முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சியை மாநகராட்சிகளாக உயர்த்த நடவடிக்கை : சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      தமிழகம்
KN-Nehru 2023 04 01

Source: provided

சென்னை : ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சியை மாநகராட்சிகளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு பதிலுரைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- 1989ம் ஆண்டு நான் முதல் முதலில் அமைச்சராக பொறுப்பேற்றேன். அமைச்சராக எப்படி பணியாற்ற வேண்டும் என கற்றுக் கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழியில், முதல்வர் ஸ்டாலினும் எனக்கு பெரிய இலாகாவை ஒதுக்கியிருக்கிறார். இந்த பிறப்பு அவர்களுக்கான பிறப்பு என்று பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

கடந்த 4 ஆண்டுகளில் 10 மாநகராட்சிகள், 31 நகராட்சிகள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ரூ.1564 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.900 கோடியில் புதிய சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகரங்களாக வளர்ந்து வருவதில் இந்தியாவில், தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

நாய்க்கடி பிரச்சினைக்கு தீர்வு காண, அனைத்து நகரங்களிலும் நாய்களுக்கான கருத்தடை மையம் அமைக்க இடம் தேர்வு செய்ய முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மானியக் கோரிக்கையில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும். முன்னதாக நேற்று சட்டசபையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு பல அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

கும்பகோணம், அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். கடலூர், தஞ்சாவூர், ஆரணி, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், காரமடை, கிருஷ்ணகிரி, குடியாத்தம், கொமாரபாளையம், கோவில்பட்டி, திருவாரூர், துறையூர், தேனி, அல்லிநகரம், பட்டுக்கோட்டை, பல்லடம், பொன்னேரி, முசிறி, விருதுநகர் மாவட்டங்ளில்  பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

தூத்துக்குடி, புதுக்கோட்டை, ஆத்தூர், திருத்துறைப்பூண்டி, தேவகோட்டை, புஞ்சைப் புளியம்பட்டி, பெரியகுளம், திருவாரூர் மாவட்டங்களில் புதிய சந்தைகள் அமைக்கப்படும். திருச்சி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், முசிறி, மேட்டூர், கோபி, வாலாஜாப்பேட்டை மாவட்டங்களில் சந்தைகள் புதுப்பிக்கப்படும். வால்பாறையில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் மற்றும் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். கடலூர், இராமநாதபுரம், காயல்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவத்திபுரம், பரமக்குடி, விழுப்புரம் மாவட்டங்ளில் புதிய நவீன இறைச்சிக்கூடங்கள் அமைக்கப்படும்.

கடலூர், ஓசூர், தூத்துக்குடி, தாம்பரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், உதகை, மறைமலைநகர், பெரம்பலூர், அரியலூர், திருவத்திபுரம் பகுதிகளில் புதிய நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும். தென்காசி, இராணிப்பேட்டையில் புதிய பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தப்படும்.சென்னையில் சொத்து வரி உயர்த்தப்பட்ட பின்னும் மற்ற பெருநகரங்களை விட சென்னையில் சொத்து வரி குறைவாகவே உள்ளது. 1000 சதுர அடிக்கு மும்பை - ரூ.10271, கொல்கத்தா - ரூ.5850, பெங்களூர் - ரூ.5783, டெல்லி - ரூ.1302, சென்னை - ரூ.570, மதுரை - ரூ.484, கோவை - ரூ.340ஆக சொத்து வரி உள்ளது. மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

2018-60 50%, 100%, 200% என சொத்து வரிகளை உயர்த்தியது அதிமுக, ஆனால் திமுக ஆட்சி வந்த பிறகு 25%, 50%, 100% என்ற அளவில் போடுங்கள் என முதல்வர் அறிவுறுத்தினார். மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதற்காகவே வரி உயர்த்தப்பட்டது என்று ஏற்கனவே அரசு விளக்கம் அளித்துள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு என்பது மிகவும் குறைவாக உள்ளது. நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உடன் ஊரகப்பகுதிகள் இணைக்கப்படும் போதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் எந்த விதத்திலும் தடைபடாமல் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

காவிரியை ஆதாரமாகக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னையில் பருவமழை காலத்தில் பொது மக்களுக்கு அம்மா உணவகம் மூலம் தான் உணவு அளிக்கப்படுகிறது. ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 31 நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.  குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, நகர அமைப்பு என எண்ணற்ற பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்தும் பொருட்டு நகர்ப்புர உள்ளாட்சிகளில் விலங்கு இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள ஏரிகள், குளங்களை மறுசீரமைத்து, நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப் பாதிப்பினைத் தவிர்க்கவும் பணிகள் மேற்கொள்ளப்படும்.சென்னை மாநகராட்சியில் இயற்கை சூழலை மேம்படுத்த 60 கோடி மதிப்பில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும். நீலக்கொடி கடற்கரை திட்டம் மூலம் 6 கோடி செலவில் மெரினா கடற்கரை மேம்படுத்தப்பட உள்ளது. வால்பாறையில் ரூ.9 கோடியில் வணிக வளாகம் அமைக்கப்படும் இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து