எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழக மக்கள் நலன் சார்ந்த 3 கோரிக்கைளை முன்வைத்ததாகவும், இந்த சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில் தான் உள்ளது.” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 45 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள திமுக அலுவலகம் சென்ற முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பிரதமருடனான சந்திப்பு குறித்து விளக்கம் அளித்தார்.
செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: “இந்த சந்திப்பு இனிய சந்திப்பாக இருந்தது. பிரதமரும் எங்களிடம் மகிழ்ச்சியுடன் பேசினார். இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில் தான் உள்ளது. மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று 3 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன். கோரிக்கைகளின் சாராம்சங்களை தெளிவாக எழுதி ஒப்படைத்துள்ளோம்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட பணிகளை மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தியது போல், 2-ம் கட்ட பணிகளையும் செயல்படுத்த வேண்டும் என்பது தமிழகத்தின் நிலைப்பாடு. இந்த 2-ம் கட்டப்பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள 2019-ம் ஆண்டு மாநில அரசின் நிதி, கடன் பெற்றும் பணிகள் தொடங்கி, மத்திய அரசுடன் இணைந்த திட்டமாக செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் இதை ஏற்று, 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மத்திய நிதியமைச்சரும் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று 2021-22ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவித்தார். தொடர்ந்து, மத்திய அரசின் திட்ட முதலீட்டு வாரியமும் ஒப்புதலை அதே ஆண்டு வழங்கியது. இந்த பணிகளுக்கு இதுவரை ரூ.18,564 கோடி செலவழிக்கப்பட்டிருந்தாலும், மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காததால், மத்திய அரசின் நிதியும் வழங்கப்படவில்லை. இதனால், மெட்ரோ ரயில் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, தாமதமின்றி நிதியை உடனே வழங்க கேட்டுள்ளேன்.
அடுத்ததாக, மத்திய அரசு 60 சதவீதம், தமிழக அரசு 40 சதவீதம் நிதியில் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்கு, இந்தாண்டு மத்திய அரசு வழங்க வேண்டியது ரூ.2,152 கோடி. இதில், முதல் தவணை இதுவரை தமிழகத்துக்கு விடுவிக்கப்படவில்லை. இந்த திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடாதது தான் காரணம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கையின் பல நல்ல கூறுகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
காலை உணவுத்திட்டம் போன்ற மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படாத பல முன்னோடி திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையின் ஒரு விதிமுறையான, மும்மொழிக் கல்விக் கொள்கையை பின்பற்ற தமிழக அரசு ஒப்புக் கொள்ளவில்லை. எந்த ஒரு மாநிலத்திலும் மொழி திணிப்பு இருக்காது என்று தேசிய கல்விக் கொள்கை உறுதியளித்திருந்தாலும், இந்த திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அந்த சரத்து இல்லை.
எனவே, ஒப்பந்தம் திருத்தப்பட வேண்டும் என மத்திய அரசிடம் கூறிவருகிறோம். இந்த சூழலில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படாததை காரணம் காட்டி மத்திய அரசு நிதியை விடுவிக்காததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளோம். உடனடியாக இத்திட்டத்துக்கான மத்திய அரசின் நிதி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
மூன்றாவதாக, தமிழக மீனவர்கள் சந்திக்கும் வாழ்வாதார பிரச்சினை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீனவர்கள், மீன்பிடிப் படகுகளை இலங்கை கடற்படைய சிறைபிடித்து துன்புறுத்துகின்றனர். இதுகுறித்து, பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பலமுறை வலியுறுத்தி கடிதம் எழுதியும், இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் மிக அதிக எண்ணிக்கையில் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
191 மீன்பிடி படகுகள் 145 மீனவர்கள் தற்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்தி மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். அடுத்த மாதம் கொழும்புவில் இந்தியா- இலங்கை இடையில் நடைபெறும் கூட்டுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து உடனடியாக தீர்வு காண வலியுறுத்தியுள்ளோம். இலங்கையில் புதிய அரசு அமைந்துள்ளது. புதிய அதிபரிடம் இந்த கோரிக்கையை மத்திய அரசு வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
இந்த 3 முக்கிய கோரிக்கைகளையும் கவனமாக கேட்ட பிரதமர், இதுகுறித்து, கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் நலன் காக்க தேவையான இந்த 3 கோரிக்கைகளை பிரதமர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். தமிழகத்துக்கு ஏராளமான கோரிக்கைகள் உள்ளன. அவற்றை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். தொடர்ந்து வலியுறுத்துவோம். இந்த 3 கோரிக்கைகள் தொடர்பாகத்தான் 45 நிமிட சந்திப்பில் பேசப்பட்டது. எங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 days 12 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 6 days ago |
-
இலக்கை அடையும் வரை இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் : பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்
27 Sep 2024வாஷிங்டன் : ஹிஸ்புல்லா அமைப்பு ஒழிக்கப்படும் வரை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
27 Sep 2024சென்னை : டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
ஆதார், பான் கார்டு விவரங்களை வெளியிட்ட இணையதளங்கள் முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை
27 Sep 2024புதுடெல்லி : ஆதார், பான் கார்டு விவரங்களை வெளியிட்ட பல்வேறு இணையதள பக்கங்களை மத்திய அரசு முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
இந்தியா வளர்ந்த நாடாவதற்கு இன்னும் செயல்பட வேண்டும் : ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பேட்டி
27 Sep 2024புதுடெல்லி : ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், தற்போது அமெரிக்காவின் சிகாகோவில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
-
சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனைகளின்படி அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்து
27 Sep 2024சென்னை : சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனைகளின் படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி நேற்று காலை நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.&nbs
-
ஸ்ரீவில்லி. விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம்: முதல்வர் உத்தரவு
27 Sep 2024சென்னை : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-09-2024.
27 Sep 2024 -
பனப்பாக்கத்தில் தொழிற்பூங்கா: முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
27 Sep 2024ராணிப்பேட்டை : நெமிலியை அடுத்த பனப்பாக்கத்தில் அமைய உள்ள தொழில் பூங்காவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.
-
திருப்பதி கோயிலுக்கு இன்று செல்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி : நம்பிக்கை ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட கோரிக்கை
27 Sep 2024திருப்பதி : ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று திருமலைக்கு செல்கிறார்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.57,000-ஐ நெருங்கியது
27 Sep 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி ஒரு பவுன் ரூ.56,480-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை புதிய உச்சமாக பவுனுக்கு ரூ.320
-
சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு : கவர்னர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
27 Sep 2024சென்னை : சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் நேற்று காலை பதவியேற்றுக் கொண்டார்.
-
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வலியுறுத்திய ஹிஸ்புல்லா : ஈரான் அரசு மறுப்பு
27 Sep 2024டெக்ரான் : இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துங்கள் என ஈரானுக்கு ஹிஸ்புல்லா வேண்டுகோள் விடுத்த நிலையில், சரியான நேரம் அல்ல என ஈரான் மறுத்து விட்டது.
-
போதைப்பொருட்களின் கேந்திரமாக தமிழகம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
27 Sep 2024சென்னை : தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை அடியோடு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
27 Sep 2024சென்னை : தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக இங்கிலாந்து, பிரான்ஸ் ஆதரவு
27 Sep 2024லண்டன் : ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க வேண்டும் என இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
-
இந்தியா - வங்காளதேசம் மோதும் 2-வது டெஸ்ட் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து
27 Sep 2024கான்பூர் : இந்தியா - வங்காளதேசம் இடையே கான்பூரில் நேற்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது.
-
கேரள முதல்வரை பதவி விலகக்கோரி போராட்டம் : எதிர்க்கட்சி தலைவர் சதீசன் அறிவிப்பு
27 Sep 2024திருவனந்தபுரம் : கேரள முதல்வர் பினராய் விஜயன் பதவி விலக வலியுறுத்தி, வரும் அக்டோபர் 8-ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் வ
-
2-ம் கட்ட மெட்ரோ, கல்வி திட்ட நிதி உள்ளிட்ட டெல்லியில் தமிழக மக்கள் நலன் சார்ந்த 3 முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தினேன் : டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
27 Sep 2024புதுடெல்லி : டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழக மக்கள் நலன் சார்ந்த 3 கோரிக்கைளை முன்வைத்ததாகவும், இந்த சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில் தான் உள்ளத
-
ரூ.1111 ஆரம்ப விலையில் பண்டிகை கால சிறப்பு சலுகையை வழங்கிய இண்டிகோ
27 Sep 2024சென்னை : பண்டிகை காலத்தையொட்டி வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.1111 முதல் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் கிராண்ட் ரன்வே பெஸ்ட் சேல் எனும் சிறப்பு சலுகையை தொடங்கியுள்ளது
-
குரங்கு அம்மை: கேரளத்தில் 2-வது நபருக்கு பாதிப்பு உறுதி
27 Sep 2024திருவனந்தபுரம் : கேரளத்தில் 2-வது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற நிலைக்குழுவில் யார், யாருக்கு என்ன பொறுப்பு?
27 Sep 2024புதுடெல்லி : பாராளுமன்ற நிலைக்குழுக்களுக்கான துறைவாரியான தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து: தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் 55 பேர் பத்திரமாக மீட்பு
27 Sep 2024காந்திநகர் : குஜராத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாப்நகர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் ஓடுகிறது.
-
கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம்: திட்ட அறிக்கை தயாரிக்க அரசு டெண்டர் அறிவிப்பு
27 Sep 2024தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் அறிவிப்பு
-
திருப்பதியில் ஒரு மாதத்திற்கு காவல் சட்டப்பிரிவு- 30 அமல் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு
27 Sep 2024திருப்பதி : திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்த விவகாரம் எதிரொலியாக, அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தலாம் என்ற சந்தேகத்தில், திருப்பதியில் பொதுக்கூட்டங்
-
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர புதிய சட்டம் : அதிபர் ஜோ பைடன் தகவல்
27 Sep 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர சட்டம் கொண்டு வரப்போவதாக அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.