எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவையில் ராகுலின் பேச்சுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட பதிலுக்கு காங்கிரஸ் எம்.பி.க்களும் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
எம்.பி.,க்கள் எதிர்ப்பு...
லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சிவபெருமான், இயேசு, குருநானக் உள்ளிட்ட படங்களை காண்பித்து பேசினார். அவையின் விதிப்படி எந்தவொரு மத கடவுளின் படத்தையும் காண்பிக்க கூடாது என பா.ஜ., எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ராகுல் பேசியதாவது., சிவபெருமானுடன் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு உள்ளது. நாம் அனைவரும் பிறக்கிறோம், இறக்கிறோம். ஆனால் பிரதமர் மோடி பயாலஜிக்கலாக பிறக்காதவர்.
அகிம்சையை...
பிரதமர் மோடி ஒட்டுமொத்த இந்து மதத்தின் பிரதிநிதி அல்ல. ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமல்ல, நமது அனைத்து மதங்களும் துணிச்சலை பற்றி, அகிம்சையை பற்றிதான் பேசுகின்றன. இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களை பரப்பும் மதம் அல்ல. பா.ஜ., 24 மணி நேரமும் வன்முறை, வெறுப்பு ஆகியவவை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறது. இந்து மதம் அகிம்சையை போதிக்கிறது; வெறுப்பை அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் கண்டனம்...
இடைமறித்த பிரதமர் மோடி, ''ராகுலின் பேச்சு ஒட்டுமொத்த இந்துக்களின் மீதான தாக்குதல். இந்துக்களை வன்முறையாளராக காட்ட ராகுல் முயற்சிக்கிறார்'' எனக் கண்டனம் தெரிவித்தார். லோச்சபாவில் ஒருவர் பேசும்போது பிரதமர் மோடி குறுக்கிட்டு பேசுவது இதுவே முதல்முறை. பின்னர் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது., நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள், தங்களை கர்வமுடன் இந்துக்கள் என கூறி வருகின்றனர். ராகுல் தனது பேச்சுக்கு இந்த அவையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். எமர்ஜென்சி காலத்தில் தேசத்தையே சிறையில் அடைத்தவர்களுக்கு அபயத்தை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை.
விதி தெரியவில்லை...
டெல்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் காங்., ஆட்சி காலத்தில் தான் படுகொலை செய்யப்பட்டனர். அவையை இப்படி நடத்த முடியாது, ராகுலுக்கு விதி தெரியவில்லை என்றால், விதியை பற்றி அவருக்கு டியூஷன் நடத்துங்கள். படத்தை காட்டக்கூடாது என்று தெரிவித்த பிறகு மீண்டும், மீண்டும் அவர் இவ்வாறு செய்வது ஏற்புடையதல்ல. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
சமாஜ்வாதி எம்.பி.க்கு...
ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் கட்சி எம்.பி.,க்கள் இந்திய அரசியலமைப்பு சாசனத்தை சுட்டிக்காட்டி வலியுறுத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுப்ட்டனர். இதனால் அவை பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் மீண்டும் சிவபெருமானின் படத்தை எடுத்துக் காட்டியதுடன், அயோத்தியை உள்ளடக்கிய தொகுதியில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.,க்கு ராகுல் வாழ்த்து தெரிவித்தார். மேலும், ''அயோத்தியில் ராமர் பிறந்த மண்ணிலேயே பா.ஜ.,விற்கு பாடம் புகட்டப்பட்டுள்ளது'' என்றார். ராகுலின் பேச்சின்போது இடையிடையே மைக் அணைக்கப்பட்டதால், 'மைக் கன்ட்ரோல் யாரிடம் உள்ளது? அயோத்தி என்ற பெயரை சொன்ன உடனே என்னுடைய மைக் அணைக்கப்பட்டுவிட்டது.' என ராகுல் கேள்வி எழுப்பினார்.
பயமுறுத்தும்...
இதற்கு பதிலளித்த சபாநாயகர், ''நீங்கள் பேசுவதற்கு எழும்போது ஒருபோதும் உங்களுடைய மைக்க அணைக்கப்படுவதில்லை. இதே நடைமுறைதான் பழைய பார்லி.,யிலும் சரி, புதிய பார்லி.,யிலும் சரி'' என பதிலளித்தார். தொடர்ந்து ராகுல் பேசியதாவது., அயோத்தி அமைந்துள்ள தொகுதியில் போட்டியிட வேண்டும் என மோடி 2 முறை முயற்சி செய்தார். ஆனால், அயோத்தியில் போட்டியிட வேண்டாம், மக்கள் தோற்கடித்துவிடுவார்கள் என கணிப்பாளர்கள் எச்சரித்தனர்.
நல்ல தீர்ப்பை....
ராமர் கோயில் திறந்துவைக்கப்பட்டபோது அம்பானி, அதானி மட்டுமே அங்கு இருந்தனர்; சிறு வியாபாரிகளை தெருவில் வீசினர். அயோத்தி மக்களின் நிலத்தை பறித்துவிட்டனர்; வீடுகளை இடித்து விட்டனர். கோயில் திறப்பு விழாவில் அங்குள்ள மக்கள் கூட வரவில்லை. அதனால் தான் அயோத்தி மக்கள் பா.ஜ.,விற்கு நல்ல தீர்ப்பை அளித்தனர். இவ்வாறு பேசினார்.
கற்பிக்க வேண்டும்...
அப்போது பிரதமர் மோடி எழுந்து, ''அரசியலமைப்பு சட்டம் எதை சொல்கிறதோ . ஜனநாயகத்தை பற்றியும், அரசியல் சாசனத்தை பற்றியும் ராகுலுக்கு கற்பிக்க வேண்டும்'' என்றார்.
பணம் படைத்த...
தொடர்ந்து, ராகுல் பேசியதாவது., பணம் படைத்தவர்களுக்கான தேர்வாக நீட் அமைந்துவிட்டது. நீட் தேர்வின் மூலம் மருத்துவக்கல்வி வியாபாரம் ஆகிவிட்டது. தொழில்முறை தேர்வுகளை எல்லாம் நீங்கள் வணிகமுறை தேர்வுகளாக ஆக்கிவிட்டீர்கள். 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. காங்., உங்களை கண்டு பயப்படவில்லை. ஆனால் நீங்கள் காங்கிரசை பார்த்து பயப்படுகிறீர்கள். நீட் தேர்வில் ஒருவர் 'டாப்பர்' ஆக வரமுடியும். ஆனால், அவரிடம் பைசா இல்லையென்றால் மருத்துவம் படிக்க முடியாது.
விவாதம் நடைபெற...
இது பணக்கார குழந்தைகளுக்காக கொண்டு வரப்பட்டது. இத்தேர்வின் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை ஈட்டுகிறார்கள். நீட் தேர்வு குறித்து ஜனாதிபதி உரையில் ஒரு வார்த்தைக்கூட இடம்பெறவில்லை. நீட் பற்றி ஒருநாள் விவாதம் நடைபெற வேண்டும். நீட் தேர்வுக்காக மாணவர்கள் ஆண்டு கணக்கில் தயாராகி வருகின்றனர். மாணவர்களுக்கு, குடும்பத்தினர் பண ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் தேவையான ஆதரவை வழங்குகின்றனர். ஆனால் மாணவர்கள் இன்று நீட் தேர்வை நம்ப முடியாத சூழல் தான் நிலவுகிறது.
எங்களது கடமை...
இந்த தேர்வு பணக்கார மாணவர்களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. நான் எதிர்க்கட்சி தலைவரான பிறகு இதுவரை உணராத சிலவற்றை உணர்ந்தேன். காங்கிரசை மட்டுமல்ல, இங்குள்ள ஒவ்வொரு எதிர்க்கட்சியையும் நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறையை ஏவி விடும்போதும் அவர்களை பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை இவ்வாறு ராகுல் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
புரோட்டீன் லட்டு2 days 12 hours ago |
காலிபிளவர் ரோஸ்ட்6 days 15 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்1 week 2 days ago |
-
ரேசன் பொருட்கள் தட்டுப்பாடு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
05 Jul 2024சென்னை : ரேசன் பொருள் தட்டுப்பாடு குறித்து சுட்டிக்காட்டியும், தி.மு.க. அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1281 கனஅடியாக அதிகரிப்பு
05 Jul 2024சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1281 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும்? - சென்னை ஐகோர்ட் கேள்வி
05 Jul 2024சென்னை : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
15-ம் தேதி அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
05 Jul 2024சென்னை : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் வரும் 15-ம் தேதி காலை உணவு திட்டத
-
என்ஜினியரிங் தரவரிசை பட்டியல் 10-ம் தேதி வெளியாகிறது
05 Jul 2024சென்னை : என்ஜினியரிங் தரவரிசை பட்டியல் 10-ம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 11-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
05 Jul 2024சென்னை : தமிழகத்தில் 11-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நேர்மையான விண்ணப்பதாரர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்: நீட் தேர்வு முழுவதையும் ரத்து செய்வது நியாயமாக இருக்காது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
05 Jul 2024புதுடெல்லி, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்டது.
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அரசு வழங்கியது எப்படி? தொகையை மறுபரிசீலிக்க முடியுமா என ஐகோர்ட் கேள்வி
05 Jul 2024சென்னை, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
05 Jul 2024சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.6,760-க்கும் சவரன் ரூ.54,080-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை சற்று உயர்ந்தது.
-
2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 11-ல் முதுநிலை ‘நீட்’ தேர்வு நடைபெறும்: தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு
05 Jul 2024புதுடெல்லி, முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
-
பிரிட்டன் பொதுத்தேர்தல்: 26 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் வெற்றி
05 Jul 2024லண்டன், பிரிட்டனில் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
-
மர்மநபர்கள் வெறிச்செயல்: சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலை
05 Jul 2024சென்னை : சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
-
பிரிட்டன் பார்லி. உறுப்பினரான உமா குமரனுக்கு முதல்வர் வாழ்த்து
05 Jul 2024சென்னை : தமிழர்களுக்கு தாங்கள் மிகப்பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளீர்கள்” என்று பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரான முதல் தமிழ்ப் பெண்ணான உமா குமரனுக்கு தமிழக முதல்வர் ம
-
வழக்கறிஞர் டு பிரிட்டன் பிரதமர்: கீர் ஸ்டார்மர் கடந்து வந்த பாதை
05 Jul 2024லண்டன் : பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரிட்டனின் அடுத்த பிரதமராக அவர் விரைவில்
-
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பயணி கைது
05 Jul 2024திருச்சி : சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.16 கோடி மதிப்பிலான தங்கத்தை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
-
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை பயன்படுத்த அனுமதி பெற வேண்டும்: தே.மு.தி.க. சார்பில் அறிவிப்பு
05 Jul 2024சென்னை, மறைந்த நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தை ஏ.ஐ.
-
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னையில் தி.மு.க.வழக்கறிஞர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்
05 Jul 2024சென்னை : புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தி.மு.க.
-
பிரிட்டனின் புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் பொறுப்பேற்கிறார்
05 Jul 2024லண்டன், பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் கீர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பே
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து: தொகுதி வாரியாக ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டம்
05 Jul 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் முடிவுள் குறித்து தொகுதி வாரியாக ஆய்வு செய்ய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
-
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் : தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் அமல்
05 Jul 2024சென்னை : டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2024.
05 Jul 2024 -
மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு என்ன திட்டத்தை வாங்கி கொடுத்தார்? அண்ணாமலைக்கு இ.பி.எஸ். கேள்வி
05 Jul 2024கோவை, அண்ணாமலை பொறுப்புக்கு வந்த பிறகு தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என குற்றஞ்சாட்டிய அ.தி.மு.க.
-
துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்: விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
05 Jul 2024சென்னை, சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்ட இன்டியா கூட்டணி வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வாக்களியுங்கள்” என்று விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு மு
-
வரலாற்றில் முதல் முறையாக கனடா ராணுவ தளபதியாக மூத்த பெண் அதிகாரி நியமனம்
05 Jul 2024ஒட்டவா, கனடாவின் புதிய ராணுவ தளபதியாக மூத்த பெண் ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கோலாலம்பூர் விமான நிலையத்தில் எரிவாயு கசிவு: 39 பேர் பாதிப்பு
05 Jul 2024கோலாலம்பூர் : மலேசிய நாட்டின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால் சுமார் 39 பேர் பாதிக்கப்பட்டனர்.