முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      தமிழகம்
Fisher-Boat

Source: provided

சென்னை : இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

61 நாள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இதற்கிடையில் இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், ராமேசுவரம் தனுஷ்கோடியில் இருந்து சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அதன்படி கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 25 பேரை கைது செய்தனர். மேலும் 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீனவர்கள் 25 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து