எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Modi -2024-07-02](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/02/Modi_-2024-07-02.jpg?itok=W1P_FYFq)
Source: provided
புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சியினரின் முழக்கத்திற்கு மத்தியில் பிரதமர் மோடி நேற்று பதிலளித்து பேசினார். அப்போது பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி வலுவாக உள்ளது என்றும், காங்கிரஸ் கட்சி ஒட்டுன்ணி கட்சி என்றும் கடுமையாக தாக்கி பேசினார்.
பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி நேற்று பேசியதாவது., கடந்த காலங்களில் ஒரு ரூபாய் செலவு செய்தால் ஏழைகளுக்கு 10 பைசா தான் கிடைத்தது. ஐ.மு., கூட்டணி ஆட்சியின் மீது மக்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்துவிட்டனர்.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் நடந்த ஊழலின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. நம்பிக்கை இழந்த சூழலில் நாட்டை எங்கள் அரசு மீட்டுள்ளது. ஊழல் ராஜ்ஜியங்கள் ஒழிக்கப்பட்டு விட்டன. காஸ் சிலிண்டர் இணைப்பை பெறக் கூட எம்.பி.,க்களின் சிபாரிசு பெற வேண்டிய நிலை முந்தைய ஆட்சியில் இருந்தது. 2014 வரை ஊழல் எப்படி செய்வது என்று போட்டி இருந்தது. அப்போதெல்லாம் ஊழல்கள் பற்றிய செய்திகளே அதிகம் வந்தன. 2014க்கு பிறகு இந்தியாவின் மாற்றத்தை மக்கள் பார்க்கத் துவங்கினர்.
5ஜி தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தியது எங்களின் அரசு தான். செய்ய முடியாத காரியங்களையும் நாங்கள் செய்து காட்டினோம். பயங்கரவாதத்தை துல்லிய தாக்குதல் மூலம் முறியடித்தோம். ஐ.மு கூட்டணி ஆட்சியில் நாட்டின் வளத்தை தங்களின் சொத்து போல கொள்ளையடித்தனர். ஓட்டுகளுக்காக ஜம்மு காஷ்மீரில் வைக்கப்பட்டிருந்த 370வது பிரிவை, நாங்கள் நீக்கினோம். 370வது பிரிவை நீக்கிய பிறகு காஷ்மீரில் வளர்ச்சி காணப்படுகிறது. அங்கு பயங்கரவாதம் குறைந்து, ஜனநாயகம் தழைத்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு அவர்களின் கண்முன் தகுந்த பாடம் புகட்டப்பட்டது.
வளர்ச்சி தொடர்பான எங்களின் சாதனைகளை நாங்களே முறியடித்து வருகிறோம். எங்கள் வேகத்தை மிஞ்சுவதற்கு தற்போது நாங்கள் முயன்று வருகிறோம். 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை 5வது இடத்திற்கு முன்னேற்றியுள்ளோம். 3வது இடத்திற்கு முன்னேற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம். கோடிக்கணக்கான சகோதரிகள் தொழில்முனைவோராக மாறியுள்ளனர். 3வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள நாங்கள், 3 மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம்.
தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு ஏராளமான ஓட்டுகள் கிடைத்தன. அங்கு பல இடங்களில் 2வது இடத்தை பெற்றுள்ளோம். கேரளாவில் முதன்முறையாக பா.ஜ.,வுக்கு எம்.பி., பதவி கிடைத்துள்ளது. இதற்கு முன்பு ஆதரவு இல்லாத பல மாநிலங்களில் கூட தற்போது எங்களுக்கு அன்பும் ஆதரவும் கிடைத்துள்ளது.
எதிர்க்கட்சி வரிசையில் அமருமாறு தான் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தீர்ப்பளித்தனர். அங்கேயே காங்கிரஸ் தொடர்ந்து அமர்ந்து கொண்டிருக்கும். 3 தேர்தல்கள் நடந்தும் காங்கிரசால் ஆட்சியமைக்க முடியாமல் தோற்று போயுள்ளது. எங்களை தோற்கடித்துவிட்டது போன்ற மாயையை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. தோல்விக்கு பின் அக்கட்சி சுயபரிசோதனை செய்து ஆராய வேண்டும். காங்கிரசால் விவாதிக்க முடியாத போதெல்லாம் தொடர்ந்து கூச்சலிட்டு கொண்டிருப்பர். 2029ல் தேர்தலிலும் காங்., எதிர்க்கட்சி வரிசையிலேயே அமரும்.
தங்களுக்கு கிடைத்த தோல்வியை காங்., கட்சியால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. 1984க்கு பிறகு அக்கட்சி ஒருமுறை கூட 250 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவில்லை. தேர்தல்களில் தோல்வி அடைவதில் உலக சாதனை படைத்திருக்கிறது காங்கிரஸ். 543 தொகுதிகளில் 99 இடங்களை வென்ற காங்கிரஸ், 100க்கு 99 இடங்களில் வென்றதுபோல் மக்களை ஏமாற்றுகிறது. 13 மாநிலங்களில் காங்., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் அவர்கள் ஹீரோ போன்று நடந்து கொள்கிறார்கள்.
எங்கெல்லாம் அவர்கள் தனியாக போட்டியிட்டார்களோ அங்கெல்லாம் அவர்களின் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது. 64 தொகுதிகளில் தனித்துபோட்டியிட்டு 2ல் மட்டுமே வென்றுள்ளனர். கூட்டணி கட்சிகள் இல்லை என்றால், காங்கிரஸ் பூஜ்ஜியம். ஒட்டுண்ணி போல ஊடுருவி, கூட்டணி கட்சிகளையும் சேர்த்து அழித்து வருகிறது. இனி அக்கட்சி ஒட்டுண்ணி கட்சி என அழைக்கப்படும்.
வட மாநிலங்களுக்கு தெற்கிலும், தெற்குக்கு எதிராக வடக்கிலும் பேசி வருகிறது காங்கிரஸ். சமூகங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி மோதலை தூண்டும் வகையில் செயல்படுகிறது. நாட்டை துண்டாட நினைப்பவர்களுக்கு அக்கட்சியில் இடமளிக்கப்படுகிறது. அக்கட்சி அளித்த வாக்குறுதிகள் நாட்டின் பொருளாதாரத்தை எரித்துவிடும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி உரையாற்றியபோது 'மணிப்பூர், நீட் விவகாரத்தில் நீதி வேண்டும்' என்றும், 'நீட் வேண்டாம்' என்றும், மாணவர்களை காப்பாற்று' எனவும் தமிழக எம்.பி.,க்கள் தமிழில் முழக்கமிட்டனர். மற்ற எதிர்க்கட்சியினரும் பிரதமரின் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் முழக்கமிட்டனர். மேலும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டும் எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பினர். இதனை அடுத்து 'எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் தவறான முன்னுதாரணமாக திகழ்கின்றனர். எதிர்க்கட்சியினர் மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும்' என சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்தார். பிரதமர் மோடியின் பதிலுரையின்போது எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூச்சலிட்டபோதும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அமைதியாக பிரதமரின் பேச்சை கேட்டு வந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
புரோட்டீன் லட்டு![]() 1 day 6 hours ago |
காலிபிளவர் ரோஸ்ட்![]() 5 days 9 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 1 week 1 day ago |
-
ஹத்ராஸ் நகர் செல்ல ராகுல் காந்தி திட்டம் : காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்
04 Jul 2024புது டெல்லி, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் 121 பேர் உயிரிழந்த உ.பி.,யின் ஹாத்ராஸ் நகருக்கு செல்ல எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளதாக காங்கிரஸ் பொதுச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2024.
04 Jul 2024 -
பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: முன்னாள் செனட் உறுப்பினர் உள்பட 5 பேர் உயிரிழப்பு
04 Jul 2024லாகூர், பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் செனட் உறுப்பினர் இதயத்துல்லாகான் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு
04 Jul 2024புதுச்சேரி, புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
04 Jul 2024புது டெல்லி, பா.ஜ.க.மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு
04 Jul 2024சென்னை, ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் நடத்துநர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்து
-
அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கு: தி.மு.க. பிரமுகர் உட்பட 9 பேர் கைது
04 Jul 2024சேலம், சேலம் அ.தி.மு.க. நிர்வாகி சண்முகம் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தி.மு.க.
-
மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி டுவிட்டர் பதிவு
04 Jul 2024சென்னை, மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம் என்று தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடியை சந்தித்து சந்திரபாபு நாயுடு பேச்சு: ஆந்திராவுக்கு வரி சலுகை வழங்க வலியுறுத்தல்
04 Jul 2024திருப்பதி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு வரி சலுகை வழங்க வலியுறுத்தி உள்ளார்.
-
தேசிய மருத்துவ ஆணைய தலைவராக டாக்டர் பி.என். கங்காதர் நியமனம்: மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
04 Jul 2024புது டெல்லி, தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவராக டாக்டர் பி.என். கங்காதர் நியமிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய அறிவிப்பை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
டெல்லி, அரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி இல்லை: ஜெய்ராம் ரமேஷ்
04 Jul 2024புது டெல்லி, டெல்லி மற்றும் அரியானாவில் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி இருக்காது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.&nbs
-
மக்களுடன் முதல்வர் திட்ட துவக்க விழா: முதல்வர் ஸ்டாலின் வரும் 11-ம் தேதிதருமபுரி செல்கிறார்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
04 Jul 2024தருமபுரி, மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்க வரும் 11-ம் தேதி தருமபுரி செல்கிறார்.
-
எல்லைப் பிரச்சினையை தீர்க்கும் முயற்சியை இரட்டிப்பாக்க ஒப்புதல்: சீன அமைச்சரை சந்தித்த பின் ஜெய்சங்கர் தகவல்
04 Jul 2024அஸ்தானா, எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க சீனா ஒப்புக்கொண்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு இந்திய வெள
-
அக்னி வீரர் குடும்பத்துக்கு இழப்பீடு: ராகுலின் குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் விளக்கம்
04 Jul 2024புது டெல்லி, அக்னிவீரர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்திருந்த கருத்துக்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
-
15 நாட்களில் 10-வது சம்பவம்: பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்து விபத்து
04 Jul 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் நேற்று மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.
-
நீங்கள் நலமா? திட்ட பயனாளிகளுடன் வீடியோ காலில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
04 Jul 2024சென்னை, சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து அரசு திட்ட பயனாளிகளிடம் நேற்று வீடியோ காலில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம், நீங்கள
-
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்த ராஜஸ்தான் பா.ஜ.க. அமைச்சர்
04 Jul 2024ஜெய்ப்பூர், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜஸ்தானில் பா.ஜ.க.வை சேர்ந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கிரோடி லால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வேன்: நேபாள பிரதமர் பிரசந்தா திட்டவட்டம்
04 Jul 2024காத்மாண்டு, பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள போவதாக நேபாள பிரதமர் பிரசந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
மெட்ரோ ரயில் திட்ட வழித்தடங்கள்: கோவையில் ஆசிய வங்கி அதிகாரிகள் கள ஆய்வு
04 Jul 2024கோவை, கோவையில் மெட்ரோ ரயில் திட்ட வழித்தடங்கள் குறித்து ஆசிய வங்கி அதிகாரிகள் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
-
வங்கதேச ராணுவ தளபதியை சந்தித்து பேசிய இந்திய கடற்படை தலைவர்
04 Jul 2024டாக்கா, இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி வங்காளதேச ராணுவத் தலைமையகமான டாக்காவில், அந்நாட்டு ராணுவ தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமானை சந்தித்து பேசினா
-
பிரிட்டனில் பாராளுமன்ற தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
04 Jul 2024லண்டன், பிரிட்டனில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 10-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
04 Jul 2024சென்னை, தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டியது
04 Jul 2024டெய்ர் அல்-பலாஹ்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையான போரில் இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டியது.
-
மேட்டுப்பாளையம் - கோவை இரட்டை இருப்புப் பாதை : ரயில்வே அமைச்சரிடம் எல் முருகன் கோரிக்கை
04 Jul 2024புது டெல்லி, மேட்டுப்பாளையம் - கோவை ரயில் நிலையம் வரை இரட்டை இருப்புப் பாதை அமைக்க ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கோரிக்கை விடுத்த
-
பிரிட்டன் தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி
04 Jul 2024லண்டன்: பிரிட்டனில் நேற்ற நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் போட்டியிட்டுள்ளனர்.