எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் : கேரளாவில் ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்து தப்பிவந்த வடமாநில கும்பலை நாமக்கல் அருகே தமிழக போலீசார் விரட்டி
பிடித்து கைது செய்தனர். இதில் ஒரு கொள்ளையன் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டான். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வடமாநில கொள்ளைகும்பல் நேற்று பிடிபட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.களில் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது. இதில் 65 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்துவிட்டு கொள்ளை கும்பல் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தப்பிச்செல்வதாக நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி போலீசார் நிறுத்தியும் நிற்காமல் சென்றது. இதையடுத்து விரட்டி சென்ற போலீசார் கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்தனர்.
பின்னர், லாரி கண்டெய்னரை திறக்க முற்பட்டபோது போலீசாரை தாக்கிவிட்டு லாரி டிரைவர் மற்றும் கண்டெய்னரில் இருந்த மற்றொரு கொள்ளையர் தப்பியோடினார். இந்த சம்பவத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் லாரி டிரைவரான கொள்ளையர் உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக சேலம் சரக டிஜிபி உமா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கேரள கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ராஜஸ்தான் பதிவெண் கொண்ட லாரி சோதனையில் நிற்காமல் சென்றது. நிற்காமல் சென்றதால் போலீசார் அந்த லாரியை பின்தொடர்ந்து சென்றனர். சங்ககிரி சுங்கச்சாவடி வரை லாரி சென்றது. சுங்கச்சாவடியில் இருந்து மீண்டும் திரும்பி வந்தது. மீண்டும் 2 முறை சங்ககிரி வரை சென்றுவிட்டு வெப்படை வழியாக லாரி வந்தது.
வெப்படை ரோட்டில் வரும்போது சண்யாசிபட்டி பகுதியில் லாரி வேகமாக வந்தது. அதற்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டனர். 2 பைக்குகள், 1 கார் மீது மோதி லாரி வேகமாக வந்தது. பின்னர், லாரியை விரட்டி இடைமறித்து போலீசார் நிறுத்தினர். லாரியில் இருந்த டிரைவரை கீழே இறக்கி அவரை உடனடியாக கைது செய்தோம்.
லாரியின் கேபினில் டிரைவருடன் 4 பேர் இருந்தனர். அந்த 4 பேரையும் கைது செய்தோம். அந்த லாரி கேரளாவின் திரிச்சூரில் இருந்து வந்தது என்றும் நமக்கு தகவல்கள் கிடைத்தன. தகவல் கிடைத்த உடன் இந்த லாரியை சண்யாசிபட்டியில் இருந்து வேப்படை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்துவிடலாம் என்று நாம் வருகிறோம். வரும் வழியில் லாரியை ஜூமான் என்பவர் ஓட்டி வந்தார். லாரியில் போலீசார் இருந்தனர். லாரிக்கு முன்னும் பின்னும் போலீஸ் வாகனங்கள் சென்றன.
அப்படி செல்லும்போது லாரியில் உள்ள கண்டெய்னரில் இருந்து அதிக சத்தம் வந்தது. சத்தம் கேட்ட உடன் டிரைவரிடம் சொல்லி தோப்புக்காடு பகுதியில் லாரியை நிறுத்தினோம். பின்னர், லாரி டிரைவர் ஜூமானை அழைத்து கண்டெய்னரை திறக்க கூறினோம். கதவை திறந்து பார்க்கும்போது கண்டெய்னரில் 2 பேர் இருந்தனர். அப்போது, திடீரென கண்டெய்னரில் இருந்த நபர் தனது கையில் நீல நிற பையுடன் கீழே குதித்து ஓடினார். லாரி டிரைவர் ஜூமானும் போலீசார் பிடியில் இருந்து காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓட்டினார். தடுக்க முயன்ற இன்ஸ்பெக்டரை ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பியோடினர்.
தோப்புக்காடு பகுதியில் உள்ள ஒரு ஓடையில் இறங்கி அஸ்ரூ என்ற கொள்ளையன் பணப்பையுடன் ஓடினான். அஸ்ரூவுடன் சேர்ந்து ஓடிய ஜூமான் ஓடையில் வழுக்கி விழுந்தார். ஜூமானை எஸ்.ஐ. பிடிக்க முயன்றபோது அவரை தாக்கினார். இதையடுத்து, பின்னால் வேகமாக வந்த இன்ஸ்பெக்டர், ஜூமான் எஸ்.ஐ.- ஐ தாக்கியதையடுத்து தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டார். இஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டதில் கொள்ளையன் ஜூமான் உயிரிழந்தான்.
இதையடுத்து, மற்றொரு கொள்ளையன் அஸ்ரூவை நிற்கும்படி எஸ்.ஐ. எச்சரித்தார். அப்போது, கொள்ளையன் அஸ்ரூ பணப்பையை கீழே போட்டுவிட்டு அங்கு கிடந்த கற்கலை எடுத்து இன்ஸ்பெக்டரை நோக்கி வீசினான். இதனை தொடர்ந்து அஸ்ரூ முக்கிய குற்றவாளி என்பதால் அவன் தப்பியோடாமல் இருப்பதற்காக இன்ஸ்பெக்டர் அவனது காலில் துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த கொள்ளையன் அஸ்ரூவை கைது செய்துள்ளோம்.
இந்த கொள்ளை கும்பல் ஏ.டி.எம்.களை குறிவைத்து கொள்ளையடிக்கின்றனர். ஏ.டி.எம்.ல் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதுதான் இவர்களது நோக்கம். கைது செய்யப்பட்ட கொள்ளையர்களில் 5 பேர் அரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மற்றொருவர் அரியானாவின் நூ மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கொள்ளையன் அஸ்ரூ கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். எஞ்சிய 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கொள்ளையர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை இதுவரை எண்ணவில்லை. கண்டெய்னர் லாரிக்குள் ஒரு வெள்ளை நிற கிரிட்டா கார் இருந்தது. அந்த காரை கேரளாவின் திரிச்சூரில் ஏ.டி.எம். கொள்ளையில் பயன்படுத்தியுள்ளனர். அந்த காரில் சென்றுதான் திரிச்சூரில் 3 எ.டி.எம்.களில் கொள்ளையடித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரள போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் கிரிட்டா காரை கண்டுபிடிக்க வாகன சோதனையில் ஈடுபட்டோம்.
இந்த கொள்ளை சம்பவத்தில் மொத்தம் 7 பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார். ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். எஞ்சிய 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட 7 பேரிடம் இதுவரை எந்த வழக்குகளும் இல்லை. கிருஷ்ணகிரி ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் தொடர்பாக அரியானாவின் மேவத் பகுதியை சேர்ந்த குற்றவாளிகள் 2 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளோம்.
தற்போது பிடிபட்டவர்களுக்கும், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது? ஏதேனும் திட்டம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொள்ளை சம்பவம் கேரளாவில் நடந்ததால் அம்மாநிலத்தை சேர்ந்த போலீசார் நம்முடன் சேர்ந்து விசாரணை நடத்தலாம். கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டபோது காயமடைந்த 2 போலீசார் தற்போது சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் நலமுடன் உள்ளனர்.
ஹவாரியா கொள்ளை கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதுபோன்று தெரியவில்லை. தீவிரவாத கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இல்லை. நாமக்கலில் 3 வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். தமிழக போலீசார் முதற்கட்ட விசாரணையை நிறைவு செய்தபின் கேரள போலீசார் விசாரணையை தொடங்குவார்கள். கொள்ளையர்கள் பணத்தை மட்டுமே கொள்ளையடித்துள்ளனர். பிடிபட்ட கொள்ளையர்கள் ஏ.டி.எம்.களை குறிவைத்தே கொள்ளையடிக்கின்றனர்.
எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் எப்போதுமே பணம் இருக்கும் என்பதால் அந்த ஏ.டி.எம்.களை குறிவைத்தே கொள்ளையடிப்பதாக பிடிபட்ட கொள்ளையர்கள் கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 days 12 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 6 days ago |
-
இலக்கை அடையும் வரை இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் : பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்
27 Sep 2024வாஷிங்டன் : ஹிஸ்புல்லா அமைப்பு ஒழிக்கப்படும் வரை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
27 Sep 2024சென்னை : டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
ஆதார், பான் கார்டு விவரங்களை வெளியிட்ட இணையதளங்கள் முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை
27 Sep 2024புதுடெல்லி : ஆதார், பான் கார்டு விவரங்களை வெளியிட்ட பல்வேறு இணையதள பக்கங்களை மத்திய அரசு முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
இந்தியா வளர்ந்த நாடாவதற்கு இன்னும் செயல்பட வேண்டும் : ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பேட்டி
27 Sep 2024புதுடெல்லி : ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், தற்போது அமெரிக்காவின் சிகாகோவில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
-
சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனைகளின்படி அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்து
27 Sep 2024சென்னை : சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனைகளின் படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி நேற்று காலை நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.&nbs
-
ஸ்ரீவில்லி. விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம்: முதல்வர் உத்தரவு
27 Sep 2024சென்னை : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-09-2024.
27 Sep 2024 -
பனப்பாக்கத்தில் தொழிற்பூங்கா: முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
27 Sep 2024ராணிப்பேட்டை : நெமிலியை அடுத்த பனப்பாக்கத்தில் அமைய உள்ள தொழில் பூங்காவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.
-
திருப்பதி கோயிலுக்கு இன்று செல்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி : நம்பிக்கை ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட கோரிக்கை
27 Sep 2024திருப்பதி : ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று திருமலைக்கு செல்கிறார்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.57,000-ஐ நெருங்கியது
27 Sep 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி ஒரு பவுன் ரூ.56,480-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை புதிய உச்சமாக பவுனுக்கு ரூ.320
-
சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு : கவர்னர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
27 Sep 2024சென்னை : சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் நேற்று காலை பதவியேற்றுக் கொண்டார்.
-
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வலியுறுத்திய ஹிஸ்புல்லா : ஈரான் அரசு மறுப்பு
27 Sep 2024டெக்ரான் : இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துங்கள் என ஈரானுக்கு ஹிஸ்புல்லா வேண்டுகோள் விடுத்த நிலையில், சரியான நேரம் அல்ல என ஈரான் மறுத்து விட்டது.
-
போதைப்பொருட்களின் கேந்திரமாக தமிழகம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
27 Sep 2024சென்னை : தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை அடியோடு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
27 Sep 2024சென்னை : தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியா - வங்காளதேசம் மோதும் 2-வது டெஸ்ட் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து
27 Sep 2024கான்பூர் : இந்தியா - வங்காளதேசம் இடையே கான்பூரில் நேற்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது.
-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக இங்கிலாந்து, பிரான்ஸ் ஆதரவு
27 Sep 2024லண்டன் : ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க வேண்டும் என இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
-
கேரள முதல்வரை பதவி விலகக்கோரி போராட்டம் : எதிர்க்கட்சி தலைவர் சதீசன் அறிவிப்பு
27 Sep 2024திருவனந்தபுரம் : கேரள முதல்வர் பினராய் விஜயன் பதவி விலக வலியுறுத்தி, வரும் அக்டோபர் 8-ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் வ
-
2-ம் கட்ட மெட்ரோ, கல்வி திட்ட நிதி உள்ளிட்ட டெல்லியில் தமிழக மக்கள் நலன் சார்ந்த 3 முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தினேன் : டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
27 Sep 2024புதுடெல்லி : டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழக மக்கள் நலன் சார்ந்த 3 கோரிக்கைளை முன்வைத்ததாகவும், இந்த சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில் தான் உள்ளத
-
ரூ.1111 ஆரம்ப விலையில் பண்டிகை கால சிறப்பு சலுகையை வழங்கிய இண்டிகோ
27 Sep 2024சென்னை : பண்டிகை காலத்தையொட்டி வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.1111 முதல் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் கிராண்ட் ரன்வே பெஸ்ட் சேல் எனும் சிறப்பு சலுகையை தொடங்கியுள்ளது
-
குரங்கு அம்மை: கேரளத்தில் 2-வது நபருக்கு பாதிப்பு உறுதி
27 Sep 2024திருவனந்தபுரம் : கேரளத்தில் 2-வது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற நிலைக்குழுவில் யார், யாருக்கு என்ன பொறுப்பு?
27 Sep 2024புதுடெல்லி : பாராளுமன்ற நிலைக்குழுக்களுக்கான துறைவாரியான தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து: தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் 55 பேர் பத்திரமாக மீட்பு
27 Sep 2024காந்திநகர் : குஜராத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாப்நகர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் ஓடுகிறது.
-
திருப்பதியில் ஒரு மாதத்திற்கு காவல் சட்டப்பிரிவு- 30 அமல் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு
27 Sep 2024திருப்பதி : திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்த விவகாரம் எதிரொலியாக, அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தலாம் என்ற சந்தேகத்தில், திருப்பதியில் பொதுக்கூட்டங்
-
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர புதிய சட்டம் : அதிபர் ஜோ பைடன் தகவல்
27 Sep 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர சட்டம் கொண்டு வரப்போவதாக அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
-
கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம்: திட்ட அறிக்கை தயாரிக்க அரசு டெண்டர் அறிவிப்பு
27 Sep 2024தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் அறிவிப்பு