
29 Mar 2025உசிலம்பட்டி : உசிலம்பட்டி காவலர் படுகொலை வழக்கில் குற்றவாளி பொன்வண்ணன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.
-
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலில் பக்தர்களின் கூட்டம்
29 Mar 2025திருநள்ளாறு : சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
-
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்; ஆப்கானிஸ்தானிலும் உணரப்பட்டது
29 Mar 2025காபூல் : மியான்மரில் மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானிலும் உணரப்பட்டது
-
நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு: மியான்மர் ராணுவ ஜெனரலிடம் விவரங்களை கேட்டறிந்த பிரதமர்
29 Mar 2025புதுடெல்லி : மியான்மர் ராணுவ ஜெனரலிடம் பிரதமர் மோடி பேசினார்.
-
மியான்மர் நிலநடுக்கம்: நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
29 Mar 2025டெல்லி, : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது.
-
ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் நாளை மாற்றம்
29 Mar 2025ஈரோடு : பராமரிப்பு பணிகள் காரணமாக ஈரோடு-செங்கோட்டை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
-
செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்
29 Mar 2025சென்னை : பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே அ.தி.மு.க .முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
-
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
29 Mar 2025சென்னை, அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிலைப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து
29 Mar 2025வாஷிங்டன், பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.