முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மதுரையில் அக். 9-ல் அ.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      தமிழகம்
EPS 2023 03 27

Source: provided

சென்னை : தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்திட வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் மதுரையில் அக்.9-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

2021-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அளவில், 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5.50 லட்சம் பணி இடங்களில் இளைஞர்களும், பெண்களும் பணியமர்த்தப்படுவார்கள்.

தமிழகக் கல்லூரிகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற தமிழக மாணவர்களின் கல்விக் கடனை, அரசே ஏற்று திருப்பிச் செலுத்தும், என்பது உள்ளிட்ட தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். 

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு மடிக் கணினி வழங்கும் திட்டம்,   தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் போன்ற திட்டங்களை  மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும். 

 தமிழகத்தை போதைப் பொருட்களின் கேந்திரமாக மாற்றியுள்ள அவல நிலையை நாட்டு மக்களிடத்தில் தோலுரித்துக் காட்டிடவும், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய  தி.மு.க. அரசைக் கண்டித்தும்,  

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் வெளிநாட்டுத் தொழில் முதலீடுகள்  குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் அக்.9-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை பழங்காநத்தம், ஜெயம் தியேட்டர், எம்.ஜி.ஆர் திடலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே. ராஜூ, ஆகியோர் துவக்கி வைப்பார்கள், நத்தம் விசுவநாதன், வி.வி. ராஜன் செல்லப்பா, ஆகியோர் பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார்கள். 

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், அ.தி.மு.க.வினரும் பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில்  அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து