முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா: தென்கொரியா

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      உலகம்
North-Korea 2024-07-01

Source: provided

சியோல் : வட கொரியா ஏவுகணை சோதனை செய்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்து இருக்கிறது. இரு நாடுகள் இடையே பதட்டமான சூழல் நிலவும் நிலையில், புதிய ஏவுகணை சோதனை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

குறுகிய தூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை அதிகாலை வேளையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே மற்றொரு ஏவுகணை சோதனை செய்யப்பட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.  

வட கொரியாவின் ஏவுகணை சோதனையை தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி இருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. மேலும், வட கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்த தகவல்களை அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு பகிரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. 

ஏவுகணை சோதனை குறித்து வட கொரியா சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. கடந்த வாரம் ஏராளமான ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா தெரிவித்து இருந்தது. இதற்கு பதிலளித்த தென் கொரியா சில ஏவுகணைகள் நடுவானில் வெடித்து சிதறியதாக தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து