எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![INDIA 2024-06-28](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/06/28/INDIA_2024-06-28.jpg?itok=4qJJvT2Q)
Source: provided
பிரிட்ஜ்டவுன் : டி-20 உலகக்கோப்பையை 2 முறை வெல்லுமா இந்திய அணி என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ள நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி எதிர்கொள்கிறது.
20 நாடுகள் பங்கேற்பு...
20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் சூப்பர்-8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா (குரூப் ஏ) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து (பி), ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் (சி), தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் (டி) ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
இரண்டு பிரிவுகளாக...
முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நேபாளம் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசமும், குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்காவும் இடம் பெற்றன.
இன்று இரவு இறுதி...
இதன் முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. முதல் அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தியது. 2-வது அரைஇறுதியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்தது. கோப்பைக்கான இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
3-வது முறையாக...
இந்தியா 3-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2007-ம் ஆண்டு நடந்த முதல் 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2014-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா, இலங்கையிடம் தோற்றது. இந்திய அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் உள்ள இந்தியா, சாம்பியன் பட்டத்தை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டாயத்தில் கோலி...
பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (248 ரன்), சூர்யகுமார் யாதவ் (196 ரன்), ரிஷப் பண்ட் (171 ரன்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா (139 ரன், 8 விக்கெட்) அசத்தி வருகிறார். கோலி 7 ஆட் டத்தில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளார். அவர் ரன் குவிக்கும் கட்டாயத்தில் உள்ளார். அதேபோல் ஷிவம் துபே அதிரடியாக விளையாட வேண்டும். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங் (15 விக்கெட்), பும்ரா (13 விக்கெட்), குல்தீப் யாதவ் (10 விக்கெட்), அக்சர் பட்டேல் (8 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.
வெல்லும் ஆர்வம்....
மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி சாம்பியன் பட்டம் வென்று நீண்ட நாள் உலக கோப்பை தாகத்தை தீர்க்கும் ஆர்வத்தில் உள்ளது. பேட்டிங்கில் டி காக் (204 ரன்), டேவிட் மில்லர் (148 ரன்), கிளாசன் (138 ரன்), ஸ்டப்ஸ் (134 ரன்), மார்க்ரம் (119 ரன்), ஹென்ட்ரிக்ஸ் (109 ரன்) ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் நோக்கியா (13 விக்கெட், ரபடா (12 விக்கெட்), ஷம்சி (11 விக் கெட்), மகராஜ் (9 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.
விறுவிறுப்பாக...
இந்த தொடரில் இரு அணிகளும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இந்தியா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தென்ஆப்பிரிக்கா சில ஆட்டங்களில் போராடியே வெற்றி பெற்றது. அதே வேளையில் கோப்பைக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பார்படாஸ் சென்றது...
கோப்பைக்கான இறுதிப் போட்டி பிரிட்ஜ்டவுனில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிபோட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி பார்படாஸ் சென்றடைந்தது.
இதுவே முதல் முறை...
நடப்பு தொடரில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடிய எந்த ஆட்டங்களிலும் தோல்வியே சந்திக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா விளையாடிய 8 ஆட்டங்களிலும் ( லீக் 4, சூப்பர் 8 சுற்று 3, அரையிறுதி1) வெற்றி பெற்றுள்ளது. அதேவேளை இந்திய அணி விளையாடிய 7 ஆட்டங்களிலும் ( லீக் 3, சூப்பர் 8 சுற்று 3, அரையிறுதி 1) வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் தோல்வியே சந்திக்காத அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். இந்த மாபெரும் வரலாற்று சாதனையுடன் இவ்விரு அணிகளும் இன்று மோத உள்ளன.
ரிசர்வ் டே உண்டா..?
கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இன்று இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த ஆட்டம் பார்படாஸ் நகரில் நடைபெற உள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் மழையால் ஆட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிறைய ஆட்டங்களின் இடையே மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து ஆட்டமும் 1 மணி நேரம் மழையால் பாதிக்கபட்டது. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால், நாளை (30-ம் தேதி) ரிசர்வ் டே நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
புரோட்டீன் லட்டு![]() 1 min 58 sec ago |
காலிபிளவர் ரோஸ்ட்![]() 4 days 3 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 6 days 23 hours ago |
-
2026 டி-20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி நேரடியாக தகுதி : மேலும் 19 அணிகளும் பங்கேற்பு
02 Jul 2024துபாய் : 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ள நிலையில் இந்திய அணி நேரடியாக தகுதிப்பெற்றுள்ளது.
-
வெற்றிக்கோப்பையுடன் இன்று தாயகம் திரும்பும் இந்திய அணி
02 Jul 2024பார்படாஸ் : டி-20 உலக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வெற்றிக்கோப்பையுடன் இன்று தாயகம் திரும்புகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-07-2024.
03 Jul 2024 -
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி: தமிழக வீரர் உள்ளிட்ட 3 பேருக்கு இடம்
02 Jul 2024மும்பை : இந்தியா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன.
-
அனைவருக்கும் நன்றி: பிரியாவிடை பெற்றார் பயிற்சியாளர் டிராவிட்
02 Jul 2024BOX - 1 உள்ளது...
-
சாதனை படைத்த 2024 - டி-20 உலகக்கோப்பை
02 Jul 20242024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 1- ந் தேதி தொடங்கி ஜூலை 29-ந் தேதி முடிவடைந்தது. இதில் இறுதிபோட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதியது.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: மணீஸ் சிசோடியா, கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
03 Jul 2024புது டெல்லி, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஸ் சிசோடியா மற்றும் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான காவிதாவின் நீதிம
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3,000 கனஅடியாக அதிகரிப்பு
03 Jul 2024சேலம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
-
சென்னை அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் : கோட்டூர்புரம் போலீசார் விசாரணை
03 Jul 2024சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை கோட்டூர்புரம் போலீசார் தேடி வருகின்றனர்.
-
தமிழகத்தில் 9-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
03 Jul 2024சென்னை : தமிழகத்தில் 9-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: கஜகஸ்தான் சென்றடைந்த அதிபர்கள் புடின், ஜி ஜின்பிங்
03 Jul 2024அஸ்டானா, கஜகஸ்தான் நாட்டின் அஸ்டானா நகரில் நேற்று முதல் 2 நாட்களுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது.
-
தமிழகத்திற்கு கிருஷ்ணா நீரை திறக்க ஆந்திர அரசு நிபந்தனை
03 Jul 2024சென்னை : கிருஷ்ணா கால்வாய் பராமரிப்பு கட்டண நிலுவைத்தொகை, 129 கோடி ரூபாயை விடுவித்தால், தமிழகத்திற்கு நீர் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என ஆந்திர அரசு கூறி
-
இரு மாநில பிரச்சினைக்கு தீர்வு காண ரேவந்த் ரெட்டிக்கு சந்திரபாபு அழைப்பு
03 Jul 2024அமராவதி : இரு மாநில பிரச்சினைக்கு தீர்வு காண தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
-
நீட் தேர்வு தேவையில்லை: மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு
03 Jul 2024சென்னை : நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது.
-
இடைவிடாது பெய்யும் கனமழை: மணிப்பூரில் இன்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை
03 Jul 2024இம்பால், மணிப்பூரில் கனமழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பள்ளிகளுக்கு இன்று வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
-
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தி.மு.க. மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்
03 Jul 2024சென்னை : நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் நேற்று தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
மம்தாவுக்கு எதிராக கவர்னர் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று ஒத்திவைப்பு
03 Jul 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக அம்மாநில கவர்னர் ஆனந்த போஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
விக்கிரவாண்டி தொகுதியில் 3 நாட்கள் அமைச்சர் உதயநிதி தீவிர பிரச்சாரம்
03 Jul 2024சென்னை : இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 6,7,8 தேதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக தி.மு.க.
-
காசாவில் அடுக்குமாடி குடியிருப்பு மீது குண்டு வீசி இஸ்ரேல் தாக்குதல் பாலஸ்தீனர்கள் 12 பேர் பலி
03 Jul 2024காசா, மத்திய காசாவில் அடுக்குமாடி குடியிருப்பு மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.
-
போதைப்பொருள் கடத்தும் இடமாகி விட்டதா சிறைச்சாலை? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
03 Jul 2024சென்னை : தமிழக சிறைச்சாலைகள், தற்போது பாதுகாப்பாக போதைப்பொருட்கள் விற்பனை மேற்கொள்ளும் இடமாக மாறி விட்டதா? என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம் : வரும் 11-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
03 Jul 2024சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத மந்நடராஜ மூர்த்தியின் ஆனி திருமஞ்சன தரிசன உற்சவம் நேற்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
-
டிரம்ப் உடனான விவாத நிகழ்ச்சியின் போது தூங்கி விட்டேன்: ஜோ பைடன்
03 Jul 2024வாஷிங்டன், டிரம்ப் உடனான டி.வி. விவாத நிகழ்ச்சியின்போது கிட்டத்தட்ட தூங்கி விட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்
-
சபரிமலை கோவில் புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவருவின் மகன் நியமனம்
03 Jul 2024திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவருவின் மகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
ஹத்ராஸ் சம்பவம்: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து உ.பி. முதல்வர் நலம் விசாரிப்பு
03 Jul 2024லக்னோ : ஹத்ராஸ் மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை உ.பி.
-
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலப்பு : ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்
03 Jul 2024சென்னை : கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் வரை மெத்தனால் கலந்திருந்ததாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை சமர்பித்துள்ளது.