எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 121 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 திருக்கோவில்களில் 24 புதிய திட்டப் பணிகள் மற்றும் 50 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் 7 திருக்கோவில்களில் 15 முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 121 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 திருக்கோவில்களில் 24 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு உதவி ஆணையர் அலுவலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, 50 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் 7 திருக்கோவில்களில் 15 முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
16 திருக்கோவில்கள்:
சென்னை, எழும்பூர், அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோவிலில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் சார்பில் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒட்டன்சத்திரம், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி; திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் 16.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணி, சென்னை, கோவில்பதாகை, அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் 13.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுக்கள் காப்பகம் அமைக்கும் பணி; ஈரோடு மாவட்டம், பண்ணாரி, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 8.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவில் வளாகத்தில் மூன்று பொது சுகாதார வளாகங்கள், திருமண மண்டபம் பழுதுபார்த்தல் மற்றும் கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள்; நாமக்கல், அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோவிலில் 7.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர், அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் 6.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; சென்னை, பூங்கா நகர், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் சார்பில் 4.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய பல்நோக்கு வளாகங்கள் கட்டும் பணிகள்; கன்னியாகுமரி மாவட்டம், வேளிமலை, அருள்மிகு குமாரசுவாமி திருக்கோவிலில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; தேனி மாவட்டம், வீரபாண்டி, அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவிலில் 2.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு பணியாளர் குடியிருப்புகள் கட்டும் பணி; கோயம்புத்தூர் மாவட்டம், இடுகம்பாளையம், அருள்மிகு அனுமந்தராயசுவாமி திருக்கோவிலில் 2.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஐந்து நிலை இராஜகோபுரம் கட்டும் பணி; சென்னை, இராயப்பேட்டை, அருள்மிகு பெரியபாளையத்தம்மன் திருக்கோவிலில் 1.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு மண்டபம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, அருள்மிகு அறப்பளீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் 1.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணி; விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை, அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில் 1.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குளத் திருப்பணி; திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலியில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மதுரை மாவட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் சார்பில் அருள்மிகு சுந்தரராஜா உயர்நிலைப் பள்ளிக்கு 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை கட்டடம் கட்டும் பணி மற்றும் 1.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவிலின் கோட்டைச்சுவர் புனரமைக்கும் பணி; மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு, அருள்மிகு சுவேதாரண்யேசுவரசுவாமி திருக்கோவிலில் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி; என மொத்தம் 121.43 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 24 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு உதவி ஆணையர் அலுவலகக் கட்டடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
15 முடிவுற்ற திட்டப் பணிகள்:
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 20.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பொது தரிசன முறை வரிசை, நிர்வாக அலுவலகக் கட்டடம் மற்றும் கலையரங்கம்; மதுரை மாவட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் வண்டிகேட் நுழைவு வாயில் முதல் சோலைமலை முருகன் திருக்கோவில் மற்றும் இராக்காயி அம்மன் திருக்கோயிலுக்கு 9.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை, தடுப்புச் சுவர் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள், 2.95 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் வளாக மேற்கு புற கோட்டைச் சுவர் மற்றும் 1.50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள பெரியாழ்வார் திருவரசு திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.
சென்னை, பூங்கா நகர், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் 6.75 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அர்ச்சகர் மற்றும் திருக்கோவில் பணியாளர் குடியிருப்புகள், புதிய பல்நோக்கு வளாகம் மற்றும் குடியிருப்பு; விருதுநகர் மாவட்டம், தேவதானம், அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளியசுவாமி திருக்கோவிலில் 3.95 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருக்குளம் திருப்பணியை முதல்வர் திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையம், அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யனார் திருக்கோவிலில் 2.10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அர்ச்சகர் குடியிருப்பு; விழுப்புரம் மாவட்டம், பெருவளூர், அருள்மிகு கோட்டீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் 1.97 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருமண மண்டபம்; கோயம்புத்தூர் மாவட்டம், பூண்டி, அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் 1.97 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், மருத்துவ மையம் மற்றும் சுகாதார வளாகம் என மொத்தம் 50.79 கோடி ரூபாய் செலவிலான 15 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு தேவையில்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
20 Feb 2025சென்னை: சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத
-
விரைவு ரயில்களின் இயக்க நாட்கள், நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே
20 Feb 2025சென்னை: விரைவு ரெயில்களின் இயக்க நாட்கள் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் 2 சிறிய ரக விமானங்கள் மோதி விபத்து
20 Feb 2025அரிசோனா: அமெரிக்காவில் 2 சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதி விபத்தில் சிக்கியதில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
-
அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள்: வரும் 4-ம் தேதி தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை
20 Feb 2025தூத்துக்குடி: அய்யா வைகுண்டசாமி பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிற 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
-
அண்ணா சாலைக்கு தனியாக வர தயார்: துணை முதல்வர் உதயநிதிக்கு அண்ணாமலை எதிர் சவால்
20 Feb 2025சென்னை: அண்ணா சாலைக்கு தனியாக வர தயார் என்று உதயநிதி ஸ்டாலின் சவாலுக்கு அண்ணாமலை எதிர் சவால் விடுத்துள்ளார்.
-
மோசடி சம்பவங்கள் எதிரொலி: ஒரு மாதத்தில் மட்டும் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
20 Feb 2025புதுடெல்லி: இந்தியாவில் ஒரே மாதத்தில் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
-
இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்
20 Feb 2025சென்னை: தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கருக்கு சொந்தமான ரூ. 10 கோடியிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
பெண்களுக்கு மார்ச் 8-க்குள் ரூ.2,500: டெல்லி முதல்வர் ரேகா குப்தா உறுதி
20 Feb 2025புதுடில்லி: டில்லியில் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.
-
பறிபோன ஹாட்ரிக் வாய்ப்பு
20 Feb 2025கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் நேற்று (பிப்.
-
பொது இடங்களில் தலைவர்கள் சிலை: மதுரை ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி
20 Feb 2025மதுரை: 'தலைவர்கள் சிலைகள், கட்சி கொடிக்கம்பங்களை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே?' என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
20 Feb 2025மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
-
கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்கள்: அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு
20 Feb 2025சென்னை: அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்களை நீக்க முடியுமா? என்பதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஜெ.பிறந்தநாளில் ஏழை, எளியோருக்கு உதவுங்கள்: கட்சியினருக்கு அ.தி.மு.க. தலைமை வேண்டுகோள்
20 Feb 2025சென்னை: ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை, எளியோருக்கு உதவிடுமாறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அ.தி.மு.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
டெல்லி முதல்வர் மீது வழக்குகள்: தேர்தல் உரிமை அமைப்பு தகவல்
20 Feb 2025புதுடில்லி: டில்லி முதல்வர், அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
-
320 ரன்களை எதிர்பார்க்கவில்லை: நியூசி. கேப்டன் ஆச்சர்யம்
20 Feb 2025கராச்சி: நாங்கள் 260 ரன்கள் அடிப்போம் என்று தான் நினைத்திருந்தோம்.
-
மாணவர் சங்கத் தலைவர் முதல் டெல்லி முதல்வர் வரை! யார் இந்த ரேகா குப்தா?
20 Feb 2025புதுடெல்லி: டெல்லியின் 9-வது முதல்வர், டெல்லியின் 4-வது பெண் முதல்வர் முதலான பெருமைகளை வசப்படுத்தும் 50 வயது ரேகா குப்தாவின் குடும்ப, அரசியல் பின்னணி தொடர்பான தேடல்கள்
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: மலேசியா தமிழருக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
20 Feb 2025சிங்கப்பூர்: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியா தமிழர் தூக்கு தண்டனை சிங்கப்பூர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
-
ஜோ பைடன் இந்தியாவுக்கு 21 மி.டாலர் நிதியுதவி கொடுத்தது ஏன்? அதிபர் டிரம்ப் கேள்வி
20 Feb 2025மியாமி: பைடன் நிர்வாகம் எதற்காக இந்தியாவுக்கு 21 மில்லியன் அமெரிக்க டாலரை வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அளிக்க வேண்டும் என்று டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
எலான் மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு
20 Feb 2025வாஷிங்டன்: இந்தியாவில் தொழிற்சாலை அமைத்தால் அமெரிக்காவுக்கு அநீதியானது என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
புதிய நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
20 Feb 2025சென்னை: ரூ.92.50 கோடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு தளங்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
டெல்லி சபாநாயகர் பதவிக்கு விஜேந்தர் குப்தா பெயர் பரிந்துரை
20 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கான பா.ஜ.க. வேட்பாளராக விஜேந்தர் குப்தா பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
-
வங்காளதேச விமானம் நாக்பூரில் தரையிறக்கம்
20 Feb 2025நாக்பூர்: வங்காளதேசத்தில் இருந்து துபாய் சென்ற விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
சென்னையில் முதன் முறையாக ‘ஸ்டார் கன்டென்டர்’ டேபிள் டென்னிஸ்
20 Feb 2025சென்னை: சென்னையில் டபிள்யூ. டி.டி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் மார்ச் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
-
அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்
20 Feb 2025புதுடெல்லி: அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மேகாலயாவில் நிலநடுக்கம்
20 Feb 2025ஷில்லாங்: மேகாலயாவின் வடக்கு காரோ மலைகள் உள்ள பகுதிகளில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.