எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : மராட்டியத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பூபேந்திர யாதவ் உள்பட 13 மூத்த தலைவர்களிடம் பா.ஜ.க. பொறுப்புகளை ஒப்படைத்துள்ளது.
மராட்டிய மாநிலத்தில் சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைய இருக்கிறது. இதையொட்டி வருகிற நவம்பர் மாதம் அங்கு சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மராட்டியத்தில் தற்போது பா.ஜ.க. ஆதரவுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜ.க. சேர்ந்த பட்னாவிஸ் துணை முதல்வராக உள்ளார்.
வருகிற சட்டசபை தேர்தலிலும் ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனா கட்சியுடன் தேர்தலை சந்திக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
கடந்த தேர்தலில் ஒன்றிணைந்த சிவசேனா கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தது. ஆனால் இம்முறை சிவசேனா 2-ஆக பிரிந்து கிடக்கிறது. ஏக்நாத் ஷிண்டே பிரிவு பா.ஜ.க. கூட்டணியிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா பிரிவு காங்கிரஸ் கூட்டணியிலும் உள்ளது. இதனால் இம்முறை மராட்டியத்தில் கடும் போட்டி ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.
இதையடுத்து இம்முறை ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. புது வியூகம் அமைத்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தேர்தலை சந்திக்க மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பூபேந்திர யாதவ் உள்பட 13 மூத்த தலைவர்களிடம் பா.ஜ.க. பொறுப்புகளை ஒப்படைத்துள்ளது.
8 மண்டலமாக பிரிக்கப்பட்டு இவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 6 அமைச்சர்கள் மற்றும் 7 மூத்த தலைவர்கள் ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக வெற்றி பெறுவது குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோவா மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் சதீஷ்தோந்த் கொங்கன் மண்டல பகுதியையும், குஜராத் மாநில பொதுச்செயலாளர் ரத்னாகர் வடக்கு மராட்டியம் பகுதிகளிலும், தெலுங்கானா பா.ஜ.க. பொதுச்செயலாளர் சந்திரசேகர் கட்சி பிரசாரத்தையும் கவனிப்பார்கள்.
மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஹிதானந்த் சர்மா மேற்கு விதர்பா பகுதிகளையும், ஆந்திர பிரதேச பா.ஜ.க. பொதுச்செயலாளர் மதுக்கர் மராத்வாடா மண்டல பகுதிகளையும் கவனிப்பார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 days 22 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 3 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 6 days ago |
-
பும்ராவுக்கு ஸ்மித் புகழாரம்
23 Sep 2024அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.
-
குரூப்-2, 2ஏ தேர்வு தற்காலிக விடை குறியீடு வெளியீடு
23 Sep 2024சென்னை : டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2ஏ தேர்வு கடந்த 14-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற நிலையில் அதற்கான தற்காலிக விடைக்குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய புள்ளிப்பட்டியல்: முதல் மூன்று இடங்களில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை
23 Sep 2024சென்னை : நியூசி.க்கு எதிராக இலங்கை வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய புள்ளிப்பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை முதல் 3 இடங்களை பெற்றுள்ளது.
-
அதிகமுறை 5 விக்கெட்டுகள்: வார்னேவின் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்
23 Sep 2024சென்னை : ஒரு இன்னிங்சில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷேன் வார்னேவின் சாதனையை சமன் செய்துள்ளார் அஸ்வின்.
-
'நோ பார்க்கிங்' பலகைகளை அனுமதியின்றி வைக்க கூடாது : சென்னை காவல்துறை அறிவுறுத்தல்
23 Sep 2024சென்னை : நோ பார்க்கிங் பலகைகளை முன் அனுமதியின்றி வைக்க கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ள சென்னை காவல்துறை, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் சிரமத்தை ஏற்
-
செஸ் ஒலிம்பியாட் தொடரில் சாம்பியன்: ரோகித் பாணியில் வெற்றியை கொண்டாடிய இந்திய அணி
23 Sep 2024புடாபெஸ்ட் : செஸ் ஒலிம்பியாட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி ரோகித் பாணியில் வெற்றியை கொண்டாடினர்.
-
சீதாராம் யெச்சூரி நினைவேந்தல் நிகழ்ச்சி: இந்தியாவின் கருத்தியல் அடையாளமாக விளங்கியவர் என முதல்வர் பெருமிதம்
23 Sep 2024சென்னை : நாட்டின் கருத்தியல் அடையாளமாக விளங்கியவர் சீதாராம் யெச்சூரி என்று மறைன்த சீதாராம் யெச்சூரிக்கு வீர வணக்கம் மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவருக்கு முதல்வர்
-
சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு
23 Sep 2024சென்னை : சென்னை ஐகோர்ட்டில் புதிதாக நியமிக்கப்பட்ட 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
-
குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ரூ.3,000: காஷ்மீரில் ராகுல் தேர்தல் வாக்குறுதி
23 Sep 2024ஜம்மு காஷ்மீர் : ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகை வழங்கப்படுமென ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
-
உலக செஸ் சாம்பியன் போட்டி குறித்து நான் யோசிக்கவில்லை : கிராண்ட் மாஸ்டர் குகேஷ் பேட்டி
23 Sep 2024புடாபெஸ்ட் : உலக செஸ் சாம்பியன் போட்டி பற்றி நான் இப்போது யோசிக்கவில்லை என்று தெரிவித்துள்ள கிராண்ட் மாஸ்டர் குகேஷ் செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்றது மகிழ்ச
-
8 இடங்களில் வெயில் சதம்
23 Sep 2024சென்னை : தமிழகத்தில் நேற்று 8 இடங்களில் வெயில் சதமடித்த நிலையில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
-
மதுரை மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
24 Sep 2024மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்லூரி முதல்வர், பொறியாளர் அறிக்கை தா
-
மு.மேத்தா, பி.சுசிலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது : வரும் 30-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்
24 Sep 2024சென்னை : கருணாநிதியின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில், கவிஞர் மு.மேத்தா, பின்னணி பாடகி பி.சுசிலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை வரும் 30-ம் த
-
முன்னாள் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்கு பேஜர் வெடிப்பு காரணமா? ஈரான் எம்.பி. சந்தேகம்
24 Sep 2024டெக்ரான், ஈரான் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்துக்கு பேஜர் வெடிப்பும் காரணமாக இருக்கலாம் என்று ஈரான் எம்.பி.
-
உடல் உறுப்பு தானம் செய்ய முதல்வர் ஸ்டாலின் பதிவு : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
24 Sep 2024சென்னை : சென்னையில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்து உள்ளார் என்று அமைச்சர் மா.
-
போப் ஆண்டவருக்கு உடல்நலக் குறைவு: பொதுமக்களுடனான சந்திப்பு ரத்து
24 Sep 2024வாடிகன் சிட்டி, உடல்நலக்குறைவு காரணமாக போப் ஆண்டவரின் திட்டமிடப்பட்ட பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக வாடிகன் சிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவி
-
மராட்டிய சட்டசபை தேர்தல்: மூத்த தலைவர்கள் 13 பேரிடம் பொறுப்புகளை ஒப்படைத்த பா.ஜ.க.
24 Sep 2024மும்பை : மராட்டியத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பூபேந்திர யாதவ் உள்பட 13 மூத்த தலைவர்களிடம் பா.ஜ.க.
-
பாலியல் வழக்கு: பிரபல மலையாள நடிகர் முகேஷ் கைதாகி ஜாமினில் விடுதலை
24 Sep 2024கொச்சி : நடிகை அளித்த பாலியல் குற்றச்சாட்டில் மலையாள நடிகரும், எம்.எல்.ஏ.வுமான முகேஷ் கைது செய்யப்பட்டார்.
-
கொளத்தூர் தொகுதியில் மக்கள் நலத்திட்டங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
24 Sep 2024சென்னை : கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடம், புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் மற்றும் நீத்தார் நினைவு மண்டபம் ஆ
-
சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை
24 Sep 2024சென்னை : சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்பேஸ் எக்ஸ் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலன் அனுப்ப திட்டம்: எலான் மஸ்க் தகவல்
24 Sep 2024நியூயார்க், அடுத்த இரண்டு ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்துக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஐந்து ஸ்டார்ஷிப்களை அனுப்பும் திட்டம் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த 5 வங்கதேசத்தினர் கைது
24 Sep 2024மும்பை, மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தினர் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
இஸ்ரேல் மீது 200 ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்
24 Sep 2024ஜெருசலேம், இஸ்ரேலின் ரமத் டேவிட் விமானப் படைத்தளம் , நாசரேத் நகரம், மஹிடோ விமானப் படைத்தளம், ஹைபா, அப்லா போன்ற நகரங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு 200-க்கும் மேற்பட்
-
மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் : ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தகவல்
24 Sep 2024ஈரோடு : தமிழகத்தில் மூடப்படவுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
-
ஊடுருவல் அதிகரிப்பு; அமித்ஷாவின் பேச்சுக்கு வங்கதேச அரசு கண்டனம் : இந்திய தூதருக்கு அவசர கடிதம்
24 Sep 2024டாக்கா : ஜார்கண்டில் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சுக்கு, வங்கதேச இடைக்கால அரசு பதிலடி கொடுத்து, இந்திய தூதருக்கு அவசர கடிதம் அனுப்பி உள்