எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதும் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியதும் மக்களவையில் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும் என கேள்வி நேரம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் முறையிட்டன.
தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், "நீட் முறைகேடுகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும்" என்று பேசினார். தொடர்ந்து திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி, "நீட் தேர்வால் அனிதா தொடங்கி பல மாணவர்கள் உயிரிழந்துள்ளதால் இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "ஓரிரு இடங்களில் மட்டும்தான் நீட் முறைகேடு நடந்துள்ளது. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த பாஜக அரசும் அதற்கு பொறுப்பேற்கும்." என்றார்.
இதன்பின் எழுந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "வினாத்தாள் கசிவுகளில் இந்த அரசு புதிய சாதனைகளை படைத்துள்ளது. நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். விசாரணையில் பல தகவல்கள் அம்பலமாகின்றன. கைதுகள் நடக்கின்றன. தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக இருக்கும் வரை நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு நீதி கிடைக்காது" என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், "சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளின்படி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை, ஆனால் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச முதல்வராக இருந்தபோது எத்தனை வினாத்தாள் கசிவுகள் நடந்தன என்ற பட்டியல் என்னிடம் உள்ளது என்றார்.
இப்படியான சூடான விவாதங்களுக்கு மத்தியில் எழுந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "இந்தியாவின் தேர்வு முறைகளில் பெரிய பிரச்சினை உள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அமைச்சர் தன்னைத் தவிர மற்ற அனைவரையும் குற்றம் சாட்டியுள்ளார். இங்கு என்ன நடக்கிறது என்பதன் அடிப்படைகள் அவருக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். பணம் இருந்தால், தேர்வுகளை விலைக்கு வாங்க முடியும் என்ற சூழல் நிலவுகிறது. இந்த உணர்வு எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கும் இருக்கிறது. இந்த சிக்கலை சரிசெய்ய அரசாங்கம் என்ன செய்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு "நீங்கள் கத்தினால் பொய்கள் உண்மையாகிவிடாது. நாட்டின் பரீட்சை முறை குப்பை என்று அழைக்கும், ராகுல் காந்தியின் பேச்சை நான் கண்டிக்கிறேன். 2010ல் காங்கிரஸ் அரசின் கல்விச் சீர்திருத்தங்களுக்கான மூன்று மசோதாக்களை அமைச்சர் கபில் சிபல் கொண்டு வந்தார். யாருடைய அழுத்தத்தால் அந்த மசோதா வாபஸ் பெறப்பட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அழுத்தத்தால் வாபஸ் பெறப்பட்டதா?" என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 2 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்2 weeks 5 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.3 weeks 1 day ago |
-
வரும் பிப்ரவரிக்குள் அ.தி.மு.க. ஒன்றிணையும்: வைத்திலிங்கம்
15 Sep 2024தஞ்சாவூர் : வரும் பிப்ரவரி மாதத்திற்குள் அ.தி.மு.க. கண்டிப்பாக ஒன்றிணையும் என்று வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
15 Sep 2024சென்னை : பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அண்ணாசிலை அலங்கரித்து வைக்கப்பட்டிரு
-
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்
15 Sep 2024சென்னை : உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அன
-
ஓணம் பண்டிகை: முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
15 Sep 2024சென்னை : கேரள மக்களின் திருவிழாவான ஓணம் பண்டிகை நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க.
-
தொடர் விடுமுறை: திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
15 Sep 2024திருச்செந்தூர் : தொடர் விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் அதிகரித்து காணப்பட்டது.
-
தி.மு.க. கூட்டணியை விட்டு திருமாவளவன் போக மாட்டார் : குமரியில் சபாநாயகர் அப்பாவு பேட்டி
15 Sep 2024குமரி : தி.மு.க. கூட்டணியை விட்டு திருமாவளவன் போக மாட்டார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
ஓணம் பண்டிகை: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
15 Sep 2024புதுடெல்லி : ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சீதாராம் யெச்சூரிக்கு புகழ் வணக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
15 Sep 2024புதுடெல்லி : சீதாராம் யெச்சூரியின் உருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்
-
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்: எடப்பாடி டுவிட்டரில் புகழாரம்
15 Sep 2024சென்னை : முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் நேற்று தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டது.
-
தமிழக வெற்றிக்கழக மாநாடு தேதி விரைவில் அறிவிப்பு
15 Sep 2024சென்னை : தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
-
அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள தி.மு.க. பவள விழா இலட்சினை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
15 Sep 2024சென்னை : சென்னை அண்ணா அறிவாலயம் கட்டிடத்தின் முகப்பில் நிறுவப்பட்டுள்ள தி.மு.க. பவள விழா இலட்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
நைஜீரியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 64 விவசாயிகள் 64 பலி
15 Sep 2024லாகோஸ் : நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் விவசாயிகள் 64 பேர் பலியாகினர்.
-
பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
15 Sep 2024பாரிஸ் : பிரான்சில் இருந்து இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற 8 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.
-
இன்று 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்: தமிழகத்தில் 21-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2024சென்னை : தமிழத்தில் இன்று 5 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், வரும் 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை
-
தனியார் விண்வெளி பயணம் நிறைவு: பூமிக்கு திரும்பியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம்
15 Sep 2024வாஷிங்டன் : தனியார் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் நேற்று பூமிக்கு திரும்பியுள்ளது.
-
இந்தி மொழியில் மருத்துவ படிப்பு கற்றுத் தரப்படும் : சத்தீஸ்கர் முதல்வர் தகவல்
15 Sep 2024ராய்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்தி மொழியில் மருத்துவப் படிப்பான எம்.பி.பி.எஸ்., கற்றுத்தரப்படும் என்று அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறி உள்ளார்.
-
வங்கதேசம், ரோஹிங்கியாக்களின் ஊடுருவலால் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு பெரும் அச்சுறுத்தல்: பிரதமர் மோடி பேச்சு
15 Sep 2024ராஞ்சி : வங்கதேசம்,ரோஹிங்கியாக்களின் ஊடுருவலால் ஜார்கண்ட் மாநிலத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி முதல்வர் பதவியில் இருந்து 2 நாளில் விலகுகிறேன் : அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
15 Sep 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் பதவியில் 2 நாளில் விலகவுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
-
டைமண்ட் லீக் இறுதி சுற்று: நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி
15 Sep 2024பிரஸ்சல்ஸ் : டைமண்ட் லீக் இறுதி சுற்றில் 6 சுற்றுகளின் முடிவில் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
-
வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கியது இலங்கை: அக். முதல் அமல்
15 Sep 2024கொழும்பு : வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கியுள்ள இலங்கை அரசு அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
-
ஸ்ரீரங்கத்தில் வரும் 20-ம் தேதி நெல் அளவைத் திருநாள்
15 Sep 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆவணி மாத நெல் அளவை திருநாள் வரும் 20-ம் தேதி நடக்கிறது.
-
வீடுகள் தோறும் அத்தப்பூ கோலம்: கேரளாவில் களைகட்டியது ஓணம் கொண்டாட்டம்
15 Sep 2024திருவனந்தபுரம் : கேரளாவில் ஓணம் பண்டிகையின் 10-வது நாளான நேற்று சிகர நிகழ்வான திருவோண கொண்டாட்டம் வீடுகள் தோறும் அத்தப்பூ கோலமிட்டு பண்டிகை களைகட்டி காணப்பட்டது.&
-
ஐதராபாத்தில் போக்குவரத்தை சீரமைக்க திருநங்கைகள் படை
15 Sep 2024திருப்பதி : ஐதராபாத் மாநகர பகுதியில் போக்குவரத்து சீரமைக்க திருநங்கைகள் படை உருவாக்கப்பட்டுள்ளது.
-
ஜார்க்கண்டில் 6 வந்தே பாரத் புதிய ரெயில் சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
15 Sep 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்திற்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி ராஞ்சியில் 6 புதிய வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார்.
-
புதிய சாட்டிலைட்டை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய ஈரான்
15 Sep 2024டெக்ரான் : ஈரான் ஏவிய ராக்கெட் மூலம் புதிய ஆராய்ச்சி சாட்டிலைட் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.