எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசை நடத்தக் கோரிய தீர்மானம் நேற்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை கொண்டு வந்த தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சிகளும் விவாதம் நடத்திய பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இடஒதுக்கீடு மசோதா கிடப்பில் இருப்பதாகவும், சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்றும் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி திங்கள்கிழமை கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக் கோரி விரைவில் தீர்மானம் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை சட்டப்பேரவையில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்தக் கோரி தனித் தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது., “சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் சம வாய்ப்புகளையும், சம உரிமைகளையும் கொண்டவர்களாக மாற்றுவதன் மூலம் தான் உண்மையான பொருளாதார வளர்ச்சி அடைந்த சமுதாயமாக நாம் மாற இயலும். அந்த நோக்கத்தோடு தான் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய தளங்களிலும் அனைத்து தரப்பு மக்களிடையே ஒரு சமநிலையை கொண்டுவருவதற்காக இடஒதுக்கீடு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் தாழ்த்தப்பட்டோர், பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கே வளர்ச்சியடைய வழிவகை செய்து அதனை கடைப்பிடித்து வருகிறோம். சமீபகாலமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதே பேரவையில் கூட பாமக உறுப்பினர் ஜிகே மணி, சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும் என பேசினார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் திமுகவின் எண்ணமும். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரம் குறித்து விரிவாக பேசுகிறேன்.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் கீழ் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய பணி. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் பணி. மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்கள் அனைத்தும் இக்கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்பட்டு மத்திய அரசால் தொகுத்து வெளியிடப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டப்பிரிவு 3-ன் படி மத்திய அரசு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஆனால் புள்ளிவிவர சட்டம் 2008ன் அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம் என்று பொதுவெளியில் பரவலாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த சட்டத்தின்படி மாநில அரசுகள் சமூக பொருளாதார புள்ளி விவரங்களை சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுளளதை தவிர, இதே சட்டத்தின் பிரிவு 3 (அ)-ன் படி இந்த அரசியலமைப்பு சட்டத்தின் 7வது அட்டவணையில் உள்ள இனங்கள் தொடர்பாக புள்ளி விவரங்கள் சேகரிக்க இயலாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது 7வது அட்டவணையில்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு 69வது இனமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த சட்டப்பிரிவு 32-ன் படி மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் கீழ் கணக்கெடுக்கப்படும் மக்கள் தொகை தொடர்பான விவரங்களை சேகரிக்க இயலாது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பொதுவெளியில் தவறாக சொல்லப்படும், புள்ளிவிவர சட்டம் 2008ன் கீழ் மாநில அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த இயலாது. சட்டப்படி, நிலைக்க கூடிய கணக்கெடுப்பு என்றால் மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் தான் மேற்கொள்ள வேண்டும். எனவே தான் இப்பணியை மத்திய அரசு மேற்கொள்வது தான் முறையாக இருக்கும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 246ன் படி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டிய அடிப்படையான பணியான மக்கள் தொகை கணக்கெடுப்பினை 2021ம் ஆண்டு மேற்கொள்ளாமல் மத்திய அரசு இன்று காலம் தாழ்த்தி வருகிறது. முதல் ஆண்டு கோவிட் தொற்றை காரணமாக சொன்னார்கள். கோவிட் தொற்று முடிந்து 3 ஆண்டுகள் கடந்தும் அப்பணியை மேற்கொள்ளாமல் இருப்பது மத்திய அரசு தனது கடமையைப் புறக்கணிக்கும் செயல்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு உடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனடியாக நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடந்த ஆண்டே கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசு இந்தப் பணியை மேற்கொள்ளும் போது கிடைக்கும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் மாநில அரசு எடுக்கும் முடிவுகள், இயற்றும் சட்டங்களுக்கு சட்டப் பாதுகாப்பு இருக்கும். மாறாக அந்தந்த மாநில அரசுகள் ஒரு சர்வே என்ற பெயரில் புள்ளி விவரங்களை சேகரித்து அதனை சட்டமாக மாற்றினால் நீதிமன்றங்களில் ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது. இந்த காரணங்களின் அடிப்படையில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு உடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மானத்தை முன்மொழிகிறேன்.” என்று தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட தீர்மானம்:
இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சமஉரிமை, வாய்ப்பை கிடைக்க உறுதி செய்யும் வகையில் திட்டங்களை தீட்டி சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று இந்த பேரவை கருதுகிறது. எனவே, 2021-ம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும், அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் மீது உறுப்பினர்கள் தங்கள் கருத்தை தெரிவித்தனர். தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் தனித்தீர்மானம் நிறைவேறியது என அறிவிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 days 18 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 weeks 16 hours ago |
-
நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
28 Sep 2024பெங்களூரு, தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் நிர்மலா சீதாராமன் உள்பட சம்பந்தப்பட்ட பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்க
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் வரும் 4-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
28 Sep 2024சென்னை, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 04-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு : 650 பேர் எழுதினர்
28 Sep 2024சென்னை : சென்னையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்.
-
பெரிய நிறுவனங்களுக்கு தமிழகமே முதல் முகவரி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
28 Sep 2024ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடியில் 470 ஏக்கரில் அமையவுள்ள டாடா, ஜாக்குவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டா
-
கோவை பாப்பம்மாள் மறைவு: பிரதமர் மோடி புகழஞ்சலி
28 Sep 2024புதுடெல்லி : உடல்நலக்குறைவால் மறைந்த பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இயற்கை விவசாயியுமான கோவையைச் சேர்ந்த மூதாட்டி பாப்பம்மாளுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை தொடக்கம்
28 Sep 2024சென்னை : தமிழகத்தில் காலாண்டு விடுமுறை நேற்று முதல் தொடங்கியது. விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் அக். 7-ம் தேதி திறக்கப்படவுள்ளன.
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
28 Sep 2024விருதுநகர் : சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
-
த.வெ.க. மாநாட்டுக்கு அனுமதி இலவசம்: பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு
28 Sep 2024சென்னை : தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு பாஸ் எதுவும் கிடையாது. அனுமதி இலவசம் என்று அறிவித்துள்ள கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், விக்கிரவாண்டி த.வெ.க.
-
பீகாருக்கு கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை : மாவட்டங்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்
28 Sep 2024பாட்னா : இந்திய வானிலை ஆய்வு மையம் பீகாருக்கு கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் உஷார் நிலையில் இருக்கும்படி அறி
-
நாமக்கல் அருகே பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் வாக்குமூலத்தால் பரபரப்பு
28 Sep 2024நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் பிடிட்ட வடமாநில கொள்ளையர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
உண்மையான தலைவர் யார்? மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி புது விளக்கம்
28 Sep 2024வாஷிங்டன், இன்றைய காலகட்டத்தில் உண்மையான தலைவர் யார் என்பது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.,) புது விளக்கம் அளித்துள்ளார்.
-
மோசமான விஷயங்கள் மட்டுமே காட்டுகிறது: அதிபரானால் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்வேன்: டிரம்ப்
28 Sep 2024வாஷிங்டன், கூகுள் தேடுதலில், தன்னை பற்றி மோசமான விஷயங்கள் மட்டுமே காட்டுவதாகவும், அதிபராக பதவியேற்றால் அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்வேன் என்றும் குடியரசு கட்சி சார்பில்
-
ராணிப்பேட்டையில் ரூ. 9 ஆயிரம் கோடி முதலீட்டில் தனியார் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
28 Sep 2024ராணிப்பேட்டை : தமிழகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்ட
-
ஸ்காட்லாந்து சிகரத்தில் இந்திய தேசியக்கொடியுடன் அண்ணாமலை
28 Sep 2024ஓஸ்லோ : ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சாதனை படைத்துள்ளார். இதனை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாக அவர் கூறி உள்ளார்.
-
பயணி உணவில் கரப்பான் பூச்சி: மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா
28 Sep 2024மும்பை : டெல்லியில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்தது குறித்து அவர் புகார் தெரிவித்ததற்கு விம
-
ஓசூரில் டாடா மின்னணு உதிரிபாக தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
28 Sep 2024கிருஷ்ணகிரி, ஓசூரில் டாடா மின்னணு உதிரிபாக தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி தீயை அணைத்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-09-2024.
28 Sep 2024 -
வந்தே பாரத் ரயில்களை வாங்க ஆர்வம் காட்டும் வெளிநாடுகள்
28 Sep 2024புதுடெல்லி : வந்தே பாரத் ரயில்களை வாங்குவதில் கனடா, சிலி, மலேசியா ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
-
திருப்பதி லட்டு விவகாரம்: பதில் கூற நடிகர் ரஜினி மறுப்பு
28 Sep 2024சென்னை : திருப்பதி லட்டு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதில் கூறுவதை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்துவிட்டார்.
-
நேபாளத்தில் கனமழை, வெள்ளம் - 39 பேர் பலி
28 Sep 2024காத்மண்டு : நேபாளத்தில் இடைவிடாத மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தமிழக அமைச்சரவையில் மாற்றம்: துணை முதல்வராக இன்று பதவியேற்கிறார் உதயநிதி
28 Sep 2024சென்னை, தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்படவுள்ளது. துணை முதல்வராக உதயநிதி இன்று பதவியேற்கிறார். மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சராகிறார்.
-
பாகிஸ்தான் மூன்றாக பிரியும், தண்ணீருக்கும் கையேந்தும் : காஷ்மீர் பிரச்சாரத்தில் உ.பி. முதல்வர் யோகி பேச்சு
28 Sep 2024லக்னோ : பாகிஸ்தான் ஒவ்வொரு சொட்டு தண்ணிருக்கும் கையேந்தும் நிலை ஏற்படும். மூன்றாக உடையும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
-
புனே மெட்ரோ ரெயில் சேவை: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
28 Sep 2024புனே, புனேயின் சிவாஜிநகர் மாவட்ட கோர்ட்டு- ஸ்வர்கேட் இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
-
விரைவில் இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்: மாலத்தீவு அதிபர் முய்சு தகவல்
28 Sep 2024மாலே, இந்தியாவுடன் மாலத்தீவு மிகவும் வலுவான இரு தரப்பு உறவை கொண்டுள்ளது என்றும், விரைவில் இந்தியாவுக்கு செல்ல திட்டுமிட்டுள்ளேன் என்றும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு
-
நாட்டின் சிறந்த சுற்றுலா கிராமமாக கீழடி தேர்வு
28 Sep 2024சிவகங்கை : நாட்டில் பாரம்பரிய பிரிவின் கீழ் சிறந்த சுற்றுலா கிராமமாக தமிழகத்தைச் சேர்ந்த கீழடி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.