எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.17 - கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் குறித்து பேசி வரும் மத்திய அமைச்சருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு உயர்நீதிமன்றங்களை மதிப்பதில்லை என்று நீதிபதிகள் ஆதங்கம் தெரிவித்தனர்.
மத்திய அணுசக்தி பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறாமல் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு தடை விதிக்க கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறியாளர் சுந்தர்ராஜன் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி ஆகியோர் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.
இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த மனுதாரர் மேலும் 2 மனுக்களை நேற்று தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் ஜோதிமணி, தேவதாஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார்.
இது தவிர மத்திய அணுசக்தி பாதுகாப்பு ஆணையம் விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமலேயே அணுமின் நிலையத்தில் எரிபொருளை நிரப்புவதற்கு அந்த ஆணையம் அனுமதித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், மத்திய அரசு வக்கீல் என்ன விளக்கம் கூறவுள்ளார் என்று கேள்வி கேட்டனர். அந்த சமயத்தில் மத்திய அரசு தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து நீதிபதி ஜோதிமணி, கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நடந்து கொள்ளும் விதத்திற்கும், மாநில அரசுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் அமைச்சகம் எல்லா தொழிற்சாலைகளுக்கும் பின்பற்றும் நடைமுறைகளை இதற்கும் பின்பற்றக் கூடாது. இந்த விவகாரம் மிகவும் சிக்கலானது. கதிர்வீச்சு சம்பந்தப்பட்ட பிரச்சினை இதில் மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் மற்ற மாநில ஆணையத்திடம் அறிவுரைகளை கேட்டு முடிவு எடுக்கக் கூடாதா? அதை ஏன் பின்பற்றுவது கிடையாது? 45 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் கொண்ட கனநீர் கடலில் கலந்தால் அங்குள்ள உயிரினங்கள் அழிந்து விடும். ஏன் இவ்வாறு சுற்றுச்சூழல் ஆணையம் செயல்படுகிறது.
இந்த வழக்கு கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் பேட்டிகளையும், அறிக்கைகளையும் தொடர்ந்து கொடுத்து கொண்டு வருகிறார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 25-ம் தேதியன்று எரிபொருள் நிரப்பப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசை பொறுத்த வரையில் உச்சநீதிமன்றத்தைதான் மதிக்கிறது. உயர்நீதிமன்றங்களை மதிப்பது கிடையாது. பிறகு ஏன் உயர்நீதிமன்றத்திற்கு வர வேண்டும்.
இந்த சென்னை உயர்நீதிமன்றம் தனது 150 வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. பாரம்பரியமிக்க இந்த உயர்நீதிமன்றத்திற்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மதிப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட கிடையாதா?
கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அது தொடர்பான அறிவிப்பை எப்படி அறிவிக்கலாம்? உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மட்டும் தான் மத்திய அரசு மதிக்குமா? உயர்நீதிமன்றம் பற்றி பொதுமக்கள் மத்தியில் என்ன நினைப்பார்கள்?
இந்த வழக்கை விசாரித்த நாள் முதல் இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகம் அறிவித்து வரும் ஒவ்வொரு அறிவிப்புகள் குறித்தும் எனக்கு தினந்தோறும் எஸ்.எம்.எஸ். மூலம் கருத்துக்கள் வருகிறது. இந்த வழக்கை விசாரிக்காமல் விட்டுவிட முடிவு செய்யலாமா என்ற எண்ணம் எனக்கு தோன்றுகிறது. இவ்வாறு நீதிபதி தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.
இதையடுத்து, இந்த மனு குறித்து வரும் செவ்வாய் கிழமைக்குள் விளக்கம் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
வரும் 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் நிறுத்தம்
30 Apr 2024கடலூர் : தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை மே 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
-
சி.சி.டி.வி. ஒயர் இணைப்பில் பழுது: ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கம்
30 Apr 2024ஈரோடு : ஒயர் இணைப்பில் பழுது காரணமாக சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
-
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
-
விசாரணைக்கு ஆஜராகுவதில் பாபா ராம்தேவுக்கு விலக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
30 Apr 2024புதுடெல்லி : விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து பாபா ராம்தேவுக்கு விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.