முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி தமிழ் வழி கல்வி சான்றிதழ் வழக்கில் தகவல் தராத பல்கலை. பதிவாளர்கள் சேர்ப்பு: ஐகோர்ட் கிளை உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2024      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

Source: provided

மதுரை : போலி தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் வழக்கில் தகவல் தராமல் இழுத்தடிக்கும் 4 பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களை வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்த்து ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019-ல் நடத்திய குரூப் 1 தேர்வில் தொலை நிலைக்கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத சலுகை வழங்கியதை எதிர்த்து திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழ் வழிக்கல்வியில் பயின்றவர்களுக்கான சலுகை வழங்கியது சட்டவிரோதம் என அறிவித்து, போலி தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் வழங்கிய பல்கலைக் கழக அதிகாரிகள் மற்றும் போலி சான்றிதழ் அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

ஆனால், இந்த உத்தரவை நிறைவேற்றாததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி சக்திராவ் ஐகோர்ட் மதுரை கிளையில் அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு, போலி தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் தொடர்பாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், சேலம் பெரியார் பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகங்களில் இருந்து போதுமான விவரங்கள் இன்னும் வழங்கப்படாமல் இருப்பதால் விசாரணை முடியாமல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்கள் பெற்ற மாணவர்கள் தொடர்பான அடிப்படை விவரங்களைக் கூட பல்கலைக் கழகங்கள் கடந்த 2 ஆண்டுகளாக வழங்காமல் இழுத்தடித்து வருகின்றன. எனவே, இந்த 4 பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களை நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிடுகிறது. 

வழக்கு தொடர்பாக பதிலளிக்க பதிவாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த உத்தரவின் அடிப்படையில் பல்கலைக் கழகங்களில் இருந்து தேவையான ஆவணங்களை பெற லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஒருவரை நியமிக்க வேண்டும்.

விசாரணைக்குத் தேவையான விவரங்களை சேகரிக்க புலனாய்வு முகமைக்கு மேலும் கால அவகாசம் வழங்க விரும்பவில்லை. குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீதும் வழக்கு தொடரப்படும். எனவே, விசாரணையின் நோக்கத்தை விரிவுபடுத்தவும், ஆவணங்களை மறைத்து குற்றவாளிகளை பாதுகாப்பவர்களை வழக்கில் சேர்க்கவும் விசாரணை முகமைக்கு இந்த நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.

பல்கலைக்கழகங்கள் தரப்பிலிருந்து ஆவணங்களைத் தர தாமதம் செய்தால் விசாரணை முகமை சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று, சோதனை நடத்தி ஆவணங்களை சேகரிக்கலாம். வழக்கின் முன்னேற்றம் குறித்து விசாரணை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து