முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலப்பு : ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

புதன்கிழமை, 3 ஜூலை 2024      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில்  8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் வரை மெத்தனால் கலந்திருந்ததாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை சமர்பித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 229 போ் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 65 போ் உயிரிழந்தனர். 150 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 பேரும், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் 6 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஓய்வு பெற்ற ஐகோா்ட்டு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் ஆணையம் அமைக்கப்பட்டு, இச்சம்பவம் தொடா்பாக அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில்  8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் வரை மெத்தனால் கலந்திருந்ததாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை சமர்பித்துள்ளது. 

இது தொடர்பான  வழக்கு விசாரணை நேற்று நடந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் இதுவரை தமிழக அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த உடன் உடனடியாக கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று உடனடி நடவடிக்கையை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்பட்டது. 

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சமும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்பட்டது. முதலமைச்சரின் உடனடி உத்தரவின் பெயரில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஏ.வ.வேலு ஆகியோர் கள்ளக்குறிச்சி விரைந்தனர். அடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். 

தமிழக அரசின் உத்தரவின் பெயரில் குற்றவாளிகளை கண்டறியும் வழக்கானது சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 வழக்குகள் பதியப்பட்டன. கள்ளக்குறிச்சி கலெக்டர், ஏ.டி.ஜி.பி. ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். 9 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பாக முழுதான அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் 132 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். 6 குழுக்கள் பிரிக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழக டி.ஜி.பி.க்கள் இந்த வழக்கை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மெத்தனால் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் வரையில் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி மிகமது சபீக் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து