முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லடாக்கில் ஆற்றை கடக்கும்போது விபரீதம்: வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 இந்திய வீரர்கள் உயிரிழப்பு

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      இந்தியா
Ladak 2024-06-29

லே, லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே ஆற்றை கடக்கும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

லடாக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே வெள்ளிக்கிழமை மாலை தௌலத் பேக் ஓல்டி பகுதியில் ராணுவ டேங்க் விபத்துக்குள்ளானதில் ஒரு இளநிலை கமிஷனர் அதிகாரி மற்றும் நான்கு வீரர்கள் உட்பட ஐந்து வீரர்கள் உயிரிழந்தனர். ஐந்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது., எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே தௌலத் பேக் ஓல்டி பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை டி-72 ரக ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் ராணுவ டேங்கர் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில், டேங்கரில் இருந்த இளநிலை கமிஷனர் அதிகாரி மற்றும் நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவரின் உடல் உடனே மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்த நிலையில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு வீரர்களின் உடல்களும் சனிக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “லடாக்கில் ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்கும் பயிற்சியின் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் நமது வீரர்கள் 5 பேர் உயிரிழந்தது வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது. இந்த துயர நேரத்தில் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “லடாக்கில் ராணுவப் பயிற்சியில் டேங்கரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது ஆற்று வெள்ளத்தில் மூழ்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வீரமரணம் அடைந்துள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர் மிகு தருணத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். அவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் சேவைகளை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 6 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 6 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து