எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Parlimanet 2024-06-30](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/01/Parlimanet_2024-06-30.jpg?itok=vK7DGBCf)
Source: provided
புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவையில் ராகுலின் பேச்சுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட பதிலுக்கு காங்கிரஸ் எம்.பி.க்களும் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
எம்.பி.,க்கள் எதிர்ப்பு...
லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சிவபெருமான், இயேசு, குருநானக் உள்ளிட்ட படங்களை காண்பித்து பேசினார். அவையின் விதிப்படி எந்தவொரு மத கடவுளின் படத்தையும் காண்பிக்க கூடாது என பா.ஜ., எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ராகுல் பேசியதாவது., சிவபெருமானுடன் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு உள்ளது. நாம் அனைவரும் பிறக்கிறோம், இறக்கிறோம். ஆனால் பிரதமர் மோடி பயாலஜிக்கலாக பிறக்காதவர்.
அகிம்சையை...
பிரதமர் மோடி ஒட்டுமொத்த இந்து மதத்தின் பிரதிநிதி அல்ல. ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமல்ல, நமது அனைத்து மதங்களும் துணிச்சலை பற்றி, அகிம்சையை பற்றிதான் பேசுகின்றன. இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களை பரப்பும் மதம் அல்ல. பா.ஜ., 24 மணி நேரமும் வன்முறை, வெறுப்பு ஆகியவவை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறது. இந்து மதம் அகிம்சையை போதிக்கிறது; வெறுப்பை அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் கண்டனம்...
இடைமறித்த பிரதமர் மோடி, ''ராகுலின் பேச்சு ஒட்டுமொத்த இந்துக்களின் மீதான தாக்குதல். இந்துக்களை வன்முறையாளராக காட்ட ராகுல் முயற்சிக்கிறார்'' எனக் கண்டனம் தெரிவித்தார். லோச்சபாவில் ஒருவர் பேசும்போது பிரதமர் மோடி குறுக்கிட்டு பேசுவது இதுவே முதல்முறை. பின்னர் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது., நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள், தங்களை கர்வமுடன் இந்துக்கள் என கூறி வருகின்றனர். ராகுல் தனது பேச்சுக்கு இந்த அவையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். எமர்ஜென்சி காலத்தில் தேசத்தையே சிறையில் அடைத்தவர்களுக்கு அபயத்தை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை.
விதி தெரியவில்லை...
டெல்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் காங்., ஆட்சி காலத்தில் தான் படுகொலை செய்யப்பட்டனர். அவையை இப்படி நடத்த முடியாது, ராகுலுக்கு விதி தெரியவில்லை என்றால், விதியை பற்றி அவருக்கு டியூஷன் நடத்துங்கள். படத்தை காட்டக்கூடாது என்று தெரிவித்த பிறகு மீண்டும், மீண்டும் அவர் இவ்வாறு செய்வது ஏற்புடையதல்ல. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
சமாஜ்வாதி எம்.பி.க்கு...
ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் கட்சி எம்.பி.,க்கள் இந்திய அரசியலமைப்பு சாசனத்தை சுட்டிக்காட்டி வலியுறுத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுப்ட்டனர். இதனால் அவை பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் மீண்டும் சிவபெருமானின் படத்தை எடுத்துக் காட்டியதுடன், அயோத்தியை உள்ளடக்கிய தொகுதியில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.,க்கு ராகுல் வாழ்த்து தெரிவித்தார். மேலும், ''அயோத்தியில் ராமர் பிறந்த மண்ணிலேயே பா.ஜ.,விற்கு பாடம் புகட்டப்பட்டுள்ளது'' என்றார். ராகுலின் பேச்சின்போது இடையிடையே மைக் அணைக்கப்பட்டதால், 'மைக் கன்ட்ரோல் யாரிடம் உள்ளது? அயோத்தி என்ற பெயரை சொன்ன உடனே என்னுடைய மைக் அணைக்கப்பட்டுவிட்டது.' என ராகுல் கேள்வி எழுப்பினார்.
பயமுறுத்தும்...
இதற்கு பதிலளித்த சபாநாயகர், ''நீங்கள் பேசுவதற்கு எழும்போது ஒருபோதும் உங்களுடைய மைக்க அணைக்கப்படுவதில்லை. இதே நடைமுறைதான் பழைய பார்லி.,யிலும் சரி, புதிய பார்லி.,யிலும் சரி'' என பதிலளித்தார். தொடர்ந்து ராகுல் பேசியதாவது., அயோத்தி அமைந்துள்ள தொகுதியில் போட்டியிட வேண்டும் என மோடி 2 முறை முயற்சி செய்தார். ஆனால், அயோத்தியில் போட்டியிட வேண்டாம், மக்கள் தோற்கடித்துவிடுவார்கள் என கணிப்பாளர்கள் எச்சரித்தனர்.
நல்ல தீர்ப்பை....
ராமர் கோயில் திறந்துவைக்கப்பட்டபோது அம்பானி, அதானி மட்டுமே அங்கு இருந்தனர்; சிறு வியாபாரிகளை தெருவில் வீசினர். அயோத்தி மக்களின் நிலத்தை பறித்துவிட்டனர்; வீடுகளை இடித்து விட்டனர். கோயில் திறப்பு விழாவில் அங்குள்ள மக்கள் கூட வரவில்லை. அதனால் தான் அயோத்தி மக்கள் பா.ஜ.,விற்கு நல்ல தீர்ப்பை அளித்தனர். இவ்வாறு பேசினார்.
கற்பிக்க வேண்டும்...
அப்போது பிரதமர் மோடி எழுந்து, ''அரசியலமைப்பு சட்டம் எதை சொல்கிறதோ . ஜனநாயகத்தை பற்றியும், அரசியல் சாசனத்தை பற்றியும் ராகுலுக்கு கற்பிக்க வேண்டும்'' என்றார்.
பணம் படைத்த...
தொடர்ந்து, ராகுல் பேசியதாவது., பணம் படைத்தவர்களுக்கான தேர்வாக நீட் அமைந்துவிட்டது. நீட் தேர்வின் மூலம் மருத்துவக்கல்வி வியாபாரம் ஆகிவிட்டது. தொழில்முறை தேர்வுகளை எல்லாம் நீங்கள் வணிகமுறை தேர்வுகளாக ஆக்கிவிட்டீர்கள். 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. காங்., உங்களை கண்டு பயப்படவில்லை. ஆனால் நீங்கள் காங்கிரசை பார்த்து பயப்படுகிறீர்கள். நீட் தேர்வில் ஒருவர் 'டாப்பர்' ஆக வரமுடியும். ஆனால், அவரிடம் பைசா இல்லையென்றால் மருத்துவம் படிக்க முடியாது.
விவாதம் நடைபெற...
இது பணக்கார குழந்தைகளுக்காக கொண்டு வரப்பட்டது. இத்தேர்வின் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை ஈட்டுகிறார்கள். நீட் தேர்வு குறித்து ஜனாதிபதி உரையில் ஒரு வார்த்தைக்கூட இடம்பெறவில்லை. நீட் பற்றி ஒருநாள் விவாதம் நடைபெற வேண்டும். நீட் தேர்வுக்காக மாணவர்கள் ஆண்டு கணக்கில் தயாராகி வருகின்றனர். மாணவர்களுக்கு, குடும்பத்தினர் பண ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் தேவையான ஆதரவை வழங்குகின்றனர். ஆனால் மாணவர்கள் இன்று நீட் தேர்வை நம்ப முடியாத சூழல் தான் நிலவுகிறது.
எங்களது கடமை...
இந்த தேர்வு பணக்கார மாணவர்களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. நான் எதிர்க்கட்சி தலைவரான பிறகு இதுவரை உணராத சிலவற்றை உணர்ந்தேன். காங்கிரசை மட்டுமல்ல, இங்குள்ள ஒவ்வொரு எதிர்க்கட்சியையும் நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறையை ஏவி விடும்போதும் அவர்களை பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை இவ்வாறு ராகுல் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
புரோட்டீன் லட்டு![]() 1 min 58 sec ago |
காலிபிளவர் ரோஸ்ட்![]() 4 days 3 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 6 days 23 hours ago |
-
உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த பயங்கரம்: வழிபாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி : விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு
02 Jul 2024ஹாத்ரஸ் : உத்தரப்பிரதேசத்தில் வழிபாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 120 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பார்லி.யில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சியினரின் முழக்கத்திற்கு மத்தியில் பிரதமர் மோடி பதிலுரை : என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி வலுவாக உள்ளது - ஒட்டுன்ணி கட்சி காங்கிரஸ் என தாக்கு
02 Jul 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சியினரின் முழக்கத்திற்கு மத்தியில் பிரதமர் மோடி நேற்று பதிலளித்து ப
-
2026 டி-20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி நேரடியாக தகுதி : மேலும் 19 அணிகளும் பங்கேற்பு
02 Jul 2024துபாய் : 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ள நிலையில் இந்திய அணி நேரடியாக தகுதிப்பெற்றுள்ளது.
-
வெற்றிக்கோப்பையுடன் இன்று தாயகம் திரும்பும் இந்திய அணி
02 Jul 2024பார்படாஸ் : டி-20 உலக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வெற்றிக்கோப்பையுடன் இன்று தாயகம் திரும்புகிறது.
-
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு காண உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
02 Jul 2024சென்னை : தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-07-2024.
03 Jul 2024 -
நீட் முறைகேடு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் வரும் 8-ம் தேதி முக்கிய விசாரணை
02 Jul 2024புதுடெல்லி : நீட் தேர்வு தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு விசாரிக்க உள்ளது.
-
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி: தமிழக வீரர் உள்ளிட்ட 3 பேருக்கு இடம்
02 Jul 2024மும்பை : இந்தியா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன.
-
அனைவருக்கும் நன்றி: பிரியாவிடை பெற்றார் பயிற்சியாளர் டிராவிட்
02 Jul 2024BOX - 1 உள்ளது...
-
முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
02 Jul 2024புதுடெல்லி : தென்மேற்குப் பருவமழை, வழக்கத்தை விடவும் ஆறு நாள்கள் முன்னதாக, நாடு முழுவதும் தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சாதனை படைத்த 2024 - டி-20 உலகக்கோப்பை
02 Jul 20242024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 1- ந் தேதி தொடங்கி ஜூலை 29-ந் தேதி முடிவடைந்தது. இதில் இறுதிபோட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதியது.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: மணீஸ் சிசோடியா, கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
03 Jul 2024புது டெல்லி, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஸ் சிசோடியா மற்றும் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான காவிதாவின் நீதிம
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3,000 கனஅடியாக அதிகரிப்பு
03 Jul 2024சேலம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
-
சென்னை அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் : கோட்டூர்புரம் போலீசார் விசாரணை
03 Jul 2024சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை கோட்டூர்புரம் போலீசார் தேடி வருகின்றனர்.
-
தமிழகத்தில் 9-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
03 Jul 2024சென்னை : தமிழகத்தில் 9-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்திற்கு கிருஷ்ணா நீரை திறக்க ஆந்திர அரசு நிபந்தனை
03 Jul 2024சென்னை : கிருஷ்ணா கால்வாய் பராமரிப்பு கட்டண நிலுவைத்தொகை, 129 கோடி ரூபாயை விடுவித்தால், தமிழகத்திற்கு நீர் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என ஆந்திர அரசு கூறி
-
விக்கிரவாண்டி தொகுதியில் 3 நாட்கள் அமைச்சர் உதயநிதி தீவிர பிரச்சாரம்
03 Jul 2024சென்னை : இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 6,7,8 தேதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக தி.மு.க.
-
இடைவிடாது பெய்யும் கனமழை: மணிப்பூரில் இன்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை
03 Jul 2024இம்பால், மணிப்பூரில் கனமழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பள்ளிகளுக்கு இன்று வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
-
போதைப்பொருள் கடத்தும் இடமாகி விட்டதா சிறைச்சாலை? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
03 Jul 2024சென்னை : தமிழக சிறைச்சாலைகள், தற்போது பாதுகாப்பாக போதைப்பொருட்கள் விற்பனை மேற்கொள்ளும் இடமாக மாறி விட்டதா? என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
-
நீட் தேர்வு தேவையில்லை: மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு
03 Jul 2024சென்னை : நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது.
-
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தி.மு.க. மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்
03 Jul 2024சென்னை : நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் நேற்று தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
மம்தாவுக்கு எதிராக கவர்னர் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று ஒத்திவைப்பு
03 Jul 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக அம்மாநில கவர்னர் ஆனந்த போஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: கஜகஸ்தான் சென்றடைந்த அதிபர்கள் புடின், ஜி ஜின்பிங்
03 Jul 2024அஸ்டானா, கஜகஸ்தான் நாட்டின் அஸ்டானா நகரில் நேற்று முதல் 2 நாட்களுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது.
-
இரு மாநில பிரச்சினைக்கு தீர்வு காண ரேவந்த் ரெட்டிக்கு சந்திரபாபு அழைப்பு
03 Jul 2024அமராவதி : இரு மாநில பிரச்சினைக்கு தீர்வு காண தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
-
சபரிமலை கோவில் புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவருவின் மகன் நியமனம்
03 Jul 2024திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவருவின் மகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.