எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Stelin 2022 02 23](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/02/Stelin_2022_02_23.jpg?itok=ZATFSDPX)
Source: provided
சென்னை : தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில், மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று (ஜூலை 1) இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூலை2) கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், சமீப வாரங்களில் இலங்கைக் கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. IND-TN-10-MO-1379 மற்றும் IND-TN-09-MO-2327 என்ற பதிவெண்களைக் கொண்ட இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளிலும், இரண்டு பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகளிலும் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் ஜூலை 1, அன்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
1974 ஆம் ஆண்டிலிருந்தே, அப்போதைய மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ஜூன் 27 நாளிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதைக் கோடிட்டுக் காட்டியுள்ள முதல்வர், திமுக தலைமையிலான மாநில அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை அப்போது முழுவீச்சில் எதிர்த்தது என்பதையும், தனது எதிர்ப்பை தமிழக சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, இது சம்பந்தமாக மாநில அரசுடன் முறையாக கலந்தாலோசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், இந்திய மீனவர்களின் உரிமைகளுக்கும், நலன்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், அவற்றைப் பறிக்கும் வகையிலும் கச்சத் தீவை முழுமையாக இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது அப்போதைய மத்திய அரசுதான் என்று தனது கடிதத்தில் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது தலைவரும், அப்போதைய திமுக தலைவருமான கருணாநிதி உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து, அதில் “மத்திய அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்புக்கு முரணானதாக இருக்கும்போது, கச்சத்தீவின் இறையாண்மை ஒரு தீர்க்கப்பட்ட விஷயம் என்று கூற முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறியிருந்ததை முதல்வர் தனது கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.
பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்சினையை தேர்தல் நேர முழக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும், கச்சத்தீவை மீட்க குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் அது எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் , தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும் என முதல்வர் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில், மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
புரோட்டீன் லட்டு![]() 1 day 6 hours ago |
காலிபிளவர் ரோஸ்ட்![]() 5 days 9 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 1 week 1 day ago |
-
ஹத்ராஸ் நகர் செல்ல ராகுல் காந்தி திட்டம் : காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்
04 Jul 2024புது டெல்லி, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் 121 பேர் உயிரிழந்த உ.பி.,யின் ஹாத்ராஸ் நகருக்கு செல்ல எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளதாக காங்கிரஸ் பொதுச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2024.
04 Jul 2024 -
பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: முன்னாள் செனட் உறுப்பினர் உள்பட 5 பேர் உயிரிழப்பு
04 Jul 2024லாகூர், பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் செனட் உறுப்பினர் இதயத்துல்லாகான் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு
04 Jul 2024புதுச்சேரி, புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
04 Jul 2024புது டெல்லி, பா.ஜ.க.மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு
04 Jul 2024சென்னை, ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் நடத்துநர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்து
-
மக்களுடன் முதல்வர் திட்ட துவக்க விழா: முதல்வர் ஸ்டாலின் வரும் 11-ம் தேதிதருமபுரி செல்கிறார்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
04 Jul 2024தருமபுரி, மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்க வரும் 11-ம் தேதி தருமபுரி செல்கிறார்.
-
அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கு: தி.மு.க. பிரமுகர் உட்பட 9 பேர் கைது
04 Jul 2024சேலம், சேலம் அ.தி.மு.க. நிர்வாகி சண்முகம் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தி.மு.க.
-
மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி டுவிட்டர் பதிவு
04 Jul 2024சென்னை, மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம் என்று தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடியை சந்தித்து சந்திரபாபு நாயுடு பேச்சு: ஆந்திராவுக்கு வரி சலுகை வழங்க வலியுறுத்தல்
04 Jul 2024திருப்பதி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு வரி சலுகை வழங்க வலியுறுத்தி உள்ளார்.
-
தேசிய மருத்துவ ஆணைய தலைவராக டாக்டர் பி.என். கங்காதர் நியமனம்: மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
04 Jul 2024புது டெல்லி, தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவராக டாக்டர் பி.என். கங்காதர் நியமிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய அறிவிப்பை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
எல்லைப் பிரச்சினையை தீர்க்கும் முயற்சியை இரட்டிப்பாக்க ஒப்புதல்: சீன அமைச்சரை சந்தித்த பின் ஜெய்சங்கர் தகவல்
04 Jul 2024அஸ்தானா, எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க சீனா ஒப்புக்கொண்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு இந்திய வெள
-
டெல்லி, அரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி இல்லை: ஜெய்ராம் ரமேஷ்
04 Jul 2024புது டெல்லி, டெல்லி மற்றும் அரியானாவில் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி இருக்காது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.&nbs
-
அக்னி வீரர் குடும்பத்துக்கு இழப்பீடு: ராகுலின் குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் விளக்கம்
04 Jul 2024புது டெல்லி, அக்னிவீரர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்திருந்த கருத்துக்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
-
15 நாட்களில் 10-வது சம்பவம்: பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்து விபத்து
04 Jul 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் நேற்று மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.
-
நீங்கள் நலமா? திட்ட பயனாளிகளுடன் வீடியோ காலில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
04 Jul 2024சென்னை, சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து அரசு திட்ட பயனாளிகளிடம் நேற்று வீடியோ காலில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம், நீங்கள
-
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்த ராஜஸ்தான் பா.ஜ.க. அமைச்சர்
04 Jul 2024ஜெய்ப்பூர், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜஸ்தானில் பா.ஜ.க.வை சேர்ந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கிரோடி லால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
மெட்ரோ ரயில் திட்ட வழித்தடங்கள்: கோவையில் ஆசிய வங்கி அதிகாரிகள் கள ஆய்வு
04 Jul 2024கோவை, கோவையில் மெட்ரோ ரயில் திட்ட வழித்தடங்கள் குறித்து ஆசிய வங்கி அதிகாரிகள் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
-
பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வேன்: நேபாள பிரதமர் பிரசந்தா திட்டவட்டம்
04 Jul 2024காத்மாண்டு, பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள போவதாக நேபாள பிரதமர் பிரசந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
பிரிட்டனில் பாராளுமன்ற தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
04 Jul 2024லண்டன், பிரிட்டனில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
-
வங்கதேச ராணுவ தளபதியை சந்தித்து பேசிய இந்திய கடற்படை தலைவர்
04 Jul 2024டாக்கா, இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி வங்காளதேச ராணுவத் தலைமையகமான டாக்காவில், அந்நாட்டு ராணுவ தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமானை சந்தித்து பேசினா
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டியது
04 Jul 2024டெய்ர் அல்-பலாஹ்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையான போரில் இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டியது.
-
தமிழகத்தில் 10-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
04 Jul 2024சென்னை, தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மேட்டுப்பாளையம் - கோவை இரட்டை இருப்புப் பாதை : ரயில்வே அமைச்சரிடம் எல் முருகன் கோரிக்கை
04 Jul 2024புது டெல்லி, மேட்டுப்பாளையம் - கோவை ரயில் நிலையம் வரை இரட்டை இருப்புப் பாதை அமைக்க ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கோரிக்கை விடுத்த
-
பிரிட்டன் தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி
04 Jul 2024லண்டன்: பிரிட்டனில் நேற்ற நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் போட்டியிட்டுள்ளனர்.