எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காட்மாண்டு, அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 3 நாள்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தலைநகர் காத்மாண்டு உருக்குலைந்து காணப்படுகிறது. இதுவரை உயிரிழப்பு 200-ஐ தாண்டியுள்ளது.
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை 204 பேர் பலியானதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. 33 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமெனவும் அஞ்சப்படுகிறது. “காத்மாண்டு பள்ளத்தாக்கில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளப்பெருக்கு இது” என செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச சம்மேளனத்தின் பொதுச்செயலர் ஜெகன் சேப்பகெயின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் மூன்றாவது நாளாக நேற்று (செப்.30) தொடருந்து நடைபெற்றன. தலைநகர் காத்மாண்டுவில் நூற்றுக்கணக்கான மக்கள் உணவு, பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமலும், சுகாதார வசதிகளின்றியும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நிலச்சரிவுகளால் காத்மாண்டுவை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் காத்மாண்டுவுக்கு செல்லும் உணவு உள்பட உணவுப் பொருள்களின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக, காய்கறிகள் உள்பட உணவுப் பொருள்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
காத்மாண்டுவின் முக்கிய நீராதாரமான பாகமதி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.இதனிடையே, கடந்த 3 நாள்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் நேபாளத்தில் 20 நீர் மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இதன்காரணமாக, 1,100 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காத்மாண்டுவிலும் பிற பகுதிகளிலும் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேபாள பிரதமர் பிரகாஷ் மான் சிங் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(செப். 29) நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் முடுக்கிவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேபாள ராணுவம், காவல்துறை மற்றும் ஆயுதப்படை காவலர்கள் உள்பட பாதுகாப்புப் படைகள் அனைத்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் பாதித்த பகுதிகளிலிருந்து இதுவரை சுமார் 4,500 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்துள்ளோருக்கு இலவசமாக சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், உணவு உள்பட அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்5 days 12 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 10 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-09-2024.
30 Sep 2024 -
த.வெ.க. கொடியில் யானை: பகுஜன் கட்சி புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்
30 Sep 2024சென்னை : தமிழக வெற்றிக்கழக கொடியில் யானை இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி லட்டு விவகாரம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
30 Sep 2024புதுடெல்லி : திருப்பதி பிரசாத லட்டு விவகாரத்தில் கடவுளை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண
-
மழைநீர் கால்வாயில் விழுந்து ஒருவர் உயிரிழந்ததற்கு நிர்வாக சீர்கேடே காரணம்: எடப்பாடி
30 Sep 2024சென்னை : மழைநீர் கால்வாயில் விழுந்து ஒருவர் உயிரிழந்ததற்கு நிர்வாகச் சீர்கேடே காரணம் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
தொடர் மழை எதிரொலி: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 13,000 கனஅடியாக அதிகரிப்பு
30 Sep 2024தருமபுரி : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலியால் ஒகேனக்கல்லில் நேற்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
நவம்பரில் வெளியாகும் கிளாடியேட்டர்-2
30 Sep 2024வரலாற்றுத் திரைப்படங்களுக்கும், போர்க்கள காட்சிகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்து வரும் படம் ‘க்ளாடியேட்டர்’. ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ .
-
டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 4-வது இடம்பிடித்தார் ஜுக்கர்பெர்க் : முதலிடத்தில் எலான்மஸ்க்
30 Sep 2024நியூயார்க் : உலகளவில் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
நடிகர் ஜெயராம் தொடங்கி வைத்த பாரத் யாத்ரா
30 Sep 2024ஸ்ரீகோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் 'Social Inclusion of Persons with Disabilities' என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ
-
நடிகர் ஜெயராம் தொடங்கி வைத்த பாரத் யாத்ரா
30 Sep 2024ஸ்ரீகோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் 'Social Inclusion of Persons with Disabilities' என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ
-
காவிரிப் பிரச்சினையில் அரசியல் கலக்காதீர்கள்: மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி கருத்து
30 Sep 2024திருச்சி, காவிரி பிரச்சினையில் அரசியல் கலக்கக் கூடாது என்று மத்திய கனரக தொழில் மற்றும் உருக்குத் துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
-
காஷ்மீரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்: பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
30 Sep 2024ஜம்மு, ஜம்மு காஷ்மீரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
-
மயான சாம்பலில் ரூ.377 கோடி வருவாய் ஈட்டிய ஜப்பான் அரசு
30 Sep 2024டோக்கியோ : இறந்தவர்களின் சாம்பலில் உள்ள உலோகங்களை விற்பனை செய்து ஜப்பான் அரசு ரூ.377 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கலப்பட நெய் விவகாரம்: திருமலையில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு
30 Sep 2024திருப்பதி : கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் நேற்று 3-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.
-
யா’ அல்ல ‘யெஸ்’ சொல்லுங்கள்: சுப்ரீம் கோர்ட் காபிஷாப் இல்லை: மனுதாரரை எச்சரித்த தலைமை நீதிபதி
30 Sep 2024புதுடெல்லி : 'யா' அல்ல 'யெஸ்' என்று சொல்லுங்கள்.
-
லெபனானில் மீண்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: 105 பேர் பலி
30 Sep 2024பெய்ரூட் : லெபனானில் மீண்டும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 105 பேர் கொல்லப்பட்டனர்.
-
நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது : பிரதமர் மோடி வாழ்த்து
30 Sep 2024புதுடெல்லி : பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
ரத்ததான மையங்களை கண்காணிக்க வலைதளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
30 Sep 2024சென்னை, இரத்த தான மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக e-RaktKosh என்ற வலைதளம் செயல்பாட்டில் உள்ளது என்று ரத்ததான தின செய்தியில் முதல்வர் மு.க.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,284 கனஅடியாக அதிகரிப்பு
30 Sep 2024சேலம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,284 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
பாலியல் வழக்கு: நடிகர் சித்திக்கை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை
30 Sep 2024புது டெல்லி, பிரபல மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமின் வழங்கியும், கைது செய்ய தடை விதித்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கைத்துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க முன்னாள் எம்.பி.க்களுக்கு இலங்கை அரசு உத்தரவு
30 Sep 2024கொழும்பு : கைத்துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க முன்னாள் எம்.பி.க்கள் 100 பேருக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
-
ரபேல் கொள்முதல் குறித்து பேச்சு: பிரான்ஸ் சென்றார் அஜித் தோவல்
30 Sep 2024புது டெல்லி, ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். &nb
-
பிரதமர் மோடி குறித்த கருத்து வெறுக்கத்தக்கது : கார்கேவுக்கு அமித்ஷா கண்டனம்
30 Sep 2024புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி குறித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்து முற்றிலும் வெறுக்கத்தக்கது, அவமானகரமானது என்று பா.ஜ.க.
-
கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர்: டிரம்ப்
30 Sep 2024வாஷிங்டன் : ஜோ பைடனைப் போன்று கமலா ஹாரிசும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.
-
பாராட்டு மழையில் லப்பர் பந்து படக்குழு
30 Sep 2024பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் லப்பர் பந்து.
-
என்னை சந்திக்க சென்னைக்கு வருவதை தொண்டர்கள் தவிர்க்கவும்: துணை முதல்வர் உதயநிதி வேண்டுகோள்
30 Sep 2024சென்னை, என்னை சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கட்சித் தொண்டர்கள் தவிர்க்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.