முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கூட்டணியின் வெற்றியை கண்டு எதிரிகளுக்கு பொறாமை : காஞ்சிபுரம் பவள விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      தமிழகம்
CM-3 2024-03-28

Source: provided

சென்னை : தி.மு.க. கூட்டணி வெற்றிக்கூட்டணி, பிளவை ஏற்படுத்த முடியாது என்று காஞ்சிபுரத்தில் நடந்த பவள விழாவில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியின் வெற்றியை கண்டு எதிரிகளுக்கு பொறாமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்றது. திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த விழாவானது, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் மாவட்ட செயலாளரான அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் வருகை தந்து உரையாற்றினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். 

திமுக பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது.,  “அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அவர் உருவாக்கிய இயக்கத்தின் பவள விழாவை நான் நடத்திக்கொண்டிருக்கிறேன். இது திமுகவிற்கும், அண்ணாவிற்கும் கிடைத்துள்ள பெருமை. அண்ணா வழியில் தமிழ்நாட்டை வழிநடத்தியவர் கலைஞர். தி.மு.க. என்ற மூன்றெழுத்தில் உயிர் அடங்கியுள்ளது.

தமிழகத்தில் நாம் அமைத்த கூட்டணியை பார்த்துதான் இன்டியா கூட்டணி உருவானது. சில கூட்டணி தேர்தல் சமயத்தில் மட்டும்தானுள்ளது. தேர்தல் முடிந்தால் கூட்டணியே முடிந்துப்போய் விடுகிறது. ஆனால் திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முடியாது. திமுக கூட்டணியில் மோதல் வராதா? பகைமையை வளர்க்க முடியாதா என சிலர் நினைக்கின்றனர். திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த சிலர் அவதூறு பரப்பி விஷம வேலைகளை செய்தனர். பாசிசத்தை வீழ்த்தவே ஒன்றிணைந்து உள்ளோம். திமுக கூட்டணியில் மோதல் வராது. திமுக கூட்டணியில் வெற்றியை கண்டு எதிரிகளுக்கு பொறாமை.

இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை. பாராளுமன்ற தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியவில்லை. நடந்து முடிந்த மக்களவை தேர்தலை கூட 7 கட்டங்களாக நடத்தி முடித்தனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் மாநிலங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். திமுக கூட்டணி அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகிறது. அண்ணா, கலைஞர் வழியில் திராவிட மாடல் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். மாநில சுயாட்சியை மீட்டெடுக்க உறுதியேற்போம். இவ்வாறு அவர் பேசினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து