எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜொப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. அதனால் விரலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சையினால் முதல் 3 போட்டிகளில் கீப்பிங், கேப்டன் பொறுப்பிலிருந்து சாம்சன் விலகுவதாகக் கூறப்பட்டுள்ளது. என்.சி.ஏ.வில் உள்ள மருத்துவர்கள் விக்கெட் கீப்பிங்கில் இருந்து சஞ்சு சாம்சனுக்கு சிறிது ஓய்வு தேவை என அறிவுறுத்தியுள்ளார்கள். இம்பாக்ட் பிளேயர் விதியின்படி பேட்டராக மட்டுமே சாம்சன் தொடர்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
23 வயதாகும் ரியான் பராக் தற்போது இளம் கேப்டனாக இந்த ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கிறார். இதற்கு முன்பு விராட் கோலி 22 வயதில் ஆர்.சி.பி. அணியை தலைமை ஏற்றது குறிப்பிடத்தக்கது. பயிற்சி ஆட்டத்தில் ரியான் பராக் அரைசதம் அடித்துள்ளார். பேட்டிங், பீல்டுங்கில் அசத்தும் பராக் பந்துவீசுவதும் குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை மார்ச் 23-ல் எதிர்கொள்ளவிருக்கிறது.
சஹால் - தனஸ்ரீ விவாகரத்து
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் யுஸ்வேந்திர சஹால். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ வர்மா, பாடல் நிகழ்ச்சிகளில் பாடகியாக அறிமுகமாகினார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீக்கு கிடைத்து நடன போட்டிகளிலும் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி கொண்டே இருந்தன.
இந்த நிலையில், இருவரும் பரஸ்பரமாக பிரிய முடிவெடுத்து விவகாரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர். மேலும், மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். போட்டி தொடங்கவிருப்பதால், அதற்கு முன்னதாக அவரது வழக்கை முடித்து வைக்க அவரது வழக்குரைஞரும் கோரிக்கை வைத்தார். அதன்படி, கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் கொடுக்க சஹால் ஒப்புக் கொண்டார். இதனால், இருவருக்கும் விவாகரத்து வழங்கி மும்பை குடும்ப நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புகழ் பரப்பும் ப்ராவோ
கௌதம் கம்பீருக்குப் பதிலாக கே.கே.ஆர். அணியின் ஆலோசகராக முன்னாள் மே.இ.தீ. வீரரும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான டிவைன் ப்ராவோ நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ப்ரோவோ பேசியதாவது: கே.கே.ஆர். அணியில் சாம்பியன்களுக்கான மனநிலையை கொண்டு வருவேன். நான் வெற்றிப் பெறுவதை நம்புகிறேன். என்னுடைய சாதனைகள் அவர்களுக்காக பேசும். ஆனால், முடிவாக அடுத்த தலைமுறை கிரிக்கெட்டர்களை அவர்களது வழியிலேயே சாம்பியன்களாக்க உதவ வேண்டும். கே.கே.ஆர். அணி மீது உலகம் முழுவதும் நன்மதிப்பு இருக்கிறது. நான் விளையாடும்போது கே.கே.ஆரில் சில வீரர்கள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
இந்த அணியில் இணைவது மகிழ்ச்சி. டிரினிடாட் & டொபாக் அணியில் கேப்டனாக இருப்பது அதிர்ஷடமானது. உலகம் முழுமைக்கும் கே.கே.ஆர். அணியின் புகழினை கொண்டுச் செல்வதில் உறுதியாக இருக்கிறேன். வெற்றிக்குக் காரணம் போட்டி மீதான ஆர்வமே. இந்த அணியில் 9-10 வீரர்கள் சாம்பியன்ஷிப்பில் வெற்றிப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். 80 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே எப்படி வெற்றிப் பெறுவதெனத் தெரியும். அதுதான் எங்களது நோக்கமும் என்றார்.
பேட்மிண்டன்: ரஜாவத் வெற்றி
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள். இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சுவிட்சர்லாந்து வீரர் டோபியாஸ் கொன்சி உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரஜாவத் 21-10, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் பிரியான்ஷு ரஜாவத், பிரான்ஸ் வீரர் டோமா ஜூனியர் போபோவ் உடன் மோதுகிறார்.
வருண் சக்கரவர்த்திக்கு பாராட்டு
கே.கே.ஆர். அணியில் 2020-ல் அறிமுகமான வருண் சக்கரவர்த்தி தனது சிறப்பான பந்துவீச்சினால் இந்திய அணிக்கும் தேர்வானார். கே.கே.ஆர். அணி கடந்தாண்டு ஐ.பி.எல். கோப்பையை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி இருந்தார்கள். சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியிலும் வருண் சக்கரவர்த்தி முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் சுனில் நரைன் பேசியதாவது: பல ஆண்டுகளாக நாங்கள் எங்களை நிரூபித்து வருகிறோம். நாங்கள் கூட்டாக நன்றாக பந்து வீசுகிறோம். வருண் சக்கரவர்த்தி எங்கள் பக்கம் இருப்பது எப்போதும் நல்லது. நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றை, அழுத்தத்தை வருண் எப்போதும் தொடர்ச்சியாக செய்கிறார். கே.கே.ஆர். அணி தனது முதல் போட்டியில் ஆர்.சி.பி.யை மார்ச்.22இல் எதிர்கொள்கிறது. 71 ஐ.பி.எல். போட்டிகளில் 83 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி 7.56ஆக இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 4 weeks ago |
-
யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கிடைக்காது: தமிழ்நாடு அரசு விளக்கம்
27 Mar 2025சென்னை, மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
-
வங்கதேச தேசிய தினம்: முகமது யூனுஸுக்கு பிரதமர் மோடி கடிதம்
27 Mar 2025புதுடெல்லி, இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் வங்கதேச தேசிய தினம் சான்றாக இருக்கிறது என அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸுக்க
-
உதயநிதி சட்டசபைக்கு வராதது ஏன்? முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம்
27 Mar 2025சென்னை, உதயநிதி ஸ்டாலின் சட்டசபைக்கு வராதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
-
கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
27 Mar 2025திருநெல்வேலி, அ.தி.மு.க.
-
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
27 Mar 2025நெல்லை: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
-
ஜம்மு-காஷ்மீருக்கு வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்
27 Mar 2025ஸ்ரீநகர், காஷ்மீருக்கு முதல் முறையாக வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்
-
பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை
27 Mar 2025புதுடெல்லி, புதிய கல்விக் கொள்கையின் பள்ளிகளுக்கான பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு சர்வ சிக்ஷா அபியான் நிதியை உடனடியாக விடுவிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!
27 Mar 2025ப்ளோரிடா: அமெரிக்காவின் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
-
உதகையில் புலி தாக்கி இளைஞர் பலி
27 Mar 2025உதகை, உதகை அருகே புலி தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
-
ஆம்ஸ்ட்ராங் நினைவு நடைபயணம்: காவல் துறை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2025சென்னை, பொத்தூரில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடத்துக்கு கீழ்ப்பாக்கத்தில் இருந்து நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க ஆவடி காவல் ஆணையருக்கு சென்னை உய
-
மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
27 Mar 2025சென்னை, தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களில் 29ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க.வினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளா
-
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் விலகல்
27 Mar 2025வெலிங்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் விலகியுள்ளார்.
-
இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 6 பேர் பலி
27 Mar 2025காஸா: காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர்.
-
ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
27 Mar 2025சென்னை: ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார்.
-
இறக்குமதி வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
27 Mar 2025வாஷிங்டன், அமெரிக்காவில் இறக்குமதி வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பகுதி நேர ரேசன் கடைகள்: சட்டசபைில் அமைச்சர் தகவல்
27 Mar 2025சென்னை, தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் நிதியை கொண்டு பகுதி நேர ரேசன் கடையை திறக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் - இளைஞர் கைது
27 Mar 2025நெல்லை, நெல்லையில் இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் வெளியிட்டதால் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
பதவியில் இருந்து விலகிக் கொள்வது தான் இ .பி.எஸ்.க்கு மரியாதை: ஓ.பன்னீர்செல்வம்
27 Mar 2025சென்னை, அ.தி.மு.க.
-
வல்லபாய் படேலின் மறு உருவம்: அமித்ஷாவிற்கு ஆர்.பி.உதயகுமார் புகழாரம்
27 Mar 2025மதுரை: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவமாக உள்துறை மந்திரி அமித்ஷா பார்க்கப்படுகிறார் என்று அ.தி.மு.க.
-
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம்
27 Mar 2025ஐதராபாத், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
-
வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை - கல்வித்துறை எச்சரிக்கை
27 Mar 2025சென்னை: வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: நிர்மலா சீதாராமன் தகவல்
27 Mar 2025புதுடெல்லி, தனிநபர்களின் வாட்ஸ்அப் சாட்கள் மூலம் ரூ.200 கோடி வரி ஏய்ப்புக் கண்டறியப்பட்டதாக வருமான வரி மசோதா மீது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மல
-
தமிழ்நாட்டில் வானிலை முன்னறிவிப்பில் இந்தி மொழி சேர்க்கப்பட்டதால் பரபரப்பு
27 Mar 2025சென்னை, தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தொடர்பாக சர்ச்சையாகி வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்
-
இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க நடவடிக்கை: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
27 Mar 2025சென்னை, “இரண்டாம் நிலை நகரங்களில் துரித போக்குவரத்து அமைப்புகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விவரங்கள் திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள்
-
கோவையில் மூதாட்டி கூட்டு பலாத்காரம்: 3 வடமாநில தொழிலாளர்கள் கைது
27 Mar 2025கோவை, கோவையில் மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.