எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![INDIA 2024-06-17](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/01/INDIA_2024-06-17.jpg?itok=gmpeAt_I)
Source: provided
பார்படாஸ் : டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் தனி விமானம் மூலம் இன்று டெல்லி வரும் இந்திய அணி வீரர்கள் பிரதமரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூறாவளியால்...
அட்லாண்டிக் கடலில் மையம் கொண்டுள்ள 4-ம் பிரிவு சூறாவளியால் மணிக்கு 210 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தங்கியுள்ள பார்படாஸ் நகரில் இருந்து 570 கி.மீ. தொலைவில் சூறாவளி மையம் கொண்டுள்ளதால், பிரிஜ்டவுன் விமான நிலையத்தில் இன்று விமான சேவைகளை நிறுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்திய வீரர்கள் பயணம் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
பயணத்தில் மாற்றம்...
பிரிஜ்டவுன் விமான நிலையத்தில் இருந்து நியூ யார்க் வந்து அங்கிருந்து எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் துபை வழியாக டெல்லி வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சூறாவளி காரணமாக இந்திய வீரர்களின் பயணத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அவர்கள் தனி விமானம் மூலம் நேரடியாக டெல்லி அழைத்து வர திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டெல்லி வரும் இந்திய வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெறவுள்ளனர். அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளின் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் என 70 பேர் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பெப்பர் சிக்கன்![]() 1 min 15 sec ago |
புரோட்டீன் லட்டு![]() 2 days 20 hours ago |
காலிபிளவர் ரோஸ்ட்![]() 1 week 2 min ago |
-
நேர்மையான விண்ணப்பதாரர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்: நீட் தேர்வு முழுவதையும் ரத்து செய்வது நியாயமாக இருக்காது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
05 Jul 2024புதுடெல்லி, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்டது.
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அரசு வழங்கியது எப்படி? தொகையை மறுபரிசீலிக்க முடியுமா என ஐகோர்ட் கேள்வி
05 Jul 2024சென்னை, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
05 Jul 2024சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.6,760-க்கும் சவரன் ரூ.54,080-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை சற்று உயர்ந்தது.
-
2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 11-ல் முதுநிலை ‘நீட்’ தேர்வு நடைபெறும்: தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு
05 Jul 2024புதுடெல்லி, முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
-
மர்மநபர்கள் வெறிச்செயல்: சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலை
05 Jul 2024சென்னை : சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
-
பிரிட்டன் பார்லி. உறுப்பினரான உமா குமரனுக்கு முதல்வர் வாழ்த்து
05 Jul 2024சென்னை : தமிழர்களுக்கு தாங்கள் மிகப்பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளீர்கள்” என்று பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரான முதல் தமிழ்ப் பெண்ணான உமா குமரனுக்கு தமிழக முதல்வர் ம
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து: தொகுதி வாரியாக ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டம்
05 Jul 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் முடிவுள் குறித்து தொகுதி வாரியாக ஆய்வு செய்ய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
-
ஆகஸ்ட்டில் மத்திய அரசு கவிழலாம்: லல்லு பிரசாத்
05 Jul 2024பாட்னா : ஆகஸ்ட்டில் மோடி அரசு கவிழலாம் என பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி.யின் ஜூன் மாத வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் ரோகித் சர்மா, பும்ரா
05 Jul 2024துபாய் : ஐ.சி.சி.யின் ஜூன் மாத வீரர் விருது பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, பும்ரா இடம்பிடித்துள்ளனர்.
-
ஒரு தலைமுறைக்கான வீரர்: பும்ராவுக்கு கோலி புகழாரம்
05 Jul 2024மும்பை : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு தலைமுறைக்கான வீரர் என அவருடன் இணைந்து விளையாடும் இந்தியாவின் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
-
ஆம் ஆத்மி பாராளுமன்றக்குழு தலைவராக சஞ்சய்சிங் நியமனம்
05 Jul 2024புதுடெல்லி : ஆம் ஆத்மியின் பாராளுமன்றக்குழு தலைவராக சஞ்சய் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
பார்லி. தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன் : ரிஷி சுனக் அறிவிப்பு
05 Jul 2024லண்டன் : பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது கன்சர்வேட்டிவ் கட்சி.
-
நன்றி தெரிவித்த கோலி
05 Jul 202420 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.
-
2024 டி20 உலகக்கோப்பையை ஒரு கேப்டனாக வென்றது மிக சிறப்பானது: ரோகித்
05 Jul 2024மும்பை : 2024 டி20 உலகக்கோப்பையை கேப்டனாக வென்றது மிகவும் சிறப்பானது என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
காவிக்கு பதில் இனி மஞ்சள்: அயோத்தி ராமர் கோவில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை
05 Jul 2024லக்னோ : அயோத்தி ராமர் கோயிலில், அர்ச்சகர்கள் அனைவரும் காவி நிறத்தில் மேலாடை, தலைப்பாகை, வேட்டி அணிந்திருந்தனர்.
-
ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு துவக்கம்
05 Jul 2024சென்னை : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
-
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.11 கோடி : மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
05 Jul 2024மும்பை : உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசு தொகையை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
ரூ.125 கோடி பரிசு...
-
மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
05 Jul 2024புதுடெல்லி : மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவின் நீதிமன்ற காவலை ஜூலை 18-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2024.
06 Jul 2024 -
பாகிஸ்தானில் 6 நாட்களுக்கு சமூக வலைதளங்களுக்கு தடை
06 Jul 2024லாகூர் : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வரும் 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை யு டியூப், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஈரான் அதிபர் தேர்தலில் மசூத் பெசெஷ்கியன் வெற்றி
06 Jul 2024டெக்ரான் : ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீர்திருத்தங்களை ஆதரிக்கும் வேட்பாளரான மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றுள்ளார்.
-
மங்கோலிய நாட்டின் பிரதமராக ஒயுன் எர்டீன் மீண்டும் தேர்வு
06 Jul 2024உலான்பாதர் : மங்கோலியா நாட்டில் கடந்த மாதம் 28-ம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது.
-
கனமழை முன்னெச்சரிக்கை: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
06 Jul 2024ஜம்மு : கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
-
பாராளுமன்றத்தில் வரும் 12-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர நேபாள பிரதமர் பிரசந்தா முடிவு
06 Jul 2024காத்மண்டு : நேபாள பிரதமர் பிரசந்தா வரும் 12-ம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடிவு செய்து உள்ளார்.
-
உக்ரைன் போர்: நேட்டோ நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை
06 Jul 2024மாஸ்கோ : ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் உக்ரைன்போர் விரைவில் அணு ஆயுத போராக மாறி விடும் என நேட்டோ நாடுகளுக்கு அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.