முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

சனிக்கிழமை, 29 மார்ச் 2025      இந்தியா
Jail

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநில முதல்வராக இருப்பவர் பஜன்லால் ஷர்மா. அவருக்கு நேற்று முன்தினம் காலை கொலை மிரட்டல் வந்தது. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் அழைப்பு மூலம் மர்மநபர் இந்த மிரட்டலை விடுத்தார்.

போலீஸ் விசாரணையில் சிறைச்சாலையில் இருந்தபடி ஒரு கைதி, இந்த மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறை கைதியின் பெயர் ஆதில் என்று கூறப்படுகிறது. மதுவுக்கு அடிமையானவர் என்றும், உளவியல் பிரச்சினையால் தன் கையை வெட்டிக் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சிறை கைதிக்கு எப்படி செல்போன் கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து