எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதும் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் மூன்று மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பரிசுப்பொருள்கள்...
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, கனடா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் முன்பு பெரிய பெட்டி வைத்து, கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயத்துக்கு வருபவர்கள் அந்தப் பெட்டியில் பணம், பரிசுகள் போன்றவற்றை நன்கொடையாக செலுத்துவார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாளான டிசம்பர் 26 ஆம் தேதி அன்று அந்தப் பெட்டியைப் பிரித்து அதில் உள்ள பணம், பரிசுப்பொருள்களை வறுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஏழை-எளிய மக்களுக்கும் வழங்குவது வழக்கம். இவ்வாறு பெட்டியைத் திறக்கும் நாள்தான் அந்த நாடுகளில் ‘பாக்ஸிங் டே’ என்று அழைக்கப்படுகிறது.
பாக்ஸிங் டே கிரிக்கெட்...
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான, டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே கிரிக்கெட் என்று அழைக்கப்படும். ஆஸ்திரேலியாவில் 1950 ஆம் ஆண்டில் இருந்தே ஆண்டாண்டு காலமாக பாக்ஸிங் டே அன்று சர்வதேசப் போட்டிகள் வழக்கமாக நடத்தப்பட்டு வருகின்றன. நடக்கவிருக்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் ஒருபகுதியாக பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டி நடத்தப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக மெல்போர்னில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. பாக்ஸிங் டே கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா எந்த அணியுடன் விளையாடினாலும் அதற்கு ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பே தனி.
5.5 மடங்கு உயர்வு...
அந்தவகையில், 90,000 பேர் அமரக்கூடிய மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆண்டு நடைபெறும் பாக்ஸிங் டே கிரிக்கெட்டுக்கான டிக்கெட் விற்பனை மூன்று மடங்கு அதிகளவில் விற்கப்பட்டுள்ளன. கடந்த முறை இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடருடன் ஒப்பிடும் போது டிக்கெட் விற்பனை 5.5 மடங்கு உயர்ந்துள்ளது. 2018-2019 ஆண்டில் வந்த சுற்றுலாப்பயணிகளை (0.7 சதவீதத்துடன்) ஒப்பிடும்போது, பாக்சிங் டே டெஸ்டுக்கான தற்போதைய டிக்கெட் வாங்குபவர்களில் 3.9 சதவீதம் பேர், இந்திய சுற்றுலாப் பயணிகள் என்று புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
எதிர்பார்ப்பு...
இந்தியா தனது கடைசி 2 சுற்றுப்பயணங்களிலும் பார்டர்- கவாஸ்கர் கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது. இதற்கு முன் நடந்த இரண்டு தொடர்களிலும் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து கேப்டன்கள் விராட் கோலி மற்றும் அஜிங்க்யா ரஹானே தலைமையின்கீழ் இந்திய அணி வரலாறு படைத்தது. அதே போல நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கவிருக்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் பாட் கம்மின்ஸின் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியினர் கோப்பை வென்று மீண்டும் வரலாறு படைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
டெஸ்ட் போட்டி அட்டவணை:
1) முதல் டெஸ்ட்- பெர்த்- நவம்பர் 22-26.
2-வது டெஸ்ட்- அடிலெய்டு- டிசம்பர் 6-10.
3-வது டெஸ்ட்- பிரிஸ்பேன் - டிசம்பர் 14-18.
4-வது டெஸ்ட் - மெல்போர்ன் -டிசம்பர் 26-30.
5-வது டெஸ்ட் - சிட்னி - ஜனவரி 3-7.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்5 days 4 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 3 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 6 days ago |
-
மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் : ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தகவல்
24 Sep 2024ஈரோடு : தமிழகத்தில் மூடப்படவுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
-
மு.மேத்தா, பி.சுசிலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது : வரும் 30-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்
24 Sep 2024சென்னை : கருணாநிதியின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில், கவிஞர் மு.மேத்தா, பின்னணி பாடகி பி.சுசிலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை வரும் 30-ம் த
-
அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
24 Sep 2024சென்னை : உதயநிதிக்கு துணை முதல்வர் வழங்கப்படுவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது
-
மதுரை மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
24 Sep 2024மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்லூரி முதல்வர், பொறியாளர் அறிக்கை தா
-
உடல் உறுப்பு தானம் செய்ய முதல்வர் ஸ்டாலின் பதிவு : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
24 Sep 2024சென்னை : சென்னையில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்து உள்ளார் என்று அமைச்சர் மா.
-
வேலூர் மருத்துவமனையில் இருந்து மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி டிஸ்சார்ஜ்
24 Sep 2024வேலூர் : வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
-
பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து: இயக்குநர் மோகன் ஜி கைது
24 Sep 2024திருச்சி : பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி-யை திருச்சி போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
தி.மு.க. அரசை கண்டித்து சென்னையில் அ.தி.மு.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்
24 Sep 2024சென்னை : தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் புழக்கத்தையும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளையும் கட்டுப்படுத்தத் தவறிய
-
கொளத்தூர் தொகுதியில் மக்கள் நலத்திட்டங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
24 Sep 2024சென்னை : கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடம், புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் மற்றும் நீத்தார் நினைவு மண்டபம் ஆ
-
சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக நீதிபதி அல்லி நியமனம்
24 Sep 2024சென்னை, சென்னை ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளராக நீதிபதி அல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
லட்டு குறித்து கருத்து: பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் கார்த்தி
24 Sep 2024சென்னை, லட்டு குறித்து தெரிவித்த கருத்துக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி.
-
தமிழகத்தில் 13 மாதங்களில் 12 ரவுடிகள் சுட்டுக்கொலை
24 Sep 2024சென்னை, தமிழகத்தில் 13 மாதங்களில் 12 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
-
போப் ஆண்டவருக்கு உடல்நலக் குறைவு: பொதுமக்களுடனான சந்திப்பு ரத்து
24 Sep 2024வாடிகன் சிட்டி, உடல்நலக்குறைவு காரணமாக போப் ஆண்டவரின் திட்டமிடப்பட்ட பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக வாடிகன் சிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவி
-
பாலியல் வழக்கு: பிரபல மலையாள நடிகர் முகேஷ் கைதாகி ஜாமினில் விடுதலை
24 Sep 2024கொச்சி : நடிகை அளித்த பாலியல் குற்றச்சாட்டில் மலையாள நடிகரும், எம்.எல்.ஏ.வுமான முகேஷ் கைது செய்யப்பட்டார்.
-
ஸ்பேஸ் எக்ஸ் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலன் அனுப்ப திட்டம்: எலான் மஸ்க் தகவல்
24 Sep 2024நியூயார்க், அடுத்த இரண்டு ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்துக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஐந்து ஸ்டார்ஷிப்களை அனுப்பும் திட்டம் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
பாலியல் புகார்: பிரபல மலையாள நடிகர் சித்திக்கின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
24 Sep 2024திருவனந்தபுரம், பாலியல் புகாரில் சிக்கிய பிரபல மலையாள நடிகர் சித்திக் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
கான்பூர் சென்றது இந்திய அணி
24 Sep 2024இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
-
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிக்கை
24 Sep 2024பெங்களூரு, நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-09-2024.
24 Sep 2024 -
மராட்டிய சட்டசபை தேர்தல்: மூத்த தலைவர்கள் 13 பேரிடம் பொறுப்புகளை ஒப்படைத்த பா.ஜ.க.
24 Sep 2024மும்பை : மராட்டியத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பூபேந்திர யாதவ் உள்பட 13 மூத்த தலைவர்களிடம் பா.ஜ.க.
-
இலங்கையின் 16-வது பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு
24 Sep 2024கொழும்பு, இலங்கையின் 16-வது பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்று கொண்டார். அவருக்கு அதிபர் அனுரா திசநாயகே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
-
இஸ்ரேல் மீது 200 ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்
24 Sep 2024ஜெருசலேம், இஸ்ரேலின் ரமத் டேவிட் விமானப் படைத்தளம் , நாசரேத் நகரம், மஹிடோ விமானப் படைத்தளம், ஹைபா, அப்லா போன்ற நகரங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு 200-க்கும் மேற்பட்
-
முன்னாள் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்கு பேஜர் வெடிப்பு காரணமா? ஈரான் எம்.பி. சந்தேகம்
24 Sep 2024டெக்ரான், ஈரான் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்துக்கு பேஜர் வெடிப்பும் காரணமாக இருக்கலாம் என்று ஈரான் எம்.பி.
-
சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் குற்றவாளி உறுதி செய்தது நீதிமன்றம்
24 Sep 2024சிங்கப்பூர், சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன், தம் பதவிக் காலத்தில் பரிசுப்பொருட்களை பெற்றதற்காகவும், நீதிக்கு இடையூறு செய்தமைக்காகவும், அவரை குற்றவாள
-
முதல்வர் சித்தராமையா ராஜினாமா என்ற கேள்விக்கே இடமில்லை: டி.கே.சிவக்குமார் பதில்
24 Sep 2024பெங்களூரு, ஐகோர்ட் உத்தரவை அடுத்து முதல்வர் சித்தராமையா ராஜினாமா என்ற கேள்விக்கே இடமில்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.