எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசியுள்ள திமுக அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து, அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் வரும் 16-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்ப் பண்பாட்டில் பெண்களுக்கு அளித்து வரும் மாண்பும், மகத்துவமும் அளவிட முடியாதவை. வியப்புக்குரிய படைப்பாய், தன்னையே முழுமையாக அர்ப்பணித்து உலகம் இயங்க உந்து சக்தியாய் வாழ்பவர்கள் பெண்கள். அறிவின் உருவாய், ஆற்றலின் வடிவமாய், தாய்மைக்கு இலக்கணமாய்த் திகழ்பவர்கள் பெண்கள். இத்தகைய போற்றுதலுக்கும், பெருமைக்கும் உரிய பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில், விடியா திமுக அரசின் வனத் துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சைவ மற்றும் வைணவ சமயங்களின் குறியீடுகளை தொடர்புபடுத்தி பெண்களை எவ்வளவு கொச்சையாக பேசமுடியுமோ, அந்த அளவுக்கு கொச்சைப்படுத்திப் பேசி இருக்கிறார். ஒரு மனிதனின் மனதில் இருக்கவே கூடாத குரூர வக்கிரத்தின் உச்சம், அவருடைய பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது.
தமிழ் நாட்டினுடைய அரசியல் மேடைகளில் நாகரிகத்தை முழுமையாக அழித்து, அநாகரிகத்தைப் புகுத்தி வளர்த்த கட்சி என்றால் அது திமுக. அந்தக் கட்சியினுடைய பல பேச்சாளர்கள் அரசியல் தலைவர்களை மட்டுமின்றி, மிகமிக அநாகரிகமாக பெண்களையும், சமயங்களையும், பல்வேறு சமய நம்பிக்கை கொண்ட மக்களையும் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி பேசி வருகிறார்கள். இதில், அந்த நாளாந்தரப் பேச்சாளர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அமைச்சர் பொன்முடி வக்கிரத்தின் உச்சிக்கே சென்று பேசியிருக்கின்ற இந்த இழிவான கருத்துகள், தமிழ் நாட்டு மக்களின், குறிப்பாக பெண்களின் நெஞ்சங்களில் நெருப்பைக் கொட்டி இருக்கிறது. பொன்முடியின் இத்தகைய கீழ்த்தரமான பேச்சுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். திமுக-விற்கு, அதனுடைய வரலாறு முழுவதும் இப்படியான அநாகரிகமான நடவடிக்கைகள் பழகிப்போனது தான் என்றாலும், தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் இந்த அருவருப்பான வக்கிர சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதிலும் குறிப்பாக, பொன்முடி உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர். அவரது அநாகரிகமான பேச்சு பொதுமக்களிடையே மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
தமிழ்நாட்டினுடைய பண்பாட்டை, அரசியல் நாகரிகத்தை, மேடை நாகரிகத்தை அசிங்கப்படுத்தியும்; பெண்களின் மனங்களையும், மக்களின் மனங்களையும் புண்படுத்தியும், கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசி இருக்கின்ற திமுக அமைச்சர் பொன்முடியைக் கண்டித்தும்; தமிழ்நாட்டில் இத்தகைய அநாகரிக அரசியலுக்கு இடமில்லை என்பதை உரக்கச் சொல்லுகின்ற வகையிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியின் சார்பில், 16.4.2025 – புதன் கிழமை காலை 10 மணியளவில், சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மகளிர் தலைமைக் கழகச் செயலாளர்கள், மகளிர் சட்டமன்ற உறுப்பினர்கள், மகளிர் முன்னாள் அமைச்சர்கள், மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் மகளிர் நிர்வாகிகள், கழக மகளிர் அணி மாநில துணை நிர்வாகிகள், மகளிர் செய்தித் தொடர்பாளர்கள், மகளிர் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக மகளிர் அணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக மகளிர் உள்ளிட்ட பெண்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-04-2025
12 Apr 2025 -
தங்கம் விலை ரூ.70 ஆயிரத்தை கடந்தது
12 Apr 2025சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,770-க்கு விற்பனையானது.
-
வீடு, வாகனங்கள் கடன் வட்டியை குறைக்க வங்கிகள் நடவடிக்கை
12 Apr 2025மும்பை : ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவித்ததையடுத்து கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் அடுத்தடுத்து குறைக்கத் தொடங்கியுள்ளன.
-
தேசிய கூட்டணியில் தான் உள்ளோம்: டி.டி.வி. தினகரன் தகவல்
12 Apr 2025சென்னை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.ம.மு.க. தொடர்கிறது; ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார்.
-
2026 சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க.-வுக்கே வெற்றி: விஜய்
12 Apr 2025சென்னை, 2026 தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்துக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி.
-
அமெரிக்காவுடன் அவசர கதியில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது : மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
12 Apr 2025புதுடெல்லி : இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை அழுத்தத்தின் பேரில் துப்பாக்கி முனையில் நடத்துவது போல் அவசர கதியில் நடத்த முடியாது என்று மத்த
-
அமெரிக்காவின் வரி கொள்கையால் உலக நாடுகள் உற்சாகம்: அதிபர் ட்ரம்ப்
12 Apr 2025வாஷிங்டன், அமெரிக்காவின் வரிக் கொள்கை சிறப்பாக செயல்படுகிறது என்றும் அமெரிக்காவும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள
-
பொன்முடிக்கு இ.பி.எஸ். கடும் கண்டனம்: அ.தி.மு.க. சார்பில் போராட்டம் அறிவிப்பு
12 Apr 2025சென்னை : பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசியுள்ள திமுக அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து, அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னை, சைதாப்பேட்டை
-
காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
12 Apr 2025புதுடெல்லி, ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத குழுவின் கமாண்டர் உள்பட இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக
-
ஜூன் முதல் வாரத்தில் மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம்
12 Apr 2025சென்னை, வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மதுரையில் கட்சியின் பொதுக்குழுவை கூட்ட தி.மு.க. தலைமை திட்டமிட்டு வருகிறது.
-
சூடான்: துணை ராணுவம் தாக்குதல் 32 பேர் பலி
12 Apr 2025தர்பூர் : வடக்கு தர்பூர் மாநிலத்தின் தலைநகர் எல்-ஃபாஷரில் நேற்று முன்தினம் ராபிட் சப்போர்ட் போர்ஸஸ் எனும் துணை ராணுவப்படை நடத்திய டிரோன்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்க
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
12 Apr 2025திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. கோவிந்தா... ரங்கா... ரங்கா...
-
தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் பா.ஜ.க.வுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Apr 2025சென்னை : பா.ஜ.க. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.
-
தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 Apr 2025கொடைக்கானல் : தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
-
வரும் 21-ம் தேதி அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் இந்தியா வருகை
12 Apr 2025அமெரிக்கா : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வருகிற 24-ம் தேதி இந்தியா வருகிறார்.
-
அம்பேத்கர் பிறந்தநாளான நாளை சென்னையில் 49,542 பேருக்கு ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
12 Apr 2025சென்னை : அம்பேத்கர் பிறந்தநாளான நாளை சென்னையில் சமத்துவநாள் விழாவில் ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
-
ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்
12 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் பதிவானதாக தகவல்.
-
மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
12 Apr 2025புதுடெல்லி : மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு : 145 பில்லியன் டாலரை எட்டும்: நிதி ஆயோக்
12 Apr 2025புதுடில்லி : இந்தியாவில் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 145 பில்லியன் டாலரை எட்டும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
-
முரண்பாடுகளின் மொத்த உருவம் அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணி: காங்கிரஸ் தலைவர் விமர்சனம்
12 Apr 2025சென்னை, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி என்பது முரண்பாடுகளி்ன் மொத்த உருவம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.
-
உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா
12 Apr 2025சீனா : உலகின் மிக உயரமான பாலத்தை சீனா கட்டியுள்ளது.
-
தமிழ்நாட்டை புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்வோம்: பிரதமர் மோடி
12 Apr 2025புதுடில்லி : தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வோம் என எக்ஸ் வலைதள பக்கத்தில் தமிழில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிவு
12 Apr 2025தருமபுரி : கர்நாடகா காவிரியில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
-
காசாவுக்கான உதவிப்பொருட்கள் நிறுத்தம்: இஸ்ரேலுக்கு ஐ.நா. கடும் எச்சரிக்கை
12 Apr 2025இஸ்ரேல் : பசியால் தவிக்கும் காசா குழந்தைகளுக்கு செலும் உதவிப்பொருட்கள் அனைத்தை தடுத்த இஸ்ரேல் ஐ.நா. எச்சரிக்கை விடுத்தது.
-
கோவையில் த.வெ.க.வின் முதல் பூத் கமிட்டி மாநாடு?
12 Apr 2025சென்னை : தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பூத் கமிட்டி மாநாடு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.