முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரம்ஜான் திருநாளை முன்னிட்டு பெரியகுளம் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      தேனி
Image Unavailable

 தேனி ஜுன் 27 பெரியகுளத்தில் ரம்ஜான் திருநாளை நேற்று இஸ்லாமியர்கள் வெகு சிறப்பாக கொண்டாடினர். ஒருவரையொருவர் தழுவி தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இத்திருநாளை முன்னிட்டு பெரியகுளம் வடகரை, தென்கரை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலிருந்து இஸ்லாமியர்கள்  மழையையும் பொருட்படுத்தாமல் ஊர்வலமாக சென்று ஈத்கா மைதானத்தை அடைந்தனர். 3000க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த அம்மைதானத்தில்  இத்திருநாளை முன்னிட்டு  சிறப்பு தொழுகை நடத்தினர். சிறப்பு தொழுகைக்கு பின் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் முஸ்தபா கூறும்போது  ஈகை திருநாள் என்பது ஏழை எளியோரின் கஷ்டங்களை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே 30 நாட்கள் நோன்பிருந்து ஈகை திருநாளான இன்று அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே என்றார். சிறப்பு தொழுகை மற்றும் ஊர்வலத்திற்கு பெரியகுளம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து