எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார். அவர் இன்று பதவியேற்க உள்ளார்.
வாக்குப்பதிவு...
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. மொத்தம் 75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை பெற்றார். அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் பின்னடைவை சந்தித்தனர்.
கடும் நெருக்கடி....
கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் இலங்கை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. மக்களும் அவற்றை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழலில், பொருளாதார வளர்ச்சியே இலங்கையில் தீர்வு ஏற்பட வழிவகுக்கும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது அனுரா குமார திசநாயகே கூறினார்.
தொடர்ந்து முன்னிலை...
அவருக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து உள்ளது என வெளிப்படும் வகையில் தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. தொடர்ந்து அவர் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றார். இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார்.
2-வது இடத்திற்கு...
இதுபற்றி இலங்கை தேர்தல் ஆணையம் நேற்று முறைப்படி அறிவித்து உள்ளது. அதில், மார்க்சிஸ்டு தலைவரான அனுரா குமார திசநாயகே (வயது 55) வெற்றி பெற்றுள்ளார். அதிபர் ரணில் விக்ரமசிங்கே தோல்வியடைந்து உள்ளார் என தெரிவித்து உள்ளது. இந்த தேர்தலில், எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். ரணில் விக்ரமசிங்கே 3-வது இடத்திற்கு சென்றுள்ளார்.
அதிகாரப்பூர்வமாக...
முதல் சுற்றில் 56,34,915 (42.3 சதவீதம்) வாக்குகளுடன் திசநாயகே முன்னிலை பெற்றார். பிரேமதாசா 43,63,035 (32.76 சதவீதம்) வாக்குகளுடன் 2-வது இடம் பெற்றார். இந்நிலையில், 2-வது சுற்றுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்தது. இதில், திசநாயகே வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதனுடைய வலைதளத்தில் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்து உள்ளது. முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தி தலைவா் சஜித் பிரேமதாசவைவிட 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக கூடுதலாக வாக்குகளைப் பெற்று அநுரகுமார திசாநாயக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பதவியேற்பு...
இதையடுத்து, இன்று (திங்கள்கிழமை - செப். 23) எளிமையான முறையில் பதவியேற்பு நடைபெற உள்ளதாகவும், அதில் அநுரகுமார திசாநாயக இலங்கை அதிபராக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 days 6 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 1 day ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 4 days ago |
-
நெல்லை, தென்காசியில் நில அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தகவல் : தேசிய நில அதிர்வு மையம் விளக்கம்
22 Sep 2024நெல்லை : நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி பகுதிகளில் நில அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
-
தமிழ்நாடு அரசே மதுக்கடைகளை இழுத்து மூடு: மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட திருமாவளவன்
22 Sep 2024சென்னை : தமிழ்நாடு அரசே, மதுக்கடைகளை இழுத்து மூடு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
-
என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி சிடி மணி துப்பாக்கி முனையில் கைது
22 Sep 2024சென்னை : சென்னையை கலக்கிய, ஏ பிளஸ் ரவுடியான பிரபல ரவுடி சிடி மணி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2024.
22 Sep 2024 -
பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா மறைவு : நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
22 Sep 2024திருவனந்தபுரம் : மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய மாட்டோம் : மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்
22 Sep 2024நவ்ஷேரா : காஷ்மீரில் கல்வீசி தாக்கியவர்கள் மற்றும் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய மாட்டோம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பிரச்சாரத்தின் போது திட்டவட்டமாக தெரிவித்தார
-
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 297 பழங்கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா
22 Sep 2024வாஷிங்டன் : இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட 297 பழங்கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது.
-
டெலிகிராம் செயலிக்கு உக்ரைன் அரசு தடை
22 Sep 2024கீவ் : டெலிகிராம் செயலியை பயன்படுத்த உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது
-
சென்னையில் ஓட்டுநரில்லா முதல் மெட்ரோ ரெயிலின் உற்பத்தி நிறைவு
22 Sep 2024சென்னை : ஓட்டுனர் இல்லா முதல் மெட்ரோ ரெயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
-
திறமை, உழைப்புக்கு வாய்ப்பு பா.ஜ.க.வில் மட்டுமே கிடைக்கும் : நிர்மலா சீதாராமன் பேச்சு
22 Sep 2024சென்னை : திறமை உழைப்புக்கு பா.ஜ.க. போதுமான வாய்ப்பு வழங்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
புரட்டாசி மாத கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்
22 Sep 2024திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை விழா நேற்று கொண்டாடப்பட்டது.
-
திருச்சி - பாங்காக் இடையே நேரடி விமான சேவை துவக்கம்
22 Sep 2024திருச்சி : திருச்சி விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டிற்கு விமான சேவை மீண்டும் தொடங்கியது.
-
நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: ஈரானில் 30 தொழிலாளர்கள் பலி : மாயமான 24 பேரை தேடும் பணி தீவிரம்
22 Sep 2024டெக்ரான் : ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் கசிவு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 30 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயமுற்றனர்.
-
விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் : டி.என்.பி.எஸ்.சி. முடிவு
22 Sep 2024சென்னை : விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் கொண்டு வர டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.
-
ஆந்திர முதல்வருடன் திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் சந்திப்பு : பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு
22 Sep 2024ஐதராபாத் : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தேவஸ்தான நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்தனர்.
-
என்னை ஊழல்வாதியாக சித்தரிக்க பிரதமர் நரேந்திர மோடி சதி செய்கிறார் : கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
22 Sep 2024புதுடெல்லி : என்னை ஊழல்வாதியாக சித்தரிக்க பிரதமர் மோடி சதி செய்கிறார் என்று டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் : நெல்லையில் எல்.முருகன் பேட்டி
22 Sep 2024நெல்லை : இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
22 Sep 2024சென்னை : தமிழகத்தில் 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியா - ஜப்பானின் உறவுகள், உலகளாவிய வளத்திற்கு சிறந்தவை : பிரதமர் மோடி டுவிட்டரில் தகவல்
22 Sep 2024வில்மிங்டன் : இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான வலிமையான உறவுகள், உலகளாவிய வளத்திற்கு சிறந்தவையாக உள்ளன என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வ
-
இந்தியாவுடனான அமெரிக்க உறவு வலுவானதாக உள்ளது : அதிபர் ஜோ பைடன் கருத்து
22 Sep 2024வாஷிங்டன் : இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
-
தண்டவாளத்தில் கிடந்த கியாஸ் சிலிண்டர்: பெரும் விபத்து தவிர்ப்பு : உ.பி. போலீசார் தீவிர விசாரணை
22 Sep 2024பெரம்பூர் : உ.பி.யில் தண்டவாளத்தில் கியாஸ் சிலிண்டர் கிடந்ததை தொடர்ந்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
-
கான்பூரில் தொழிற்சாலையில் தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு
22 Sep 2024கான்பூர் : கான்பூரில் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விருப்பம்: கமலா ஹாரிஸ் தகவல்
22 Sep 2024வாஷிங்டன் : டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விரும்புகிறேன் என கமலா ஹாரிஸ் கூறினார். இந்த நிலையில் கமலா ஹாரிஸின் அழைப்பை டிரம்ப் நிராகரித்துள்ளார்.
-
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
22 Sep 2024தென்காசி : நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அருவிகளில் அவர்கள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
-
விவசாய நிலத்தில் காட்டு பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் பலி
22 Sep 2024திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் மூக்கனூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் காட்டு பன்றிகளுக்காக வைத்திருந்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் பலியான