முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் ஐ.பி.எல். ஆன்லைன் சூதாட்டம்: 7 பேர் கைது; ரூ.1.09 கோடி ரொக்கம் பறிமுதல்

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      தமிழகம்
Raid 2024-12-21

Source: provided

கோவை : கோவையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

7 பேர் கொண்ட கும்பல்... 

கோவை ராம்நகர் பகுதியில் உள்ள ஒரு வீ்ட்டை மையப்படுத்தி, ஒரு கும்பல் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், காவல் ஆணையரின் தனிப்படை போலீஸார், நேற்று முன்தினம் ராம்நகர் பகுதியில் தகவல் கிடைத்த வீட்டுக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அந்த வீட்டில் 7 பேர் கொண்ட கும்பல் இருந்தனர். அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரித்த போது, அவர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையப்படு்த்தி, ஆன்லைன் வாயிலாக சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர் விசாரணையில் பிடிபட்டவர்கள் சொக்கம்புதூரைச் சேர்ந்த நந்தகுமார் (32), ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (35), ஜிதேந்திரசிங் (41), காட்டூரைச் சேர்ந்த சவுந்தர் (29), அருண் (37), விபுல் (36) ஆகியோர் எனத் தெரிந்தது.

உறுப்பினர்களாக...

இச்சம்பவம் தொடர்பாக மாநகர போலீஸார் கூறும்போது, “மேற்கண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் லோட்டஸ், ஜே.டி உள்ளிட்ட சில இணையதள முகவரியை மையப்படுத்தி ஆன்லைன் சூதாட்ட தளத்தை இயக்கி வந்துள்ளனர். முதலில் தங்களுக்கு தெரிந்த நபர்கள், வாட்ஸ் அப்பில் அறிமுகம் ஆன நபர்களை இதில் உறுப்பினர்களாக சேர்த்துள்ளனர். இதில் உறுப்பினராக கட்டணம் செலுத்த வேண்டும். அந்தக் கட்டணத்தை பெற்றுக் கொண்ட பின்னர், இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு ஐடி, ரகசிய குறியீடு எண் அளித்துள்ளனர். அதைப் பயன்படுத்தி மேற்கண்ட இணையதளத்துக்குள் சென்று, கட்டணம் செலுத்தி புள்ளிகளைப் பெற வேண்டும்.

உரிய தொகை...

பின்னர், தங்களுக்கு பிடித்த அணியை தேர்வு செய்து, டாஸ் போடுவது, பவுண்டரி அடிப்பது, விக்கெட் எடுப்பது, ரன்கள் அடிப்பது என அனைத்திலும் பெட் கட்டி விளையாடியுள்ளனர். இதில் வெற்றி பெறுவர்களுக்கு அவர்களுக்கு உரிய தொகையை கொடுத்து விடுவர். கடந்த சில மாதங்களாக இதுபோன்ற மோசடியில் அவர்கள் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடமிருந்து ரூ.1.09 கோடி பணம், 2 கார்கள், 2 இருசக்கர வாகனங்கள், 12 செல்போன்கள் ஆகியவற்றை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.” என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து