எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு : பெங்களூரு டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் இந்தியா 462 ரன்களில் ஆல் அவுட் ஆன நிலையில், 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடி வருகிறது. இன்று போட்டியின் கடைசி நாள் ஆகும்.
முதல் நாள் ஆட்டம்....
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. நேற்று முன்தினம் 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
46 ரன்களுக்கு அவுட்....
முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து 366 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டை இழந்து 231 ரன்கள் எடுத்திருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
சர்பராஸ் - ரிஷப்...
இந்நிலையில் நேற்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சர்பராஸ் கானுடன், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் அபாரமாக ஆடிய சர்பராஸ் கான் 150 ரன்னிலும், ரிஷப் பண்ட் 99 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதில் கே.எல்.ராகுல் 12 ரன், ஜடேஜா 5 ரன், அஸ்வின் 15 ரன், பும்ரா மற்றும் சிராஜ் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதனால் இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் 462 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, வில்லியம் ஓ ரூர்க் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதன் காரணமாக 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. இன்று போட்டியின் கடைசி நாளாகும்.
மழையால் ஆட்டம் பாதிப்பு
இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமான முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், நேற்று 4-வது நாளில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்ற பிறகு ஆட்டம் தொடர்ந்தது.
சச்சின் பாராட்டு
சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, வாழ்க்கையின் வேர்களை அடைய கிரிக்கெட்டும் ஒரு வழியாகும். பெங்களூர் மண்ணிற்கும் ரச்சின் ரவீந்திராவுக்கும் ஸ்பெஷலான தொடர்பு உள்ளது. நியூசிலாந்து அணிக்காக விளையாடினாலும், அவரின் குடும்பம் பெங்களூரை சேர்ந்தது. இன்று அதே மைதானத்தில் சதம் அடித்துள்ளார். அதேபோல் சர்பராஸ் கான். இந்தியாவுக்கு மிகவும் தேவைப்படும் போது, உங்கள் முதல் டெஸ்ட் சதத்தை அடித்தது என்ன ஒரு சந்தர்ப்பம். இரு திறமையான பேட்ஸ்மேன்களுக்கும் சுவாரஸ்யமான காலம் காத்திருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 5 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
52,000 பேர் ஆன்லைனில் முன்பதிவு: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு : தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பு
19 Oct 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-10-2024.
19 Oct 2024 -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி : சென்னை முதன்மை அமர்வு உத்தரவு
19 Oct 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய தூதகரத்தை மூட வலியுறுத்தி கனடாவில் சீக்கிய அமைப்புகள் பேரணி
19 Oct 2024ஒட்டாவா : இந்திய தூதரகத்தை மூட வலியுறுத்தி கனடாவில் வான்கோவெரிலுள்ள இந்திய தூதரக அலுவலகம் முன் சீக்கிய அமைப்புகள் பேரணியாக திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
பெங்களூரு முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா
19 Oct 2024பெங்களூரு : பெங்களூரு டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் இந்தியா 462 ரன்களில் ஆல் அவுட் ஆன நிலையில், 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடி வருகிற
-
100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப் பணி : துணை முதல்வர் உதயநிதி தகவல்
19 Oct 2024தி.மலை : விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
-
அம்பாசமுத்திரத்தில் இன்று அ.தி.மு.க. 53-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் : எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
19 Oct 2024நெல்லை : அ.தி.மு.க. 53-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு
19 Oct 2024கடலூர் : மழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
-
தீபாவளி பண்டிகை: புதுவையில் 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
19 Oct 2024புதுச்சேரி : தீபாவளி பண்டிகையை ஒட்டி புதுச்சேரியில் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசு மருத்துவமனைகளுக்கு விரைவில் பிசியோதெரபிஸ்டுகள் 47 பேர் தேர்வு
19 Oct 2024சென்னை : அரசு மருத்துவமனைகளுக்கு விரைவில் 47 பிசியோதெரபிஸ்டுகள் நேரடி நியமன முறையில் தேர்வு செய்யப்பட இருப்பதாக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
-
ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
19 Oct 2024புதுடெல்லி : நேற்று காலை முதல் பல்வேறு இந்திய விமான நிறுவனங்களின் 20-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இலங்கை கடற்படை கைது செய்த 17 தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்
19 Oct 2024சென்னை : இலங்கை கடற்படை கைது செய்த 17 இந்திய மீனவர்கள் இந்தியா திரும்பி விட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
-
தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு
19 Oct 2024சென்னை : தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நவ.1-ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு உ
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
19 Oct 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொல்கத்தாவில் நீடிக்கும் போராட்டம்: மாநில அரசுக்கு நாளை வரை ஜூனியர் டாக்டர்கள் கெடு
19 Oct 2024கொல்கத்தா : கொல்கத்தாவில் 15-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்கள் நாளை 21-ம் தேதிக்குள் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு போரா
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர காலக்கெடு நிர்ணயிப்பது கடினம் : ரஷ்ய அதிபர் புடின் சொல்கிறார்
19 Oct 2024மாஸ்கோ : உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காலக்கெடுவை அமைப்பது கடினமாக இருக்கும் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
-
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் வலைதள வதந்திகள் பெரும் சவால் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
19 Oct 2024சென்னை : இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, சமூக வலைதளங்களில் பரப்பப்படக் கூடிய வதந்திகள் பெரும் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது என்று சென்னையில் நடந்த&nbs
-
டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்றின் தரம்
19 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அடுத்த தலைவரை தேடும் பணியில் ஹமாஸ் தீவிரம் : இஸ்ரேலுக்கு எதிராக போரை தொடர உறுதி
19 Oct 2024காசா : இஸ்ரேலுக்கு எதிரான போரை தொடர அடுத்த தலைவரை தேடும் பணியில் ஹமாஸ் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.
-
தமிழக மீனவர்கள் கைதை தடுக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
19 Oct 2024மதுரை : இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூருவில் இன்று கன்னடர் - தமிழர் மாநாடு
19 Oct 2024பெங்களூரு : பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடு இன்று நடைபெறுகிறது.
-
மெக்சிகோ நிதி அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
19 Oct 2024மெக்சிகோ சிட்டி : அரசு முறை பயணமாக மெக்சிகோ சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டு நிதியமைச்சர் ரமிர்ஸ் டி லா ஒ-வை சந்தித்து பேசினார்.
-
இஸ்ரேல் பிரதமர் இல்லத்தின் மீது ஹிஸ்புல்லா டிரோன் தாக்குதல்
19 Oct 2024ஜெருசலேம் : இஸ்ரேல் பிரதமர் இல்லத்தின் மீது ஹிஸ்புல்லா அமைப்பு டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் பலி
19 Oct 2024காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 33 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
-
விரைவில் தமிழகத்திற்கு பெரிய தொழில் முதலீடுகள் வரவுள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
19 Oct 2024திருவாரூர் : தமிழகத்திற்கு விரைவில் மிகப்பெரிய தொழில் முதலீடு வர இருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.