முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற நிலைக்குழுவில் யார், யாருக்கு என்ன பொறுப்பு?

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2024      இந்தியா
Rahul-Gandhi-2024-08-22

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற நிலைக்குழுக்களுக்கான துறைவாரியான தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், சசி தரூர், பா.ஜ., எம்.பி., கங்கனா ரனாவத் ஆகியோருக்கு பதவி வழக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவி மிக முக்கியமானது. மொத்தம் 24 துறைகளுக்கு நிலைக்குழுக்கள் உள்ளன. இந்த குழுவில் 31 எம்.பி.க்கள் உறுப்பினர்களாக இருப்பர். அதில் 21 பேரை லோக்சபா சபாநாயகரும், 10 பேரை ராஜ்யசபா தலைவரும் பரிந்துரைப்பர்.  அமைச்சர்கள் இக்குழுவின் உறுப்பினராக முடியாது. அதன்படி நேற்று 24 துறைகளுக்கான நிலைக்குழு தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் முழுவிபரம்  வருமாறு:

 லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு பாதுகாப்பு நிலைக்குழுவில் உறுப்பினராக இடம் அளிக்கப்பட்டுள்ளது.  வெளியுறவு துறை நிலைக்குழு தலைவராக காங்கிரசின் சசிதரூர், கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான நிலைக்குழு தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்,  விவசாயம், கால்நடை பராமரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் தொடர்பான நிலைக்குழு தலைவராக பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஒடிசா எம்.பி சப்தகிரி சங்கர் கிராமப்புற மற்றும் பஞ்சாயத்து தொடர்பான நிலைக்குழு தலைவராகவும்,   பா.ஜ.,வின் ராதா மோகன் சிங் பாதுகாப்பு குழுவின் தலைவராகவும், நிதித்துறைக்கான நிலைக்குழு தலைவராக பா.ஜ., எம்.பி., மஹ்தாப் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்   நிலக்கரி, சுரங்கம் மற்றும் உலோகத்துறை நிலைக்குழு தலைவராக முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பக் குழு தலைவராக இருப்பார்.

மண்டியைச் சேர்ந்த பா.ஜ., எம்.பி., கங்கனா ரனாவத் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப குழுவின் உறுப்பினராகவும், உள்துறை நிலைக்குழு தலைவராக பா.ஜ.,வின் ராஜா மோகன் தாஸ் அகர்வாலும்,  எரிசக்தி மற்றும் பெட்ரோலியம் ஆகிய துறைகளுக்கான நிலைக்குழு தலைவர்களாக சிவசேனாவின் ஸ்ரீரங் அபா பர்னெ மற்றும் தேசியவாத காங்கிரசின் சுனில் தத்கரேவுக்கு வழங்கப்பட்டுள்ளன.  

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த கோபால் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை குழுவிற்கு தி.மு.க.,வின் திருச்சி சிவா தலைமை தாங்குவார்.   ரயில்வே தொடர்பான குழுவுக்கு பா.ஜ.,வின் சி.எம்.ரமேஷ் தலைமை தாங்குவார்.  திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கீர்த்தி ஆசாத் ரசாயனம் மற்றும் உரங்கள் தொடர்பான குழுவுக்கு தலைவராக இருப்பார்.  நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகம் தொடர்பான குழுவின் தலைவராக தி.மு.க.,வின் கனிமொழி இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து