எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் தொடர் மின்வெட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும், அன்றாட வாழ்விற்கும் முக்கியமாக விளங்குவது மின்சாரம். மின்சாரம் இல்லையென்றால் பொருளாதார வளர்ச்சி இல்லை என்றிருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக சென்னையில் உள்ள வண்ணரப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், மந்தவெளி, ராஜா அண்ணாமலைபுரம், அடையாறு, வேளச்சேரி, கோட்டூர்புரம், தரமணி, ஆயிரம் விளக்கு, கிண்டி, விருகம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான ராமாபுரம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், தாம்பரம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, செம்மஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகளை மேற்கொள்பவர்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாயினர்.
மின் வெட்டு காரணமாக மின் சாதனங்களை உபயோகப்படுத்த முடியாமல் பெண்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டனர். இரவிலும் இந்த மின் தடை தொடர்ந்ததால் மக்கள் தூக்கமின்றி கடும் சிரமத்திற்கு ஆளாயினர். நோய்வாய்ப்பட்டவர்கள், முதியோர், குழந்தைகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடும் வெயில் அடிக்காத சூழ்நிலையில் மின்சாரத்தின் பயன் கடுமையாக குறைத்திருக்கும்போது, தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைக்கின்றபோது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து, மின்சார வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டால், மின்மாற்றிகள் சரியில்லை. மின் சாதனங்கள் பழுதடைந்துள்ளன என்று கூறுகிறார்கள்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்த நிலையில், மின்மாற்றிகள் சரியில்லை, மின் சாதனங்கள் பழுதடைந்துள்ளன என்று கூறுவது ஏற்புடையதல்ல. மின்சாரத்திலிருந்து வரும் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், மின் கட்டமைப்பை தி.மு.க. அரசு மேற்கொள்ளாதது கடும் கண்டனத்திற்குரியது.
இது தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. மின்சாரத்தின் முக்கியத்துவத்தையும், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, பழுதடைந்துள்ள மின்மாற்றிகள், மின் சாதனங்கள், மின் பெட்டிகள் மற்றும் இதர மின் உபகரணங்களை உடனடியாக மாற்றி தொடர் மின் வெட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 days 18 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 6 days ago |
-
இந்தியா - வங்காளதேசம் மோதும் 2-வது டெஸ்ட் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து
27 Sep 2024கான்பூர் : இந்தியா - வங்காளதேசம் இடையே கான்பூரில் நேற்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது.
-
இலக்கை அடையும் வரை இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் : பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்
27 Sep 2024வாஷிங்டன் : ஹிஸ்புல்லா அமைப்பு ஒழிக்கப்படும் வரை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
ஆதார், பான் கார்டு விவரங்களை வெளியிட்ட இணையதளங்கள் முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை
27 Sep 2024புதுடெல்லி : ஆதார், பான் கார்டு விவரங்களை வெளியிட்ட பல்வேறு இணையதள பக்கங்களை மத்திய அரசு முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
27 Sep 2024சென்னை : டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனைகளின்படி அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்து
27 Sep 2024சென்னை : சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனைகளின் படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி நேற்று காலை நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.&nbs
-
இந்தியா வளர்ந்த நாடாவதற்கு இன்னும் செயல்பட வேண்டும் : ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பேட்டி
27 Sep 2024புதுடெல்லி : ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், தற்போது அமெரிக்காவின் சிகாகோவில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
-
ஸ்ரீவில்லி. விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம்: முதல்வர் உத்தரவு
27 Sep 2024சென்னை : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.
-
திருப்பதி கோயிலுக்கு இன்று செல்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி : நம்பிக்கை ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட கோரிக்கை
27 Sep 2024திருப்பதி : ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று திருமலைக்கு செல்கிறார்.
-
பனப்பாக்கத்தில் தொழிற்பூங்கா: முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
27 Sep 2024ராணிப்பேட்டை : நெமிலியை அடுத்த பனப்பாக்கத்தில் அமைய உள்ள தொழில் பூங்காவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-09-2024.
27 Sep 2024 -
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.57,000-ஐ நெருங்கியது
27 Sep 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி ஒரு பவுன் ரூ.56,480-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை புதிய உச்சமாக பவுனுக்கு ரூ.320
-
சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு : கவர்னர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
27 Sep 2024சென்னை : சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் நேற்று காலை பதவியேற்றுக் கொண்டார்.
-
2-ம் கட்ட மெட்ரோ, கல்வி திட்ட நிதி உள்ளிட்ட டெல்லியில் தமிழக மக்கள் நலன் சார்ந்த 3 முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தினேன் : டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
27 Sep 2024புதுடெல்லி : டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழக மக்கள் நலன் சார்ந்த 3 கோரிக்கைளை முன்வைத்ததாகவும், இந்த சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில் தான் உள்ளத
-
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வலியுறுத்திய ஹிஸ்புல்லா : ஈரான் அரசு மறுப்பு
27 Sep 2024டெக்ரான் : இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துங்கள் என ஈரானுக்கு ஹிஸ்புல்லா வேண்டுகோள் விடுத்த நிலையில், சரியான நேரம் அல்ல என ஈரான் மறுத்து விட்டது.
-
போதைப்பொருட்களின் கேந்திரமாக தமிழகம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
27 Sep 2024சென்னை : தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை அடியோடு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
27 Sep 2024சென்னை : தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற நிலைக்குழுவில் யார், யாருக்கு என்ன பொறுப்பு?
27 Sep 2024புதுடெல்லி : பாராளுமன்ற நிலைக்குழுக்களுக்கான துறைவாரியான தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக இங்கிலாந்து, பிரான்ஸ் ஆதரவு
27 Sep 2024லண்டன் : ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க வேண்டும் என இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
-
ரூ.1111 ஆரம்ப விலையில் பண்டிகை கால சிறப்பு சலுகையை வழங்கிய இண்டிகோ
27 Sep 2024சென்னை : பண்டிகை காலத்தையொட்டி வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.1111 முதல் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் கிராண்ட் ரன்வே பெஸ்ட் சேல் எனும் சிறப்பு சலுகையை தொடங்கியுள்ளது
-
சி.எஸ்.கே.வில் இருந்து விலகியது குறித்து பிராவோ திடீர் விளக்கம்
27 Sep 2024வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான டுவெய்ன் பிராவோ ஐபிஎல் தொடரில் 2008 -ம் ஆண்டு அறிமுகமானார்.
-
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வடமாநில கும்பலை விரட்டி பிடித்த தமிழ்நாடு போலீஸ் : என்கவுன்டரில் ஒருவர் பலி - 6 பேர் சிறைபிடிப்பு
27 Sep 2024நாமக்கல் : கேரளாவில் ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்து தப்பிவந்த வடமாநில கும்பலை நாமக்கல் அருகே தமிழக போலீசார் விரட்டி
-
குரங்கு அம்மை: கேரளத்தில் 2-வது நபருக்கு பாதிப்பு உறுதி
27 Sep 2024திருவனந்தபுரம் : கேரளத்தில் 2-வது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
கேரள முதல்வரை பதவி விலகக்கோரி போராட்டம் : எதிர்க்கட்சி தலைவர் சதீசன் அறிவிப்பு
27 Sep 2024திருவனந்தபுரம் : கேரள முதல்வர் பினராய் விஜயன் பதவி விலக வலியுறுத்தி, வரும் அக்டோபர் 8-ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் வ
-
தமிழகத்தின் கோரிக்கைகள் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதியை விடுவிக்கக்கோரி மனு
27 Sep 2024சென்னை, டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
சித்தராமையா மீது வழக்குப்பதிவு
27 Sep 2024பெங்களூரு : சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.