எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இன்று திருமங்கலத்தில் திட்டமிட்டபடி முழு அடைப்பு நடத்தப்படும் என போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
மதுரை திருமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான கப்பலூர் சுங்கச்சாவடி அமைத்துள்ளது. இது விதிமுறைகள் மீறி அமைக்கப்பட்டுள்ளதாக திருமங்கலம் சுற்றுவட்டார கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். அதனால், அவர்கள் இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று கடந்த பல ஆண்டாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால், திருமங்கலம் பகுதி சுற்றுவட்டார கிராம மக்களுக்கு மட்டும் கப்பலூர் சுங்கச்சாவடியில் இலவசமாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில் திடீரென்று, கப்பலூர் சுங்கச்சாவடியை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம், திருமங்கலம் பகுதி மக்களுக்கும் இலவச அனுமதியை ரத்து செய்தது. இதனால் அதிருப்தியடைந்த திருமங்கலம் சுற்றுவட்டார கிராம மக்கள், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுடன் அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் 4 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் சுமுக தீர்வு காணப்படாததால் சுங்கச்சாவடி எதிர்ப்புக் குழுவினர் இன்று திருமங்கலத்தில் முழு அடைப்பு நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், சுங்கச்சாவடி எதிர்ப்பு குழு நிர்வாகிகளையும், கிராம மக்களையும் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். அதன்படி, ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் சங்கீதா தலைமையில், அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் வருவாய்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர், சுங்கச்சாவடி எதிர்ப்புக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, “கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவது நம்முடைய எதிர்கால திட்டமாக இருந்தாலும், தற்காலிகமாக திருமங்கலம் பகுதி மக்களுக்கு சுங்கச்சாவடியில் வானகங்களுக்கு கட்டணம் பெறக்கூடாது என்பதும், இந்த வாகனங்களை தனி டிராக்கில் அனுமதிக்க வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்தக் கோரிக்கையை நம்முடைய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அரசு தலைமை செயலாளர், தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குநரிடம் தெரிவித்தோம்.
அதன்படி, கடந்த 2020ம் ஆண்டு வரை என்ன நடைமுறை பின்பற்றதோ அதையே பின்பற்ற வேண்டும், கூடுதலாக எந்த விதிமுறைகளையும் புகுத்தக்கூடாது, திருமங்கலம் பகுதி வாகனங்களை சுங்கக் கட்டணம் இல்லாமல் அனுமதிக்க வேண்டும்” என்றார்.
பொதுமக்கள் தரப்பில் பேசியவர்கள், “இப்படிதான் சொல்வார்கள், கடைசியில், புதுப் புது விதிமுறைகளை கொண்டு வந்துவிடுவார்கள். அதனால், கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்ற வேண்டும்” என்றனர். இதற்கு பதிலளித்த ஆட்சியர் சங்கீதா, “கண்டிப்பாக கட்டணம் வசூல் செய்யமாட்டார்கள். விரைவில் அதற்கான உத்தரவுகள் வரும். சுங்கச்சாவடியை அகற்றுவது தொடர்பாக நாம் முடிவெடுக்க முடியாது. மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.
இதை ஏற்க மறுத்த பொதுமக்கள், “அப்படியென்றால், அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றனர். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் மூர்த்தி, “புரியாமல் பேசாதீர்கள். கோரிக்கையை நிறைவேற்றிய பிறகு இப்படி சொல்வது நியாயமாக இருக்காது” என்றார்.
அதற்கு பொதுமக்கள் தரப்பில், “2020-ம் ஆண்டு நடைமுறை என்று சொல்கிறீர்கள். அதில் என்ன இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. மேலும், இது திருமங்கலம் பகுதிக்கான பிரச்சினை மட்டுமில்லை, திருமங்கலம் சட்டமன்ற தொகுதி மக்களுடைய பிரச்சினை. திருமங்கலம் சட்டமன்ற தொகுதி முழுவதும் வசிக்கும் மக்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லாமல் வாகனங்களை அனுமதிக்க வேண்டும்” என்றனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, “திருமங்கலம் என்பதற்கான ஆதார் கார்டைக் காட்டினால் போதும். சுங்கச்சாவடியில் கட்டணமின்றி அனுமதிப்பார்கள். ஆதார் கார்டும், திருமங்கலம் என்பதற்கான ஆர்டிஓ வாகனப்பதிவும் இல்லாவிட்டால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது” என்றார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் மற்றும் ஆட்சியர் தரப்புக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூச்சல், குழப்பத்துடனேயே கூட்டம் நிறைவடைந்தது. ஒரு தரப்பினர், அமைச்சர் பி.மூர்த்தி கூறிய வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்டாலும், பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அறிவித்துச் சென்றனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, “கப்பலூர் சுங்கச்சாவடிக்கு சுமுகமாக நிரந்தர தீர்வு காண்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வணிகர்கள், சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், 60 கி.மீ., தொலைவில் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். சுங்கச்சாவடி 2012-ம் ஆண்டு கப்பலூரில் அமைக்கப்பட்டது. அன்று முதல் 2020-ம் ஆண்டு வரை திருமங்கலம் பகுதி மக்கள் சுங்கக் கட்டணமில்லாமல் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 3 ஆண்டுகளாக சிலசமயம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதற்கு நிரந்தர தீர்வாக 2020-ம் ஆண்டு வரை என்ன நடைமுறை கடைபிடிக்கப்பட்டதோ அது பின்பற்றப்படும் என முடிவெடுக்கப்பட்டது. அதனால், திருமங்கலம் பகுதி மக்களுக்கு இனி எந்த விதமான தொந்தரவும் ஏற்படாது. இவர்கள் வாகனங்களை டோல்கேட்டில், 1 மற்றும் 10-வது டிராக்கில் கட்டணமில்லாமல் அனுமதிக்கப்படும்” என்றார்.
சுங்கச்சாவடி எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஹமீது கூறுகையில், “கடந்த 19-ம் தேதி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை எட்டப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் நேற்று எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும் சொல்லி அழைத்தனர். இப்போது, 2020-ம் ஆண்டு பின்பற்ற நடைமுறை என்று சொல்கிறார்கள். அதை விவரமாகச் சொல்லி, உத்தரவோ அல்லது கடிதமோ தர மறுக்கிறார்கள். அதனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. திட்டமிட்டப்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கும்” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்5 days 4 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 3 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 6 days ago |
-
மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் : ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தகவல்
24 Sep 2024ஈரோடு : தமிழகத்தில் மூடப்படவுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
-
வேலூர் மருத்துவமனையில் இருந்து மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி டிஸ்சார்ஜ்
24 Sep 2024வேலூர் : வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
-
அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
24 Sep 2024சென்னை : உதயநிதிக்கு துணை முதல்வர் வழங்கப்படுவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது
-
மு.மேத்தா, பி.சுசிலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது : வரும் 30-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்
24 Sep 2024சென்னை : கருணாநிதியின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில், கவிஞர் மு.மேத்தா, பின்னணி பாடகி பி.சுசிலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை வரும் 30-ம் த
-
உடல் உறுப்பு தானம் செய்ய முதல்வர் ஸ்டாலின் பதிவு : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
24 Sep 2024சென்னை : சென்னையில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்து உள்ளார் என்று அமைச்சர் மா.
-
மதுரை மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
24 Sep 2024மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்லூரி முதல்வர், பொறியாளர் அறிக்கை தா
-
பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து: இயக்குநர் மோகன் ஜி கைது
24 Sep 2024திருச்சி : பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி-யை திருச்சி போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
கொளத்தூர் தொகுதியில் மக்கள் நலத்திட்டங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
24 Sep 2024சென்னை : கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடம், புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் மற்றும் நீத்தார் நினைவு மண்டபம் ஆ
-
தி.மு.க. அரசை கண்டித்து சென்னையில் அ.தி.மு.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்
24 Sep 2024சென்னை : தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் புழக்கத்தையும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளையும் கட்டுப்படுத்தத் தவறிய
-
சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக நீதிபதி அல்லி நியமனம்
24 Sep 2024சென்னை, சென்னை ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளராக நீதிபதி அல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
முதல்வர் சித்தராமையா ராஜினாமா என்ற கேள்விக்கே இடமில்லை: டி.கே.சிவக்குமார் பதில்
24 Sep 2024பெங்களூரு, ஐகோர்ட் உத்தரவை அடுத்து முதல்வர் சித்தராமையா ராஜினாமா என்ற கேள்விக்கே இடமில்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 13 மாதங்களில் 12 ரவுடிகள் சுட்டுக்கொலை
24 Sep 2024சென்னை, தமிழகத்தில் 13 மாதங்களில் 12 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
-
இஸ்ரேல் மீது 200 ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்
24 Sep 2024ஜெருசலேம், இஸ்ரேலின் ரமத் டேவிட் விமானப் படைத்தளம் , நாசரேத் நகரம், மஹிடோ விமானப் படைத்தளம், ஹைபா, அப்லா போன்ற நகரங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு 200-க்கும் மேற்பட்
-
லட்டு குறித்து கருத்து: பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் கார்த்தி
24 Sep 2024சென்னை, லட்டு குறித்து தெரிவித்த கருத்துக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி.
-
கான்பூர் சென்றது இந்திய அணி
24 Sep 2024இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
-
போப் ஆண்டவருக்கு உடல்நலக் குறைவு: பொதுமக்களுடனான சந்திப்பு ரத்து
24 Sep 2024வாடிகன் சிட்டி, உடல்நலக்குறைவு காரணமாக போப் ஆண்டவரின் திட்டமிடப்பட்ட பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக வாடிகன் சிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-09-2024.
24 Sep 2024 -
இலங்கையின் 16-வது பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு
24 Sep 2024கொழும்பு, இலங்கையின் 16-வது பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்று கொண்டார். அவருக்கு அதிபர் அனுரா திசநாயகே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
-
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிக்கை
24 Sep 2024பெங்களூரு, நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
பாலியல் வழக்கு: பிரபல மலையாள நடிகர் முகேஷ் கைதாகி ஜாமினில் விடுதலை
24 Sep 2024கொச்சி : நடிகை அளித்த பாலியல் குற்றச்சாட்டில் மலையாள நடிகரும், எம்.எல்.ஏ.வுமான முகேஷ் கைது செய்யப்பட்டார்.
-
சந்திரபாபு நாயுடுவை விமர்சித்த திருப்பதி முன்னாள் தேவஸ்தான தலைவர் மீது வழக்குப்பதிவு
24 Sep 2024திருப்பதி : முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விமர்ச்சித்த திருப்பதி கோவில் முன்னாள் தேவஸ்தான தலைவர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
முன்னாள் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்கு பேஜர் வெடிப்பு காரணமா? ஈரான் எம்.பி. சந்தேகம்
24 Sep 2024டெக்ரான், ஈரான் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்துக்கு பேஜர் வெடிப்பும் காரணமாக இருக்கலாம் என்று ஈரான் எம்.பி.
-
மூடா வழக்கு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி
24 Sep 2024பெங்களூரு, நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
-
சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் குற்றவாளி உறுதி செய்தது நீதிமன்றம்
24 Sep 2024சிங்கப்பூர், சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன், தம் பதவிக் காலத்தில் பரிசுப்பொருட்களை பெற்றதற்காகவும், நீதிக்கு இடையூறு செய்தமைக்காகவும், அவரை குற்றவாள
-
மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி புகார்
24 Sep 2024சென்னை : தனது உடமைகளை மீட்டு கொடுக்குமாறு மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் ஜெயம் ரவி புகார் அளித்திருக்கிறார்.