எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பார்படாஸ் : டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இன்று மோதும் இந்தியா - தென்ஆப்பிரிக்க அணிகளின் பலம், பலகீனம் குறித்து பார்ப்போம்.
தென் ஆப்பிரிக்கா:
ஐ.சி.சி. 50 ஓவர் மற்றும் டி20 உலகக்கோப்பைகள் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள தென் ஆப்பிரிக்கா முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. நடப்பு தொடரில் தோல்வி பக்கமே செல்லாத அந்த அணி அரையிறுதியில் ஆப்கானிஸ்தனை 56 ரன்களில் சுருட்டி அபார வெற்றி பெற்றது.
பலம்:
அந்த அணியின் பிரதான பலமே வேகப்பந்து வீச்சுதான். அந்த அணியில் ரபடா, நோர்ஜே மற்றும் மார்கோ ஜான்சன் போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சுழற்பந்து வீச்சிலும் ஷாம்சி அணிக்கு வலு சேர்க்கிறார். பேட்டிங் துறையில் டி காக் அணிக்கு வலு சேர்த்து வருகிறார். ஐ.பி.எல். தொடரில் அசத்திய ஸ்டப்ஸ் மிடில் வரிசையில் அணிக்கு ரன் சேர்க்கிறார். மில்லர் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தக்க சமயத்தில் பார்முக்கு திரும்பியுள்ளார். இது அணிக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.
பலவீனம்:
தென் ஆப்பிரிக்காவை பொறுத்தவரை அந்த அணியின் பேட்டிங் துறை பலவீனமாக காணப்படுகிறது. பேட்டிங் துறையில் டி காக் மட்டுமே அணிக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் தரமான வீரர்களுக்கு பஞ்சமில்லை. அனைவரும் ஒரே சேர்ந்து அசத்தும் நிச்சயம் இறுதிப்போட்டி இந்தியாவுக்கு சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்திய அணி:
நடப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்டு தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி 2-வது டி20 உலகக்கோப்பைக்கு குறிவைத்துள்ளது.
பலம்:
இந்திய அணியை பொறுத்தவரை நடப்பு தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பேட்டிங்கை விட பந்துவீச்சு ஒரு படி மேலே உள்ளது. வேகப்பந்து வீச்சில் பும்ரா தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருடன் இணைந்து அர்ஷ்தீப் சிங்கும் அணிக்கு வலு சேர்க்கிறார். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரை அக்சர் படேல், குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படுகின்றனர். ஐ.பி.எல். தொடரில் சொதப்பினாலும் தக்க சமயத்தில் பார்முக்கு திரும்பியுள்ள ஹர்திக் பாண்ட்யா மேட்ச் வின்னராக செயல்பட்டு வருகிறார். பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார். இந்திய அணியின் பேட்டிங் துறையின் ஆணி வேராக கேப்டன் ரோகித் செயல்பட்டு வருகிறார். கடைசி 2 போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்தியுள்ள அவருடன் இணைந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
பலவீனம்:
இந்திய அணியில் தற்போது பேட்டிங் வரிசை சற்று பலவீனமாக உள்ளது. டி20 உலகக்கோப்பையில் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இந்த தொடரில் சொதப்பி வருகிறார். 7- போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் கூட இன்னும் அடிக்கவில்லை. 2 டக் அவுட்டுகளும் அடங்கும். இறுதிப்போட்டியில் அவர் அசத்தும் பட்சத்தில் இந்திய அணியின் பேட்டிங் துறை மேலும் வலுப்பெறும். ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஷிவம் துபே இதில் தடுமாறி வருகிறார். அவர் எழுச்சி பெற்றால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வலுப்பெறும்.
பும்ராவை தவிர...
பந்து வீச்சை பொறுத்த வரை இந்திய அணியில் பும்ராவை தவிர மற்ற பவுலர்கள் யாரும் உலகத்தரம் வாய்ந்த அளவில் இல்லை. மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் முக்கியமான நேரத்தில் சொதப்பினால் அது இந்தியாவுக்கு பாதகமாக அமையும். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரை இந்திய அணியில் குல்தீப் யாதவ் மட்டுமே பிரதான வீரராக உள்ளார். மற்ற ஸ்பின்னர்களாக ஆல் ரவுண்டர்கள் ஜடேஜா மர்றும் அக்சர் படேல் உள்ளனர். இதில் ஜடேஜா இன்னும் நடப்பு தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட முழுமையாக 4 ஓவர்கள் பந்து வீச வில்லை. அக்சர் படேலும் ஆல் ரவுண்டர் என்பதால் அது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
காலிபிளவர் ரோஸ்ட்2 days 6 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்5 days 1 hour ago |
ஜூசி சிக்கன்1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் ஆவின் பால் விற்பனை மேலும் உயர்வு : அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
30 Jun 2024கோவை : தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
-
ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி.க்கு மாற்றாக இன்று முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் : நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது
30 Jun 2024டெல்லி : மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்கள் இன்று (ஜூலை 1-ம் தேதி) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
-
இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
30 Jun 2024விழுப்புரம் : முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
-
கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் : கல்லூரி கல்வி இயக்குனர் அறிவிப்பு
30 Jun 2024சென்னை : தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் இனி ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பையில் புதிய சாதனை: தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி சாம்பியன்
30 Jun 2024பார்படாஸ் : டி- 20 உலகக்கோப்பை வரலாற்றில் தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்ற முதல் அணி என்ற புதிய சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
-
நீட் முறைகேடு தொடர்பாக குஜராத்தில் பள்ளி உரிமையாளர் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது
30 Jun 2024காந்திநகர் : நீட் தேர்வு முறைகேடு புகாரில் குஜராத்தில் தனியார் பள்ளி உரிமையாளர் தீட்சித் படேலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
-
மண்ணை சாப்பிட்ட ரோகித்
30 Jun 2024அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று முடிந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
-
தொடர் சர்ச்சைகளை அடுத்து நடவடிக்கை: நீட் தேர்வை கணினி முறையில் நடத்த மத்திய அரசு பரிசீலனை
30 Jun 2024டெல்லி : மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இந்த ஆண்டு ஏற்பட்டன.
-
எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் டெபாசிட்தான் கேட்டார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
30 Jun 2024சென்னை : எழும்பூர் குழந்தைகள் நல அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க டெபாசிட் தான் கேட்டார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் மேலும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும் : அமைச்சர் ரகுபதி தகவல்
30 Jun 2024சேலம் : தமிழகத்தில் மாநில அரசின் பங்களிப்போடு மேலும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச டி-20 கிரிக்கெட்: கோலி, ரோகித், ஜடேஜா ஓய்வு
30 Jun 2024பார்படாஸ் : விராட் கோலியைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
-
கேதார்நாத்தில் பனிச்சரிவு
30 Jun 2024கேதார்நாத் : உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள காந்தி சரோவர் மலையில் நேற்று (ஜூன் 30 ) பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-07-2024.
01 Jul 2024 -
அகிலேஷ் யாதவுக்கு பிறந்த நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2024சென்னை : அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
01 Jul 2024சென்னை : இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்து சேவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
01 Jul 2024சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கனஅடியாக அதிகரிப்பு
01 Jul 2024சேலம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம்
01 Jul 2024சென்னை : ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
ஆளுநர் விருதுக்கான விண்ணப்பம் வரவேற்பு
01 Jul 2024சென்னை : தமிழ்நாடு கவர்னர் மாளிகையின் சார்பாக ஆளுநர் விருதுகள் 2024-க்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
-
திருப்பதி கோவிலில் பிரமோற்சவம் அக்டோபர் 4-ம் தேதி தொடங்குகிறது
01 Jul 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
-
எல்லையில் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா: தென்கொரியா
01 Jul 2024சியோல் : வட கொரியா ஏவுகணை சோதனை செய்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்து இருக்கிறது.
-
விடாமுயற்சி பஸ்ட் லுக் வெளியீடு
01 Jul 2024தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது
-
டெல்லியில் இன்று தே.ஜ. கூட்டணியின் பாராளுமன்ற கட்சி கூட்டம் நடக்கிறது : பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
01 Jul 2024புதுடெல்லி : டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பாராளுமன்ற கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை: புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்
01 Jul 2024புதுடெல்லி : புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கொடுப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
-
போர்ப்பதட்டம் எதிரொலி: லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு சவுதி அறிவுறுத்தல்
01 Jul 2024பெய்ரூட் : லெபனானில் போர் பதட்டம் நிலவுவதால் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு தங்களது நாட்டு குடிமக்களுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தியுள்ளது.