எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் வேல்முருகன் பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் அவர் பரிந்துரை செய்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 4வது நாள் விவாதம் தொடங்கி நேற்று நடைபெற்றது. சட்டசபை உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனின் செயல்பாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சட்டசபையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜி.கே. மணி, சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும் என்று கூறினார். அதற்கு அமைச்சர் மெய்யநாதன் தரப்பில், அதனை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது.
அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மாநில அரசு நடத்தக் கூடாது என்று எந்த சுப்ரீம்கோர்ட்டும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் இடஒதுக்கீடு தொடர்பான சில கருத்துகளை முன்வைத்தார். மேலும் இருந்த இடத்தைவிட்டு எழுந்து அமைச்சர்களை நோக்கி கைகளை நீட்டி பேசினார்.
இதனையடுத்து சபாநாயகர் இருக்கை முன்பு சென்று பேசுவதற்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டதோடு, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார். அப்போது சபாநாயகர் அப்பாவு அமைதியாக இருக்குமாறு கூறிய போதும், அவர் தொடர்ந்து கோஷம் எழுப்பி கொண்டே இருந்தார்.
இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோபமடைந்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் அதிகபிரசங்கித்தனமாக நடந்து கொள்கிறார். இது வேதனை அளிப்பதாக இருக்கிறது. அவை மாண்பை மீறி வேல்முருகன் நடந்து கொள்ளக் கூடாது. இருக்கையை விட்டு வந்து மாண்பை குறைத்து பேசுவது ஏற்புடையதல்ல. இதனால் வேல்முருகன் மீது சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, வேல்முருகன் இருக்கையை விட்டு வெளியே வந்து ஒருமையில் பேசியது நாகரீகமான செயல் அல்ல. இது ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டசபை உறுப்பினர் வேல்முருகனுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதுபோல் இனி நடந்து கொள்ள கூடாது. இந்த ஒருமுறை மன்னிக்கிறோம். இனி இப்படி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பண்ருட்டி எம்.எல்.ஏ.வாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 4 weeks ago |
-
யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கிடைக்காது: தமிழ்நாடு அரசு விளக்கம்
27 Mar 2025சென்னை, மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
-
வங்கதேச தேசிய தினம்: முகமது யூனுஸுக்கு பிரதமர் மோடி கடிதம்
27 Mar 2025புதுடெல்லி, இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் வங்கதேச தேசிய தினம் சான்றாக இருக்கிறது என அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸுக்க
-
உதயநிதி சட்டசபைக்கு வராதது ஏன்? முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம்
27 Mar 2025சென்னை, உதயநிதி ஸ்டாலின் சட்டசபைக்கு வராதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
-
கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
27 Mar 2025திருநெல்வேலி, அ.தி.மு.க.
-
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் விலகல்
27 Mar 2025வெலிங்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் விலகியுள்ளார்.
-
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
27 Mar 2025நெல்லை: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
-
ஜம்மு-காஷ்மீருக்கு வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்
27 Mar 2025ஸ்ரீநகர், காஷ்மீருக்கு முதல் முறையாக வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!
27 Mar 2025ப்ளோரிடா: அமெரிக்காவின் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
-
பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை
27 Mar 2025புதுடெல்லி, புதிய கல்விக் கொள்கையின் பள்ளிகளுக்கான பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு சர்வ சிக்ஷா அபியான் நிதியை உடனடியாக விடுவிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.
-
உதகையில் புலி தாக்கி இளைஞர் பலி
27 Mar 2025உதகை, உதகை அருகே புலி தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
-
ஆம்ஸ்ட்ராங் நினைவு நடைபயணம்: காவல் துறை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2025சென்னை, பொத்தூரில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடத்துக்கு கீழ்ப்பாக்கத்தில் இருந்து நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க ஆவடி காவல் ஆணையருக்கு சென்னை உய
-
மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
27 Mar 2025சென்னை, தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களில் 29ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க.வினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளா
-
ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
27 Mar 2025சென்னை: ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 6 பேர் பலி
27 Mar 2025காஸா: காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர்.
-
இறக்குமதி வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
27 Mar 2025வாஷிங்டன், அமெரிக்காவில் இறக்குமதி வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பகுதி நேர ரேசன் கடைகள்: சட்டசபைில் அமைச்சர் தகவல்
27 Mar 2025சென்னை, தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் நிதியை கொண்டு பகுதி நேர ரேசன் கடையை திறக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் - இளைஞர் கைது
27 Mar 2025நெல்லை, நெல்லையில் இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் வெளியிட்டதால் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
வல்லபாய் படேலின் மறு உருவம்: அமித்ஷாவிற்கு ஆர்.பி.உதயகுமார் புகழாரம்
27 Mar 2025மதுரை: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவமாக உள்துறை மந்திரி அமித்ஷா பார்க்கப்படுகிறார் என்று அ.தி.மு.க.
-
பதவியில் இருந்து விலகிக் கொள்வது தான் இ .பி.எஸ்.க்கு மரியாதை: ஓ.பன்னீர்செல்வம்
27 Mar 2025சென்னை, அ.தி.மு.க.
-
வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை - கல்வித்துறை எச்சரிக்கை
27 Mar 2025சென்னை: வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: நிர்மலா சீதாராமன் தகவல்
27 Mar 2025புதுடெல்லி, தனிநபர்களின் வாட்ஸ்அப் சாட்கள் மூலம் ரூ.200 கோடி வரி ஏய்ப்புக் கண்டறியப்பட்டதாக வருமான வரி மசோதா மீது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மல
-
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம்
27 Mar 2025ஐதராபாத், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
-
தமிழ்நாட்டில் வானிலை முன்னறிவிப்பில் இந்தி மொழி சேர்க்கப்பட்டதால் பரபரப்பு
27 Mar 2025சென்னை, தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தொடர்பாக சர்ச்சையாகி வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்
-
இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க நடவடிக்கை: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
27 Mar 2025சென்னை, “இரண்டாம் நிலை நகரங்களில் துரித போக்குவரத்து அமைப்புகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விவரங்கள் திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள்
-
பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் தற்கொலை
27 Mar 2025பாகிஸ்தான்: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.