எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மாநில கல்வி கொள்கை தயாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தது. அறிக்கையில், இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டும். நீட் தேர்வு இருக்கக்கூடாது. 3,5,8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் இருக்கக் கூடாது. கல்லூரிகளில் சேர 12ம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதாது. 11ம் வகுப்பு மதிப்பெண்களையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2021-22-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை தமிழக அரசு அமைக்கும்’’ என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தமிழ்நாடு மாநிலத்திற்காக கல்வி கொள்கையை உருவாக்க டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர், ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவன ஓய்வுபெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் ராமானுஜம், மாநில திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் யூனி செப் முன்னாள் சிறப்பு கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அகரம் அறக்கட்டளை ஜெயஸ்ரீ உள்ளிட்ட 14 பேர் இதில் இடம் பெற்றிருந்தனர்.
அனைவருக்கும் உள்ள கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதலை அடிப்படையாக கொண்டு மாநில கல்வி கொள்கையை தயார் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக் கொள்கையை தயாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகளை வழங்கினார்கள். 600 பக்கங்கள் கொண்டதாக அதன் அறிக்கை உள்ளது.
அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய பரிந்துரைகள் என்னென்ன என்ற விவரம் வருமாறு., 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் வைக்க கூடாது. பிளஸ்-1 பொதுத் தேர்வை தொடர வேண்டும். கல்லூரிகளில் சேருவதற்கு பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண் மட்டும் போதாது. பிளஸ்-1 மதிப்பெண்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலம் இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும். நீட் தேர்வை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
தேசிய கல்வி கொள்கையில் தெரிவித்துள்ளதை போல மாணவர்கள் உயர் கல்வி படிக்கின்றபோது படிப்பதில் இருந்து பாதியில் வெளியேறி விட்டு மீண்டும் அதே படிப்பில் தொடரும் வழிமுறையை தமிழகத்தில் பின்பற்ற தேவையில்லை. முதலாம் ஆண்டு மட்டும் படித்துவிட்டு பாதியில் வெளியேறினால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கிடவும், 2-ம் ஆண்டில் வெளியேறினால் அவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ், 3-ம் ஆண்டில் வெளியேறினால் அவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும் என தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்டு உள்ளது. அதனை மாநில கல்விக் கொள்கை நிராகரிக்கிறது.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள் தான் முதல் வகுப்பில் சேர முடியும் என உள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் படி தற்போது உள்ள நடைமுறையே தொடரும். அதாவது 5 வயது பூர்த்தியானால் 1-ம் வகுப்பில் சேர்க்கலாம். தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படும் விளையாட்டுப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் நர்சரிகள், மழலையர் பள்ளி போன்றவற்றின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக ஒரு விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்படுவதோடு, மாணவர்கள் 10-ம் வகுப்பில் வாரிய தேர்வுகளை எடுக்கும் வரை, பள்ளி அளவில் மட்டுமே தேர்வுகள் இருக்க வேண்டும்.
முந்தைய நிலைகளில் மையப்படுத்தப்பட்ட தேர்வுகள் இருக்க கூடாது. கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள் மற்றும் முறையான பயிற்சி விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட வேண்டும். மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பயிற்சி முகாம்கள் மற்றும் விளையாட்டு தடகள நிகழ்வுகளில் கலந்து கொள்ள திறமையான மாணவர்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டும்.
உயர் கல்வியில் தேர்வுகளை புத்தகத்தின் உதவி கொண்டு எழுதுவதை அனுமதிக்கலாம். நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும். மாநிலத்தில் குழந்தைகள் மேம்பாட்டு மையங்களை ஒரே ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் கொண்டு வருவது முறையான நிர்வாகத்திற்கு அவசியம். அனைத்து தாய்-சேய் குழந்தை பராமரிப்பு மையம் மற்றும் அது தொடர்பான நிறுவனங்களை ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டு வர பரிந்துரைக்கிறது.
ஸ்போக்கன் இங்கிலீஷ் தவிர ஸ்போக்கன் தமிழ் மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு மனநல ஆலோசகர் ஒரு சுகாதார அதிகாரி, ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒரு உறுப்பினர் ஆகியோரை கொண்ட தகுந்த வழிகாட்டுதல்களுடன் தனிக்குழு அமைக்க வேண்டும். இரு பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.
முக்கிய பரிந்துரைகள்:
1) 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது.
2) இருமொழிக் கொள்கையை பள்ளிகளில் தொடர வேண்டும்.
3) பிளஸ்1 பொதுத்தேர்வு தமிழக பள்ளிகளில் தொடர வேண்டும்.
4) கல்லூரிகளில் சேர 11ம் வகுப்பு மதிப்பெண்களையும் சேர்க்க வேண்டும்.
5) நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கூடாது.
6) கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
புரோட்டீன் லட்டு2 days 12 hours ago |
காலிபிளவர் ரோஸ்ட்6 days 15 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்1 week 2 days ago |
-
ரேசன் பொருட்கள் தட்டுப்பாடு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
05 Jul 2024சென்னை : ரேசன் பொருள் தட்டுப்பாடு குறித்து சுட்டிக்காட்டியும், தி.மு.க. அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1281 கனஅடியாக அதிகரிப்பு
05 Jul 2024சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1281 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும்? - சென்னை ஐகோர்ட் கேள்வி
05 Jul 2024சென்னை : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
15-ம் தேதி அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
05 Jul 2024சென்னை : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் வரும் 15-ம் தேதி காலை உணவு திட்டத
-
என்ஜினியரிங் தரவரிசை பட்டியல் 10-ம் தேதி வெளியாகிறது
05 Jul 2024சென்னை : என்ஜினியரிங் தரவரிசை பட்டியல் 10-ம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 11-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
05 Jul 2024சென்னை : தமிழகத்தில் 11-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நேர்மையான விண்ணப்பதாரர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்: நீட் தேர்வு முழுவதையும் ரத்து செய்வது நியாயமாக இருக்காது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
05 Jul 2024புதுடெல்லி, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்டது.
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அரசு வழங்கியது எப்படி? தொகையை மறுபரிசீலிக்க முடியுமா என ஐகோர்ட் கேள்வி
05 Jul 2024சென்னை, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
05 Jul 2024சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.6,760-க்கும் சவரன் ரூ.54,080-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை சற்று உயர்ந்தது.
-
2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 11-ல் முதுநிலை ‘நீட்’ தேர்வு நடைபெறும்: தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு
05 Jul 2024புதுடெல்லி, முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
-
பிரிட்டன் பொதுத்தேர்தல்: 26 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் வெற்றி
05 Jul 2024லண்டன், பிரிட்டனில் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
-
மர்மநபர்கள் வெறிச்செயல்: சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலை
05 Jul 2024சென்னை : சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
-
பிரிட்டன் பார்லி. உறுப்பினரான உமா குமரனுக்கு முதல்வர் வாழ்த்து
05 Jul 2024சென்னை : தமிழர்களுக்கு தாங்கள் மிகப்பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளீர்கள்” என்று பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரான முதல் தமிழ்ப் பெண்ணான உமா குமரனுக்கு தமிழக முதல்வர் ம
-
வழக்கறிஞர் டு பிரிட்டன் பிரதமர்: கீர் ஸ்டார்மர் கடந்து வந்த பாதை
05 Jul 2024லண்டன் : பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரிட்டனின் அடுத்த பிரதமராக அவர் விரைவில்
-
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பயணி கைது
05 Jul 2024திருச்சி : சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.16 கோடி மதிப்பிலான தங்கத்தை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
-
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை பயன்படுத்த அனுமதி பெற வேண்டும்: தே.மு.தி.க. சார்பில் அறிவிப்பு
05 Jul 2024சென்னை, மறைந்த நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தை ஏ.ஐ.
-
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னையில் தி.மு.க.வழக்கறிஞர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்
05 Jul 2024சென்னை : புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தி.மு.க.
-
பிரிட்டனின் புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் பொறுப்பேற்கிறார்
05 Jul 2024லண்டன், பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் கீர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பே
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து: தொகுதி வாரியாக ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டம்
05 Jul 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் முடிவுள் குறித்து தொகுதி வாரியாக ஆய்வு செய்ய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
-
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் : தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் அமல்
05 Jul 2024சென்னை : டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2024.
05 Jul 2024 -
மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு என்ன திட்டத்தை வாங்கி கொடுத்தார்? அண்ணாமலைக்கு இ.பி.எஸ். கேள்வி
05 Jul 2024கோவை, அண்ணாமலை பொறுப்புக்கு வந்த பிறகு தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என குற்றஞ்சாட்டிய அ.தி.மு.க.
-
துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்: விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
05 Jul 2024சென்னை, சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்ட இன்டியா கூட்டணி வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வாக்களியுங்கள்” என்று விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு மு
-
வரலாற்றில் முதல் முறையாக கனடா ராணுவ தளபதியாக மூத்த பெண் அதிகாரி நியமனம்
05 Jul 2024ஒட்டவா, கனடாவின் புதிய ராணுவ தளபதியாக மூத்த பெண் ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கோலாலம்பூர் விமான நிலையத்தில் எரிவாயு கசிவு: 39 பேர் பாதிப்பு
05 Jul 2024கோலாலம்பூர் : மலேசிய நாட்டின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால் சுமார் 39 பேர் பாதிக்கப்பட்டனர்.