எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : போலி தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் வழக்கில் தகவல் தராமல் இழுத்தடிக்கும் 4 பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களை வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்த்து ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019-ல் நடத்திய குரூப் 1 தேர்வில் தொலை நிலைக்கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத சலுகை வழங்கியதை எதிர்த்து திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழ் வழிக்கல்வியில் பயின்றவர்களுக்கான சலுகை வழங்கியது சட்டவிரோதம் என அறிவித்து, போலி தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் வழங்கிய பல்கலைக் கழக அதிகாரிகள் மற்றும் போலி சான்றிதழ் அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
ஆனால், இந்த உத்தரவை நிறைவேற்றாததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி சக்திராவ் ஐகோர்ட் மதுரை கிளையில் அவமதிப்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு, போலி தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் தொடர்பாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், சேலம் பெரியார் பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகங்களில் இருந்து போதுமான விவரங்கள் இன்னும் வழங்கப்படாமல் இருப்பதால் விசாரணை முடியாமல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.
தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்கள் பெற்ற மாணவர்கள் தொடர்பான அடிப்படை விவரங்களைக் கூட பல்கலைக் கழகங்கள் கடந்த 2 ஆண்டுகளாக வழங்காமல் இழுத்தடித்து வருகின்றன. எனவே, இந்த 4 பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களை நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிடுகிறது.
வழக்கு தொடர்பாக பதிலளிக்க பதிவாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த உத்தரவின் அடிப்படையில் பல்கலைக் கழகங்களில் இருந்து தேவையான ஆவணங்களை பெற லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஒருவரை நியமிக்க வேண்டும்.
விசாரணைக்குத் தேவையான விவரங்களை சேகரிக்க புலனாய்வு முகமைக்கு மேலும் கால அவகாசம் வழங்க விரும்பவில்லை. குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீதும் வழக்கு தொடரப்படும். எனவே, விசாரணையின் நோக்கத்தை விரிவுபடுத்தவும், ஆவணங்களை மறைத்து குற்றவாளிகளை பாதுகாப்பவர்களை வழக்கில் சேர்க்கவும் விசாரணை முகமைக்கு இந்த நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
பல்கலைக்கழகங்கள் தரப்பிலிருந்து ஆவணங்களைத் தர தாமதம் செய்தால் விசாரணை முகமை சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று, சோதனை நடத்தி ஆவணங்களை சேகரிக்கலாம். வழக்கின் முன்னேற்றம் குறித்து விசாரணை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
தீபாவளி பட்டாசு கட்டுப்பாடு: பொதுமக்களுக்கான வழிமுறைகள் வெளியீடு
21 Oct 2024சென்னை : இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என தமிழக அ
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு- சென்னை இடையே சிறப்பு ரயில்
21 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு- சென்னை இடையே சிறப்பு ரெயில் இயக்கபட உள்ளது.
-
கணிப்பது கடினம்: சாம்சன்
21 Oct 2024சஞ்சு சாம்சன், ஒரு யூ டியூப் சேனல் ஒன்றிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் டோனி, விராட் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டது.
-
தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சில் 106 ரன்களில் சுருண்ட வங்கதேசம்
21 Oct 2024டாக்கா : தென் ஆப்பிரிக்கா - வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் வெறும் 106 ரன்களில் சுருண்டது வங்கதேச அணி.
-
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழகம்-டெல்லி ஆட்டம் டிரா
21 Oct 2024புதுடெல்லி : ரஞ்சி கோப்பை தொடரில் பாலோ ஆன நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணி கடைசி நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்ததால் தமிழகம் - டெ
-
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி
21 Oct 2024வயநாடு : வயநாடு மக்களவை தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரியங்கா காந்தி நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
-
குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகள்: ரபாடா புதிய சாதனை
21 Oct 2024டாக்கா : வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி ரபாடா புதிய சாதனையை படைத்
-
உலகக்கோப்பை வில்வித்தை: 5-வது முறையாக வெள்ளி வென்றார் தீபிகா குமாரி
21 Oct 2024ட்லாக்ஸ்காலா : உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் 5-வது முறையாக இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-10-2024.
22 Oct 2024 -
வரும் நவ. 24, 25-ம் தேதிகளில் ஐ.பி.எல். - 2025 மெகா ஏலத்தை சவுதியில் நடத்தகிறது பி.சி.சி.ஐ.
21 Oct 2024மும்பை : வரும் நவ. 24, 25-ம் தேதிகளில் ஐ.பி.எல். - 2025 மெகா ஏலத்தை சவுதி ரியாத் நகரில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அமித்ஷாவுக்கு பிறந்த நாள்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
22 Oct 2024புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
-
வேட்டையன் வெற்றி விழா
22 Oct 2024சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இம்மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தினை ஞானவேல் இயக்கி இருந்தார்.
-
சூடானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ராணுவ சரக்கு விமானம்
22 Oct 2024கார்டூம் : ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் சூடானின் டார்புர் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கிழக்கு லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவுடன் ஒப்பந்தம் : சீன செய்தி தொடர்பாளர் அறிவிப்பு
22 Oct 2024பெய்ஜிங் : கிழக்கு லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.
-
போலி தமிழ் வழி கல்வி சான்றிதழ் வழக்கில் தகவல் தராத பல்கலை. பதிவாளர்கள் சேர்ப்பு: ஐகோர்ட் கிளை உத்தரவு
22 Oct 2024மதுரை : போலி தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் வழக்கில் தகவல் தராமல் இழுத்தடிக்கும் 4 பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களை வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்த்து ஐகோர்ட் மதுரைக் கிளை
-
வேட்டையன் வெற்றி விழா
22 Oct 2024சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இம்மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தினை ஞானவேல் இயக்கி இருந்தார்.
-
பிரபல ரவுடி பிஷ்னோய் தலைக்கு ரூ.1.11 கோடி பரிசு: கர்னி சேனா
22 Oct 2024மும்பை : பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் தலைக்கு ரூ. 1.11 கோடி பரிசை கர்னி சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்புக்கு பெருகும் ஆதரவு : இறுதிகட்ட கருத்துக்கணிப்பில் தகவல்
22 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு திடீரென ஆதரவு பெருகி உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜார்க்கண்டில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Oct 2024புதுடெல்லி : ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
-
லெபனானில் ஹிஸ்புல்லா பதுங்கு குழியில் பல ஆயிரம் கோடி பணம், தங்கம் கண்டுபிடிப்பு: இஸ்ரேல் ராணுவம்
22 Oct 2024பெய்ரூட் : லெபனானில் உள்ள மருத்துவமனையின் கீழ் உள்ள ரகசிய பதுங்கு குழியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது
-
அருந்ததியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி நவ.7-ம் தேதி சென்னையில் பேரணி : கிருஷ்ணசாமி அறிவிப்பு
22 Oct 2024சென்னை : அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்தல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நவ.7-ம் தேதி கவர்னர் மாளிகையை நோக்கி புதிய தமிழகம் கட்ச
-
ஷூ கவரை தலையில் அணிந்திருந்த பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் : வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல்
22 Oct 2024பாட்னா : மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பீகார் சுகாதார துறை அமைச்சர் தலையில் ஷூ கவரை அணிந்திருந்த விவகாரம் குறித்து வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகி
-
வயநாடு மக்களுக்கான மிக சிறந்த பிரதிநிதி பிரியங்காதான்: ராகுல் காந்தி
22 Oct 2024புதுடெல்லி : பிரியங்காதான், வயநாடு மக்களுக்கான சிறந்த பிரதிநிதி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
-
யு.பி.ஐ. பண பரிவர்த்தனை சேவை மாலத்தீவில் அறிமுகம்
22 Oct 2024மாலே : இந்தியாவின் பணப்பரிவர்த்தனை சேவையான யு.பி.ஐ. வசதியை மத்திய அரசு உதவியுடன் மாலத்தீவில் அந்நாட்டு அதிபர் முகம்மது முய்சு அறிமுகம் செய்துள்ளார்.
-
வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை பிடித்த நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
22 Oct 2024சென்னை : வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.