எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்? என ஆந்திர அரசுக்கு கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று திருப்பதி லட்டு தொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்துள்ளது.
கலப்படமானதாக...
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்தபோது, திருப்பதி லட்டு தயாரிக்க கொள்முதல் செய்யப்பட்ட நெய், கலப்படமானதாக இருந்ததாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி இருந்தார். மீன் எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்டவை கலக்கப்பட்ட நெய் கொள்முதல் செய்யப்பட்டது ஆய்வக பரிசோதனையில் உறுதியாகி இருப்பதாக ஆந்திர அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு தழுவிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருப்பதி கோயிலில் பரிகார பூஜை செய்யப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டில்....
கலப்பட நெய் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஜெகன் மோகன் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி, வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத், ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த மனுக்கள் நேற்று (செப்.30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
நீதிபதிகள் கேள்வி...
நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விஸ்வநாதன் ஆகியோர் வழக்கை விசாரித்தனர். ஆந்திரப் பிரதேச அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும், திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழக்கறிஞர் சித்தார்த் லுத்ராவும் ஆஜராகினர். லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேட்டனர். இதற்குப் பதில் அளித்த திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, ‘இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்’ என பதில் அளித்தார்.
பத்திரிகைகளுக்கு...
“அப்படியானால் உடனடியாக இது குறித்து ஏன் பத்திரிகைகளுக்கு தெரிவிக்க வேண்டும்? மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று நீதிபதி கவாய் தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த சித்தார்த் லுத்ரா, லட்டு ருசி சரியில்லை என்று மக்கள் புகார் கூறியதாகக் குறிப்பிட்டார். “அப்படியானால், லட்டுவில் அசுத்தமான பொருள் உள்ளதா என்பதைக் கண்டறிய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதா?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் நீதிபதி விஸ்வநாதன், “அசுத்தமான நெய் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
சோதனைக்கு...
ஆந்திரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “இந்த மனுக்கள் (இறை) நம்பிக்கை அற்றவர்களின் மனுக்கள் அல்ல. முந்தைய ஆட்சியின் தவறு, தற்போதைய அரசாங்கத்தைத் தாக்குகிறது” என்று வாதிட்டார். "லட்டு தயாரிப்புக்கு நெய் உரிய தரத்தில் இல்லாதபோது சோதனைக்கு அனுப்பினோம். 2-வது முறையும் சோதனைக்கு அனுப்பினோம். பின்னர் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது" என ஆந்திர அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆய்வு முடிவுகள்...
முகுல் ரோஹத்கிக்கு பதில் அளித்த நீதிபதி பி.ஆர்.கவாய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது., திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும்போது, முதல்வர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள், ஏன் இந்த விவகாரத்தை நேரடியாக ஊடகங்களிடம் எடுத்துச் சென்றீர்கள்? எஸ்ஐடி குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு முன் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டிய அவசியம் என்ன? லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
தெளிவாக இல்லை...
“அரசியல் சாசனப் பதவி வகிப்பவர்கள்,கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். இதனை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. ஆந்திர அரசு, சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. முடிவு வரும் வரை காத்திருக்காமல் பத்திரிகைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டார். மேலும், திருப்பதி லட்டு பிரசாதத்தில் நீங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெளிவானதாக இல்லை. ஆய்வு மாதிரியில் பயன்படுத்தப்பட்ட நெய்தான் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என இதில் குறிப்பிடப்படவில்லை. திருப்பதி லட்டு விவகாரத்தில் கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது. மத உணர்வுகளை மதிக்க வேண்டும், என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்5 days 12 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 10 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-09-2024.
30 Sep 2024 -
த.வெ.க. கொடியில் யானை: பகுஜன் கட்சி புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்
30 Sep 2024சென்னை : தமிழக வெற்றிக்கழக கொடியில் யானை இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி லட்டு விவகாரம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
30 Sep 2024புதுடெல்லி : திருப்பதி பிரசாத லட்டு விவகாரத்தில் கடவுளை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண
-
மழைநீர் கால்வாயில் விழுந்து ஒருவர் உயிரிழந்ததற்கு நிர்வாக சீர்கேடே காரணம்: எடப்பாடி
30 Sep 2024சென்னை : மழைநீர் கால்வாயில் விழுந்து ஒருவர் உயிரிழந்ததற்கு நிர்வாகச் சீர்கேடே காரணம் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
நவம்பரில் வெளியாகும் கிளாடியேட்டர்-2
30 Sep 2024வரலாற்றுத் திரைப்படங்களுக்கும், போர்க்கள காட்சிகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்து வரும் படம் ‘க்ளாடியேட்டர்’. ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ .
-
டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 4-வது இடம்பிடித்தார் ஜுக்கர்பெர்க் : முதலிடத்தில் எலான்மஸ்க்
30 Sep 2024நியூயார்க் : உலகளவில் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
நடிகர் ஜெயராம் தொடங்கி வைத்த பாரத் யாத்ரா
30 Sep 2024ஸ்ரீகோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் 'Social Inclusion of Persons with Disabilities' என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ
-
நடிகர் ஜெயராம் தொடங்கி வைத்த பாரத் யாத்ரா
30 Sep 2024ஸ்ரீகோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் 'Social Inclusion of Persons with Disabilities' என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ
-
தொடர் மழை எதிரொலி: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 13,000 கனஅடியாக அதிகரிப்பு
30 Sep 2024தருமபுரி : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலியால் ஒகேனக்கல்லில் நேற்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
மயான சாம்பலில் ரூ.377 கோடி வருவாய் ஈட்டிய ஜப்பான் அரசு
30 Sep 2024டோக்கியோ : இறந்தவர்களின் சாம்பலில் உள்ள உலோகங்களை விற்பனை செய்து ஜப்பான் அரசு ரூ.377 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
காஷ்மீரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்: பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
30 Sep 2024ஜம்மு, ஜம்மு காஷ்மீரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
-
காவிரிப் பிரச்சினையில் அரசியல் கலக்காதீர்கள்: மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி கருத்து
30 Sep 2024திருச்சி, காவிரி பிரச்சினையில் அரசியல் கலக்கக் கூடாது என்று மத்திய கனரக தொழில் மற்றும் உருக்குத் துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
-
லெபனானில் மீண்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: 105 பேர் பலி
30 Sep 2024பெய்ரூட் : லெபனானில் மீண்டும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 105 பேர் கொல்லப்பட்டனர்.
-
கலப்பட நெய் விவகாரம்: திருமலையில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு
30 Sep 2024திருப்பதி : கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் நேற்று 3-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.
-
நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது : பிரதமர் மோடி வாழ்த்து
30 Sep 2024புதுடெல்லி : பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
ரத்ததான மையங்களை கண்காணிக்க வலைதளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
30 Sep 2024சென்னை, இரத்த தான மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக e-RaktKosh என்ற வலைதளம் செயல்பாட்டில் உள்ளது என்று ரத்ததான தின செய்தியில் முதல்வர் மு.க.
-
யா’ அல்ல ‘யெஸ்’ சொல்லுங்கள்: சுப்ரீம் கோர்ட் காபிஷாப் இல்லை: மனுதாரரை எச்சரித்த தலைமை நீதிபதி
30 Sep 2024புதுடெல்லி : 'யா' அல்ல 'யெஸ்' என்று சொல்லுங்கள்.
-
கைத்துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க முன்னாள் எம்.பி.க்களுக்கு இலங்கை அரசு உத்தரவு
30 Sep 2024கொழும்பு : கைத்துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க முன்னாள் எம்.பி.க்கள் 100 பேருக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
-
பாலியல் வழக்கு: நடிகர் சித்திக்கை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை
30 Sep 2024புது டெல்லி, பிரபல மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமின் வழங்கியும், கைது செய்ய தடை விதித்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர்: டிரம்ப்
30 Sep 2024வாஷிங்டன் : ஜோ பைடனைப் போன்று கமலா ஹாரிசும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.
-
ரபேல் கொள்முதல் குறித்து பேச்சு: பிரான்ஸ் சென்றார் அஜித் தோவல்
30 Sep 2024புது டெல்லி, ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். &nb
-
பிரதமர் மோடி குறித்த கருத்து வெறுக்கத்தக்கது : கார்கேவுக்கு அமித்ஷா கண்டனம்
30 Sep 2024புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி குறித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்து முற்றிலும் வெறுக்கத்தக்கது, அவமானகரமானது என்று பா.ஜ.க.
-
பாராட்டு மழையில் லப்பர் பந்து படக்குழு
30 Sep 2024பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் லப்பர் பந்து.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,284 கனஅடியாக அதிகரிப்பு
30 Sep 2024சேலம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,284 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
என்னை சந்திக்க சென்னைக்கு வருவதை தொண்டர்கள் தவிர்க்கவும்: துணை முதல்வர் உதயநிதி வேண்டுகோள்
30 Sep 2024சென்னை, என்னை சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கட்சித் தொண்டர்கள் தவிர்க்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.