எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Fireworks 2024-06-29](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/06/29/Fireworks_2024-06-29.jpg?itok=6OX-0TNk)
சாத்தூர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேற்று (சனிக்கிழமை) காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஆலை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியல் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் பட்டாசு ஆலையில் உற்பத்தி தொடங்கியது. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்தனர்.
வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை கலவை செய்தபோது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று அறைகள் இடிந்து சேதமடைந்தன. அந்த அறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த பட்டாசு தொழிலாளர்கள் 4 பேர் சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் ராஜ்குமார், மாரிச்சாமி, மோகன், செல்வக்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கிடை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், விருதுநகர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று (29-06-2024) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 45), நடுச்சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி (வயது 40), வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 35) மற்றும் மோகன் (வயது 30) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
காலிபிளவர் ரோஸ்ட்![]() 2 days 12 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 5 days 7 hours ago |
ஜூசி சிக்கன்![]() 1 week 2 days ago |
-
போர்ப்பதட்டம் எதிரொலி: லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு சவுதி அறிவுறுத்தல்
01 Jul 2024பெய்ரூட் : லெபனானில் போர் பதட்டம் நிலவுவதால் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு தங்களது நாட்டு குடிமக்களுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தியுள்ளது.
-
5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்து சேவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
01 Jul 2024சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.
-
நீட் தேர்வு குறித்த வழக்கு முடிந்தால்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து முடிவு எடுக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
01 Jul 2024சென்னை : மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
-
இலங்கை எம்.பி. சம்பந்தன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
01 Jul 2024சென்னை : இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் அந்நாட்டின் எம்.பியுமான ரா.சம்பந்தன் நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91.
-
இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
01 Jul 2024சென்னை : இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மீனவர்கள் பிரச்சினை: மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்
01 Jul 2024நெல்லை : இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினை குறித்து மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தி உள்ள
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கனஅடியாக அதிகரிப்பு
01 Jul 2024சேலம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: மக்கள் நல்வாழ்வுத் துறை புதிய செயலாளராக சுப்ரியா நியமனம்
01 Jul 2024சென்னை : தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டனர். நீர்வளம், வனத்துறை செயலர்கள் உள்ளிட்ட 16 ஐ.ஏ.எஸ்.
-
ரஜினிகாந்தை சந்தித்த நடிகர் சங்கத்தினர்
01 Jul 2024தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் திரு.கார்த்தி, துணைத் தலைவர்கள் திரு.பூச்சி எஸ்.முருகன், திரு.கருணாஸ் ஆகியோர் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-07-2024.
01 Jul 2024 -
அகிலேஷ் யாதவுக்கு பிறந்த நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2024சென்னை : அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஆளுநர் விருதுக்கான விண்ணப்பம் வரவேற்பு
01 Jul 2024சென்னை : தமிழ்நாடு கவர்னர் மாளிகையின் சார்பாக ஆளுநர் விருதுகள் 2024-க்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
-
நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது 3 குற்றவியல் சட்டங்கள் : சாலையோர வியாபாரி மீது முதல் வழக்குப்பதிவு
01 Jul 2024புதுடெல்லி : நாடு முழுவதும் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தநிலையில், இந்த புதிய சட்டத்தின் கீழ் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு
-
அமலுக்கு வந்தது பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு
01 Jul 2024சென்னை : பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை: புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்
01 Jul 2024புதுடெல்லி : புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கொடுப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
-
சிவகங்கையில் பரபரப்பு: மஞ்சுவிரட்டு போட்டி தகராறில் அண்ணன், தம்பி படுகொலை
01 Jul 2024சிவகங்கை : மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அவிழ்த்து விடுவதில் நடந்த தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சிவகங்கையில் அண்ணன், தம்பி இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்ப
-
ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம்
01 Jul 2024சென்னை : ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தலைவர் இரா. சம்பந்தன் காலமானார் : பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
01 Jul 2024இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின்
-
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு : ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வந்தது
01 Jul 2024சிட்னி : வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை சுமார் இரு மடங்காக உயர்த்தியுள்ளது ஆஸ்திரேலிய அரசு.
-
எல்லையில் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா: தென்கொரியா
01 Jul 2024சியோல் : வட கொரியா ஏவுகணை சோதனை செய்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்து இருக்கிறது.
-
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்
01 Jul 2024சென்னை : இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
-
விடாமுயற்சி பஸ்ட் லுக் வெளியீடு
01 Jul 2024தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது
-
துவங்கிய சில நிமிடங்களில் முடிந்தது தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு
01 Jul 2024சென்னை : சென்னையில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களுக்கான தீபாவளி பண்டிக்கை டிக்கெட் முன்பதிவு நேற்று (ஜூலை 1) காலை தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது.
-
திகார் சிறையில் உள்ள என்ஜினீயர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க தேசிய புலனாய்வு முகமை அனுமதி
01 Jul 2024புதுடெல்லி : டெல்லி திகார் சிறையில் உள்ள என்ஜினியர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க என்.ஐ.ஏ. அனுமதி அளித்துள்ளது.
-
சிவபெருமான் படத்தை காட்டி மக்களவையில் ராகுல் பேச்சு
01 Jul 2024புதுடெல்லி : மக்களவையில் சிவபெருமான் படத்தை காட்டி ராகுல் காந்தி பேசினார்.