எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் டோல்கேட்டை அகற்றிட வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது கப்பலூர் டோல்கேட் மற்றும் முக்கிய சாலைகளில் குறுக்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் 9 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடங்கி திருமங்கலம் நகரம் ஸ்தம்பித்தது.
திருமங்கலம் நகரின் எல்லைக்கு மிகவும் அருகிலுள்ள கப்பலூர் நான்கு வழிச்சாலையில் உபயோகிப்பாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் டோல்கேட் விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது. இங்கு நான்கு வழிச்சாலையை பயன்படுத்திடாமல் சர்வீஸ் சாலையின் வழியாக சென்றிடும் திருமங்கலம் பகுதி உள்ளுர் வாகனங்களிடம் அவ்வப்போது டோல் கட்டணம் கேட்பதும், அதற்கு திருமங்கலம் பகுதியிலுள்ள வாடகை மற்றும் சொந்த வாகனங்களின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதும் வாடிக்கையான ஒன்றாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே சர்வீஸ் சாலையை மட்டுமே பயன்படுத்தி செல்லும் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த உள்ளுர் வாகனங்கள் உரிய ஆவணங்களை காட்டி கட்டண விலக்கு பெற்று பயணம் மேற்கொண்டு வந்தன.
சர்வீஸ் சாலையை பயன்படுத்தி சென்றிடும் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த உள்ளுர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு சலுகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கு மாறாக தற்போது கட்டண விலக்கு ரத்து செய்யப்பட்டு நேற்று முதல் 50சதவீத சுங்க கட்டணம் செலுத்திச் சென்றிட வேண்டும் என கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் அறிவித்தது.
இந்த அறிவிப்பு திருமங்கலம் தொகுதி உள்ளுர் வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து திருமங்கலம் நகரில் அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து சங்கங்கள்,வாடகை மற்றும் சொந்த உபயோக வாகனங்களின் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் இணைந்து தேசிய நெடுஞ்சாலை விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள கப்பலூர் டோல்கேட்டை வேறு இடத்திற்கு மாற்றிட வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நேற்று கப்பலூர் டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் டோல்கேட்டின் குறுக்கே தரையில் அமர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கட்சி நிர்வாகிகள் மற்றும் போராட்டக்குழுவினருடன் இணைந்து டோல்கேட்டை அகற்றிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனிடையே கப்பலூர் டோல்கேட் மற்றும் திருமங்கலம் நகரைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளின் குறுக்கே ஏராளமான வாகனங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிறுத்தினர். இதனால் திருமங்கலம் நகரின் வழியாக சென்றிடும் தேசிய நான்குவழி நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் 5கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கட்சி நிர்வாகிகள் மற்றும் போராட்டக்குழுவினர் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றினர். அப்போது அதிகளவில் திரண்ட போராட்ட குழுவினர் போலீஸ் வாகனங்கள் முன்பாக மறியலில் ஈடுபட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரை போலீஸ் வேன்களிலிருந்து கீழே இறக்கினர்.
இதனை தொடர்ந்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் ஆர்.டி.ஓ. சாந்தி,தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அலுவலர் பரத்வாஜ், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், டி.ஸ்.பி.அருள், ஏ.டி.எஸ்.பி. கருப்பையா, சிட்கோ தொழிலதிபர்கள் சங்க தலைவர் ரகுநாதராஜா மற்றும் போராட்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் முடிவு எட்டப்படாத நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கப்பலூர் டோல்கேட்டில் முற்றுகை போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் காலை 9 மணிக்கு துவங்கிய முற்றுகை போராட்டம் மாலை 6 மணியை தாண்டி 9 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
இதனால் தேசிய நெடுஞ்சாலை எண் 44-ல் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.இருப்பினும் மாவட்ட கலெக்டர் தொலைபேசியில் அளித்த உத்தரவாதத்தின் பேரில் வரும் 15-ம் தேதி திங்கள் கிழமை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் அதுவரையில் திருமங்கலம் பகுதி உள்ளுர் வாகனங்கள் வழக்கம் போல் கட்டண விலக்கு பெற்று இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 9மணி நேர முற்றுகை போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
எனினும் வரும் திங்கள் கிழமை பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் மீண்டும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 9மணி நேரமாக நீடித்து வந்த பரபரப்பான முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்து நடுவழியில் நின்றிருந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கிளம்பிச் சென்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பிரட் உப்மா3 days 18 hours ago |
முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ்6 days 17 hours ago |
கடாய் பன்னீர்1 week 3 days ago |
-
ஒட்டுமொத்த நாடும் வயநாடு மக்களுடன் நிற்கிறது: கார்கே
30 Jul 2024புதுடெல்லி, ஒட்டுமொத்த நாடும் வயநாடு மக்களுடன் நிற்கிறது என்று பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
-
கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
30 Jul 2024சென்னை, தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சேலம் கால்நடை, விலங்கின அறிவியல் ஆராய்ச்சி மையத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
30 Jul 2024சென்னை, சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்
-
வரும் டிசம்பர் மாதத்திற்குள் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த தீவிர ஏற்பாடு
30 Jul 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க.
-
கேரள நிலச்சரிவில் சிக்கி பலர் பலி: ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் இரங்கல்
30 Jul 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவரும் காங்., எம்.பி.,யுமான
-
மைசூரு நோக்கி சித்தராமையாவுக்கு எதிராக பா.ஜ., ம.ஜ.த. பாதயாத்திரை அறிவிப்பு
30 Jul 2024பெங்களூரு, கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தை கண்டித்து பாஜக, மஜதவினர் மைசூரு நோக்கி பாதயாத்திரை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்
-
கேரளா வயநாட்டில் அதிகாலையில் நேர்ந்த துயரம்: நிலச்சரிவில் அடியோடு புதைந்த 2 கிராமங்கள்
30 Jul 2024வயநாடு, கேரள மாநிலம் வயநாட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்து நடந்த 3 நிலச்சரிவுகளில் சிக்கி 2 கிராமங்கள் புதைந்ததில் 128 பேர் பலியாகினர்.
-
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனுபாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
30 Jul 2024புதுடெல்லி, உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
-
கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன உருளை வடிவ வடிகால் கண்டெடுப்பு
30 Jul 2024திருப்புவனம், கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன உருளை வடிவ வடிகால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-07-2024.
30 Jul 2024 -
137 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்களில் நீர் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
30 Jul 2024சென்னை, மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் வரும் டிசம்பர் மாதம் 13-ம் தேதி வரை 137 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்த
-
சென்னையில் அம்மா உணவகங்களை சீர்படுத்த 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
30 Jul 2024சென்னை, சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
-
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 5 கோடி ரூபாய் நிவாரணம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு - பினராயிடம் கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
30 Jul 2024சென்னை, வயநாடு வெள்ள, நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கென ரூ.5 கோடி நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
மத்திய அரசிடம் ரூ.24,000 கோடி சிறப்பு நிதியுதவி கோரிய கேரளம்
30 Jul 2024புது தில்லி: ரூ.24,000 கோடி சிறப்பு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரள அரசு சார்பில் கடந்த மாதம் கோரியிருந்ததாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டு
-
தனுஷ் நடிக்க தடையா..? விளக்கம் கேட்ட கார்த்தி
30 Jul 2024சென்னை, தமிழ் சினிமாவில் இப்போது இருக்கக்கூடிய ஒரு மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து கழகங்களும் சேர்ந்த கூட்டமானது நேற்று சென்னையில் நடைபெற்றது.
-
3 மாணவர்கள் பலியான சம்பவம்: டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்: உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க கோரிக்கை
30 Jul 2024புதுடெல்லி, டெல்லியில் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
30 Jul 2024தஞ்சை, காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3 தினங்களுக்கு முன் மாலை தண்ணீர் திறக்கப்பட்டது.
-
வயநாடு சுற்றுலா சென்ற தமிழர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
30 Jul 2024சென்னை: தமிழகத்தில் இருந்து சுற்றுலாச் சென்றவர்கள் தொடர்பாக தமிழக அரசு உதவி எண்ணை அறிவித்துள்ளது.
-
ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தம் 13 நாட்கள் விடுமுறை
30 Jul 2024புதுடெல்லி, ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை விடப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
-
இந்திய எல்லையில் உள்ள சீன ராணுவ வாகனங்கள்..? சாட்டிலைட் காட்சியால் பரபரப்பு
30 Jul 2024லடாக்: இந்திய எல்லையில் உள்ள சீனாவின் பாலத்தில் ராணுவ வாகனங்கள் இருக்கும் சாட்டிலைட் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2026-2027-ம் ஆண்டுகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
30 Jul 2024புதுடெல்லி: அடுத்த 2 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியா சாம்பியன்...
-
மகளிர் டி-20 தரவரிசை: இந்திய வீராங்கணைகள் ஏற்றம்
30 Jul 2024துபாய்: மகளிர் டி-20 தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கணைகள் ஏற்றம் கண்டுள்ளனர்.
-
வயநாடு நிலச்சரிவு சம்பவம்: நடிகர் கமல்ஹாசன் வேதனை
30 Jul 2024சென்னை, நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன.
-
தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை
30 Jul 2024சென்னை, இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
-
கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு: நிலசரிவு குறித்து முதல்வர் பினராயி விஜயன் வேதனை
30 Jul 2024திருவனந்தபுரம், கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் பேரழிவு என்று வயநாடு நிலசரிவு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.