எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு : டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை விளாசிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
மழை குறுக்கீடு...
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமான முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
3-ம் நாள் ஆட்டம்...
அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. நேற்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
ரோகித் அரைசதம்...
இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து 366 ரன்கள் பின்னிலையுடன் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 35 ரன்னிலும், ரோகித் சர்மா அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்னிலும் அவுட் ஆகினர்.
கோலி 70 ரன்கள்...
தொடர்ந்து விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் 3ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் கோலி 70 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2வது இன்னிங்சில் 49 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் உள்ளார். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா இன்னும் 125 ரன்கள் பின்னிலையில் உள்ளது. நாளை 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
4வது இந்திய வீரர்...
இந்நிலையில், இந்த போட்டியில் விராட் கோலி 53 ரன்கள் எடுத்திருந்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை விளாசிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இந்தப்பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (15,921 ரன்) முதல் இடத்திலும், ராகுல் டிராவிட் (13,265 ரன்) 2வது இடத்திலும், சுனில் கவாஸ்கர் (10,122 ரன்) 3வது இடத்திலும், விராட் கோலி (9,017 ரன்) 4வது இடத்திலும், வி.வி.எஸ் லட்சுமனன் (8,781 ரன்) 5வது இடத்திலும் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 weeks 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2024.
18 Oct 2024 -
இந்தி திணிப்பை ஏற்க முடியாது: மத்திய அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம்
18 Oct 2024சென்னை : இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை மத்திய அரசு திணிப்பதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் வரும் 21-ம் தேதி 31 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்வர் நடத்தி வைக்கிறார் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
18 Oct 2024சென்னை : வரும் 21-ம் தேதி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 31 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்வர் மு.க.
-
தாய் - தந்தையரின் கால்களில் மட்டும்தான் விழ வேண்டும் : த.வெ.க. தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் வேண்டுகோள்
18 Oct 2024சேலம் : நீங்கள் அனைவரும் தாய் - தந்தை கால்களில் மட்டும்தான் விழ வேண்டும். வேறு யாருடைய காலிலும், நீங்கள் விழக்கூடாது.
-
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் 33 ஆக உயர்ந்தது
18 Oct 2024பாட்னா : பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
-
ரூ.5 கோடி கேட்டு நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல்
18 Oct 2024மும்பை : ரூ.5 கோடி கேட்டு மும்பை போக்குவரத்து காவல் துறைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது.
-
தமிழ்த்தாய் வாழ்த்தில் குளறுபடி: கவர்னர் மாளிகை விளக்கம்
18 Oct 2024சென்னை, தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் கவர்னருக்கோ, கவர்னர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: மன்னிப்பு கோரிய டிடி தமிழ் தொலைக்காட்சி
18 Oct 2024சென்னை, தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம் என்று டிடி தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் அறிவிப்பு
18 Oct 2024புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
12,000 ராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு வடகொரிய அரசு அனுப்பியுள்ளது : தென்கொரிய உளவு அமைப்பு தகவல்
18 Oct 2024பியாங்யாங் : ரஷ்யாவுக்கு 12 ஆயிரம் ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக தென்கொரியா உளவு அமைப்பு தெரிவித்துள்ளது
-
தமிழ்தாய் வாழ்த்து விவகாரம்: தமிழக கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும் : முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Oct 2024சென்னை : தமிழ்நாட்டையும் மக்களின் உணர்வையும் வேண்டும் என்றே அவமதிக்கும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும் டிடி தமிழ் நிகழ்ச்சியில் தி
-
புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்க தடை விதித்தது கலால்துறை
18 Oct 2024புதுச்சேரி : புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்க தடை விதித்து கலால்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு ரயில் யாத்திரை: ஐ.ஆர்.சி.டி.சி.
18 Oct 2024சென்னை : தீபாவளியொட்டி, புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசிக்கும் வகையில், கங்கா ஸ்நானம் சிறப்பு ரயில் யாத்திரையை ரயில்வே சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.
-
மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிடுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
18 Oct 2024சென்னை : தன்னாட்சி அமைப்பான மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தி.மு.க. அரசு தலையிடுவதாக அ.தி.மு.க.
-
தொலைதூர கல்வி படிப்பில் சேர 31-ம் தேதி வரை அவகாசம் : இக்னோ பல்கலைக் கழகம் அறிவிப்பு
18 Oct 2024சென்னை : தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேருவதற்கான கடைசி தேதி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
-
அரபிக்கடல், வங்கக்கடலில் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகிறது
18 Oct 2024சென்னை, அரபிக்கடல், வங்கக்கடலில் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் (புயல் சின்னம்) உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் ரயில்: தீபாவளி பண்டிகைக்கு அறிமுகம்
18 Oct 2024புதுடெல்லி : தீபாவளி மற்றும் சாத் பண்டிகையை முன்னிட்டு நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கப்பட உள்ளது.
-
லெபனானில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு : ஹிஸ்புல்லா தகவல்
18 Oct 2024பெய்ரூட் : லெபனானில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
-
ஈஷா யோகா மையம் மீதான நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு
18 Oct 2024புதுடெல்லி, ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்திரவதை : மனித உரிமை ஆணையம் விசாரணை
18 Oct 2024நெல்லை : நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேற்று நேரில் விசாரணை நடத்தினார்.
-
பச்சை நிற பாக்கெட் பால் உற்பத்தி நிறுத்தமா?: ஆவின் நிர்வாகம் விளக்கம்
18 Oct 2024சென்னை : பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
-
ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்ய குழு: சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி
18 Oct 2024புதுடெல்லி : ஓ.டி.டி.
-
பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் : இந்தோனேஷிய அரசு தொடங்கியது
18 Oct 2024ஜகார்தா : உலகிலேயே ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதனை குறைக்கும் வகையில் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை தொடங்கியுள்ளத
-
இஸ்ரேலுக்கும், உலகத்திற்கும் நல்ல நாள்: ஹமாஸ் தலைவர் படுகொலை குறித்து ஜோபைடன் கருத்து
18 Oct 2024வாஷிங்டன் : இஸ்ரேலுக்கும், உலகத்திற்கும் நல்ல நாள் என்று ஹமாஸ் தலைவர் படுகொலை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
-
கவரப்பேட்டையில் தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் அல்ல : ரயில் விபத்து குறித்த விசாரணையில் தகவல்
18 Oct 2024திருவள்ளூர் : கவரைப்பேட்டையில் தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் அல்ல என விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.