எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் தலைநகரான பாரிசில் ஜூலை 26 -ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாகவும், ஹர்திக் சிங் துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 வீரர்கள் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்திய அணி ஜூலை 27-ம் தேதி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஜப்பானின் டோக்கியோவில் கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________________________________
ரஷித்கான் மேலும் ஒரு சாதனை
கிங்ஸ்டவுனில் நடந்த டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இந்தப் போட்டியில் ரஷித் கான் 4 ஓவரில் 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.
இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவிரைவாக 150 விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் படைத்துள்ளார்.ரஷித் கான் இதுவரை 92 போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 150 விக்கெட் வீழ்த்திய பட்டியலில் நியூசிலாந்தின் டிம் சவுதி 164 விக்கெட்டுடன் முதலிடத்தில் உள்ளார். வங்காளதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 149 விக்கெட்டுகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறார்.
_______________________________________________________________________
வார்னர் குறித்து யுவ்ராஜ் சிங்
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நேற்று (ஜூன் 25) ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 37 வயதான வார்னர் டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 2009-இல் அறிமுகமான வார்னர், டி20யில் 110 ஆட்டங்களில் 3,277 ரன்களையும், 112 டெஸ்ட் ஆட்டங்களில் 8,786 ரன்களையும், 161 ஒருநாள் ஆட்டங்களில் 6932 ரன்களையும் விளாசியுள்ளார். இந்நிலையில் வார்னர் ஓய்வு குறித்து முன்னாள் இந்திய வீரர் சிக்ஸர் மன்னன் யுவ்ராஜ் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்தாவது., யாருமே அமைதியான ஓய்வை விரும்பமாட்டார்கள். ஆனால் அதுதான் வாழ்க்கையின் விளையாட்டாக இருக்கிறது. உங்களது அபாரமான கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள். பந்தினை பவுன்டரிக்கு அதிரடியாக அடிப்பதிலிருந்து பாலிவுட் நடனங்கள், வசனங்கள் வரை எல்லாமே வார்னரின் பாணியில் சிறப்பாக செய்துள்ளீர்கள். பயங்கரமான தொடக்க வீரர், உற்சாகமான அணி வீரர், ஆடுகளத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உண்மையான மகிழ்விப்பவர். உங்களுடன் விளையாடியதும் ஓய்வு அறையில் பழகியதும் எனக்கு மகிழ்ச்சியானது. அழகான குடும்பத்துடன் காலம் கழிய வாழ்த்துகள் லெஜண்ட் என்றார்.
_______________________________________________________________________
இன்சமாம் திடீர் குற்றச்சாட்டு
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் கடந்த திங்கட்கிழமை அன்று ஆஸ்திரேலிய அணியை 24 ரன்களில் வென்றது இந்தியா. இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்தியா பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்திய அணியின் இடது கை பவுலரான அர்ஷ்தீப் சிங், தனது இரண்டாவது ஸ்பெல்லில் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய காரணமே பந்தை சேதப்படுத்தியதால் தான் என இன்சமாம் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
“இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 16-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அப்போது அவர் வீசிய பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. டி20 ஆட்டம் என்பதால் எப்படியும் பந்து புதிதாகவே இருந்திருக்கும். அப்படி இருக்கும் சூழலில் எப்படி இது நடந்தது. இடைப்பட்ட ஓவர்களில் பந்து அதற்கு ஏற்ற வகையில் ரெடி செய்யப்பட்டதா. நடுவர்கள் கொஞ்சம் தங்களது கண்களை திறந்து பார்க்க வேண்டும்” என இன்சமாம் கூறியுள்ளார். இது பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் தெரிவித்த நிலையில் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
காலிபிளவர் ரோஸ்ட்2 days 6 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்5 days 1 hour ago |
ஜூசி சிக்கன்1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் ஆவின் பால் விற்பனை மேலும் உயர்வு : அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
30 Jun 2024கோவை : தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
-
ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி.க்கு மாற்றாக இன்று முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் : நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது
30 Jun 2024டெல்லி : மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்கள் இன்று (ஜூலை 1-ம் தேதி) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
-
கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் : கல்லூரி கல்வி இயக்குனர் அறிவிப்பு
30 Jun 2024சென்னை : தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் இனி ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
30 Jun 2024விழுப்புரம் : முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
-
நீட் முறைகேடு தொடர்பாக குஜராத்தில் பள்ளி உரிமையாளர் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது
30 Jun 2024காந்திநகர் : நீட் தேர்வு முறைகேடு புகாரில் குஜராத்தில் தனியார் பள்ளி உரிமையாளர் தீட்சித் படேலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
-
டி-20 உலகக்கோப்பையில் புதிய சாதனை: தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி சாம்பியன்
30 Jun 2024பார்படாஸ் : டி- 20 உலகக்கோப்பை வரலாற்றில் தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்ற முதல் அணி என்ற புதிய சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
-
மண்ணை சாப்பிட்ட ரோகித்
30 Jun 2024அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று முடிந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
-
தொடர் சர்ச்சைகளை அடுத்து நடவடிக்கை: நீட் தேர்வை கணினி முறையில் நடத்த மத்திய அரசு பரிசீலனை
30 Jun 2024டெல்லி : மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இந்த ஆண்டு ஏற்பட்டன.
-
எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் டெபாசிட்தான் கேட்டார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
30 Jun 2024சென்னை : எழும்பூர் குழந்தைகள் நல அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க டெபாசிட் தான் கேட்டார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் மேலும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும் : அமைச்சர் ரகுபதி தகவல்
30 Jun 2024சேலம் : தமிழகத்தில் மாநில அரசின் பங்களிப்போடு மேலும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச டி-20 கிரிக்கெட்: கோலி, ரோகித், ஜடேஜா ஓய்வு
30 Jun 2024பார்படாஸ் : விராட் கோலியைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
-
கேதார்நாத்தில் பனிச்சரிவு
30 Jun 2024கேதார்நாத் : உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள காந்தி சரோவர் மலையில் நேற்று (ஜூன் 30 ) பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-07-2024.
01 Jul 2024 -
5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்து சேவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
01 Jul 2024சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.
-
இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
01 Jul 2024சென்னை : இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கனஅடியாக அதிகரிப்பு
01 Jul 2024சேலம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
அகிலேஷ் யாதவுக்கு பிறந்த நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2024சென்னை : அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ரஜினிகாந்தை சந்தித்த நடிகர் சங்கத்தினர்
01 Jul 2024தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் திரு.கார்த்தி, துணைத் தலைவர்கள் திரு.பூச்சி எஸ்.முருகன், திரு.கருணாஸ் ஆகியோர் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தி
-
ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம்
01 Jul 2024சென்னை : ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
ஆளுநர் விருதுக்கான விண்ணப்பம் வரவேற்பு
01 Jul 2024சென்னை : தமிழ்நாடு கவர்னர் மாளிகையின் சார்பாக ஆளுநர் விருதுகள் 2024-க்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
-
எல்லையில் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா: தென்கொரியா
01 Jul 2024சியோல் : வட கொரியா ஏவுகணை சோதனை செய்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்து இருக்கிறது.
-
போர்ப்பதட்டம் எதிரொலி: லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு சவுதி அறிவுறுத்தல்
01 Jul 2024பெய்ரூட் : லெபனானில் போர் பதட்டம் நிலவுவதால் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு தங்களது நாட்டு குடிமக்களுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தியுள்ளது.
-
விடாமுயற்சி பஸ்ட் லுக் வெளியீடு
01 Jul 2024தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது
-
திருப்பதி கோவிலில் பிரமோற்சவம் அக்டோபர் 4-ம் தேதி தொடங்குகிறது
01 Jul 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
-
தலைவர் இரா. சம்பந்தன் காலமானார் : பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
01 Jul 2024இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின்